Skip to main content

கனமழை எதிரொலி: பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

Published on 22/10/2019 | Edited on 22/10/2019

 

tamilnadu heavy rain salem, ramanathapuram, nilgiris, karaikal schools, colleges holiday announced



தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் கனமழை காரணமாக சேலம், ராமநாதபுரம், உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று (22/10/2019) பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளன. நீலகிரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என ஆட்சியர் அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு. இருப்பினும் சென்னையில் இன்று வழக்கம் போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று ஆட்சியர் கீதாலட்சுமி அறிவித்துள்ளார். 


 

சார்ந்த செய்திகள்