Published on 15/01/2021 | Edited on 15/01/2021

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திருவள்ளுவர் தினத்திற்குத் தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனது டிவிட்டர் பக்கத்தில், ‘முப்பாலில் முக்காலமும் உணர்த்திய தெய்வப்புலவர். உலகிற்கான பொதுமறையைத் தந்து தாய்த்தமிழின் அருமையை உலகிற்கு உணர்த்திய ஒப்பற்ற முதற்பாவலரான திருவள்ளுவர் பெருந்தகையின் தினத்தில் அவரை வணங்கி மகிழ்கிறேன்’ எனப் பதிவிட்டுள்ளார்.
மேலும் மாட்டுப்பொங்கல் வாழ்த்தினையும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள எடப்பாடி பழனிசாமி, ‘உழவனின் உற்ற நண்பனாய், நம் தாய்த்தமிழ் மக்களின் வாழ்வியலில் இரண்டற கலந்து தூய அன்பினை என்றும் பகிரும் கால்நடைகளுக்கான இந்த மாட்டுப்பொங்கல் திருநாளில் உழவு செழிக்கட்டும், உழவர் மகிழட்டும் என என் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.