
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக்காட்சி வாயிலாக திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதி, ஒட்டன்சத்திரம் நகராட்சியில் ரூ.21.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட காந்தி மார்க்கெட் வணிக வளாக கடைகள், ரூ.18.64 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அருள்மிகு குழந்தை வேலப்பர் திருக்கோயில் மலை கிரிவலப்பாதை மற்றும் ரூ.1.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட கீரனூர் பேரூராட்சி அலுவலக புதிய கட்டடம் ஆகியவற்றை திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் சரவணன் நாடாளுமன்ற உறுப்பினர் சச்சிதானந்தம் முன்னிலையில் ஒட்டன்சத்திரம் காந்தி மார்க்கெட் வணிக வளாகம் அமைந்துள்ள திடலில் நடை பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, புதிய கட்டடங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இந்த விழாவில், அமைச்சர் சக்க ரபாணி பேசும் போது, “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் பொறுப்பேற்றதிலிருந்து பல் வேறு திட்டங்களை அறிவித்து, கிராமப்புறத்தில் வாழும் கடைக் கோடி மக்களுக்கும் சென்றடைகின்ற வகையில் சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். பெண்கள் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தற்போது வரை சுமார் 1.16 கோடி மகளிர் பயனடைந்து வருகின்றனர். இத்திட்டத்தில் தகுதியுள்ள நபர்கள் விடுபட்டிருந்தால் அவர்களுக்கும் இத்திட்டத்தின் பய ன்கள் கிடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி பெறப்படும் விண்ணப்பங்களில் தகுதியான நபர்களுக்கு 15 நாட்களில் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் இதுவரை 18.00 இலட்சம் புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டை குடிசைகள் இல்லாத மாநிலமாக உருவாக்க கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தை செயல்படுத்தி வருகிறார். தமிழ்நாட்டில் 8 லட்சம் வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டு, வீடுகள் கட்டுவதற்கு ஆணை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கலைஞர் கனவு இல்லம் ரூ.3.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்தில் சுமார் 10,000 வீடுகள் கட்ட அனுமதி வழங்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதே போல், ஊரக வீடுகள் பழுதுபார்க்கும் திட்டத்தில் 2.50 இலட்சம் வீடுகளை சீரமைக்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஒட்டன்சத்திரம் கள்ளிமந்தையத்தில் உயர்கல்வித்துறை சார்பில் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லுாரிக்கு ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. அம்பிளிக் கையில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் பெண்கள் மட்டும் படிக்கும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரி தொடங்கப்பட்டுள்ளது. இந்தக்கல் லுாரிக்கு ஒட்டன்சத்திரத்தில் ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. விருப்பாட்சியில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்திற்கு ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. படித்து முடித்த மாணவ, மாணவிகள் போட்டித் தேர்வில் வெற்றி பெற காளாஞ்சிப்பட்டியில் கலைஞர் ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையம் குளிர்சாதன வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தில் பயிற்சி பெற்ற மாணவிர்கள் பல்வேறு போட்டி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளார்கள். எனவே, இப்பயிற்சி மையத்தினை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக்கெள்ள வேண்டும்.
ஒட்டன் சத்திரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்தப் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்தவுடன் நகராட்சி பகுதிகளில் ஒரு நபருக்கு 135 லிட்டர் தண்ணீர் தினமும் வழங்கப்படும். அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு வழங்கப்படும். நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டத்தில், ஒட்டன்சத்திரத்தில் 480 வீடுகளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.65.00 கோடி மதிப்பீட்டிலும், கீரனுாரில் 432 வீடுக ளுடன் அடுக்குமாடி குடியிருப்பு ரூ.60.00 கோடி மதிப்பீட்டிலும் கட்டப்பட்டு வருகின்றன. ஒட்டன்சத்திரம் நகராட்சியை துாய்மையான நகராட்சியாக மாற்றும் வகையில் ரூ.9.00 கோடி மதிப்பீட்டில் குப்பைக் கிடங்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குப்பைகளை சேகரிக்க வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. சாக்கடை கழிவுநீர், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கலப்பதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புக ளை தவிர்க்கும் வகையில் சாக்கடை கழிவுநீர் சுத்திகரிக் கும் திட்டம் ரூ.5.52 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது. ஒட்டன்சத்திரம் நகராட்சி பகுதிகளில் ரூ.30.00 கோடி மதிப் பீட்டில் சாலைகள் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கழிவுநீர் சாக் கடைகள் ஏற்கனவே ரூ.13.00 கோடி மதிப் பீட்டில் சீரமைக்கப் பட்டுள்ளன. மேலும், ரூ.23.00 கோடி மதிப்பீ ட்டில் சாக்கடைகள் சீரமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனைக்கு ரூ.25.00 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இந்தப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு பொது மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும். ஒட்டன்சத்திர ம் நகராட்சி பகுதியில் 440 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன, முதலமைச்சர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் சாலைகள் மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஊராட்சி ஒன்றிய சாலைகள் நெடுஞ்சாலைத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டு சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்குத் தேவையான, உண்ண உணவு, இருக்க இடம், உடுக்க உடை, குடிநீர், சுகாதாரம், கல்வி, சாலை வசதி உள் ளிட்ட அடிப்படை வசதிகள் செயல்படு த்தப்பட்டு வருகிறது.
பொதுமக்கள், விவசாயிகள், மாணவ, மாணவிகள் என அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் அவர்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்பு மற்றும் நம்பிக்கையை பூர்த்தி செய்யும் விதமாக எல்லோருக்கும் எல்லாம் வகையில் எண்ணற்ற திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி பொற்கால ஆட்சி நடத்தி வரும் முதலமைச்சரின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக என்றென்றும் ஆதரவுடன் இருக்க வேண்டும் என்று கூறினார்” என்று கூறினார்