Skip to main content

அப்போலோவில் அறுவை சிகிச்சையின் போதே ஐடி பெண் ஊழியருக்கு பாலியல் அத்துமீறல்... லேப் டெச்னீசியன் கைது!!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

பெங்களூரில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த பெண் ஊழியர் ஒருவர் கால் மூட்டில் ஏற்பட்ட காயத்திற்கு அறுவை சிகிச்சை செய்துகொள்ள இணையதளத்தில் சிறந்த மருத்துவமனை குறித்து தேடியுள்ளார். அப்போது சென்னை அப்போலோ மருத்துவமனை சிறப்பாக இருப்பதாக இணையத்தில் இருந்த தகவலின் அடிப்படையில் அவர் பெங்களூரில் இருந்து சென்னை பெருங்குடி அப்போலோவில் கடந்த 4ம் தேதி சிகிச்சைக்காக சேர்ந்தார்.

 

 Sexual abuse of the IT female employee during the operation in Apollo... Lab technician arrested!

 

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என அறிவுறுத்தி உள்ளனர். அவர்களின் அறிவுறுத்தலின்படி கடந்த ஆறாம் தேதி அந்தப் பெண்ணுக்கு இடுப்புக்குக் கீழ் உணர்விழக்கச் செய்யும் மருந்து செலுத்தப்பட்டு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டது. அப்பொழுது அவருக்கு செயற்கை சுவாச கருவி பொருத்தி அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அறுவை சிகிச்சையை அந்த பெண் பார்க்கக் கூடாது என்பதற்காக இடுப்புக்கு மேல் குறுக்காக திரைசீலை போட்டு வைத்திருந்தனர். ஒருபக்கம் மருத்துவர்கள் அந்த பெண்ணுக்கு காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்க மறுபக்கம் அந்த பெண்ணின் தலைப் பக்கத்தில் நின்றிருந்த லேப் டெக்னீசியன் டெல்லி பாபு என்பவர் அந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளான்.

 

 Sexual abuse of the IT female employee during the operation in Apollo... Lab technician arrested!

 

முகத்தில் செயற்கை சுவாசக் கருவி மாற்றப்பட்டு இருந்ததால் அந்த பெண்ணால் சத்தமிட இயலவில்லை என்று கூறப்படுகிறது. அறுவை சிகிச்சை முடிந்து செயற்கை சுவாச கருவி அகற்றப்பட்டதும் அங்கிருந்த மருத்துவர்களிடம் லேப் டெக்னீசியன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டியுள்ளார்.  அதற்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்த மருத்துவர்கள் அதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. அப்போலோ நிர்வாகத்தில் இது தொடர்பாக அந்தப் பெண் புகார் தெரிவித்தபோதும் நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைத்தனர். 

 

Sexual abuse of the IT female employee during the operation in Apollo... Lab technician arrested!

 

இதனால் ஆன்லைன் மூலமாக சென்னை காவல் ஆணையருக்கு புகார் அளித்திருந்தார் அந்தப் பெண். காவல்துறையினர் விசாரணைக்கு சென்றபோது அந்தப் பெண் மனநிலை பாதிப்புக்கு சிகிச்சைக்கு வந்தவர் எனக்கூறி போலீசாரை திருப்பி அனுப்பியது அப்போலோ நிர்வாகம். ஆனால் அந்தப் பெண் காவல்துறையினர் விசாரித்து நடவடிக்கை எடுக்கும்வரை மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆக மாட்டேன் என்று போராட்டம் நடத்தினார். அதனால் தங்களுக்கு வேண்டப்பட்ட இரு போக்குவரத்து போலீசாரை கொண்டு விசாரிப்பது போல நாடகத்தை நடத்தியது அப்போலோ நிர்வாகம். இதுகுறித்து மீண்டும் காவல் ஆணையருக்கு அந்தப் பெண் ஆன்லைனில் புகார் அளித்ததால் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து விசாரிக்க சென்ற துரைப்பாக்கம் காவல் உதவி ஆய்வாளரிடம் அந்த பெண்ணுக்கு மனநிலை சரியில்லை அதனால்தான் சிகிச்சை அளித்து வருகிறோம் என்ற அடிப்படையில் பேசி சமாளித்து உள்ளனர்.

 

 

அதனை ஏற்காத காவல் உதவி ஆய்வாளர் அந்த பெண்ணின் மருத்துவ அறிக்கையை வாங்கி பார்த்தார். அப்போது அந்த அறிக்கையில் அந்த பெண் கால் மூட்டு அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் அந்த பெண்ணை நேரடியாக சந்தித்து விசாரித்தபோது லேப் டெக்னீசியன் தன்னிடம் அருவெறுக்கத்தக்க வகையில் நடந்ததாக கதறியுள்ளார். இதுதொடர்பாக விசாரணை அறிக்கை காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவரது உத்தரவின் பேரில் உடனடியாக மருத்துவமனை ஊழியர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

 

இதையடுத்து 6 நாட்கள் கடந்த நிலையில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த மருத்துவமனை ஊழியர் டெல்லிபாபுவை மருத்துவமனையில் வைத்து காவல்துறையினர் கைது செய்தனர். அந்த நபரை கைது செய்து சிறையில் அடைக்கும் வரை மருத்துவமனையை விட்டு செல்வதில்லை என்று அந்த ஐடி பெண் நடத்திய போராட்டத்திற்கு வெற்றி கிடைத்துள்ளது. 

 

பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை ஒருபுறம் நடக்க மறுபுறம் பாலியல் வன்கொடுமை நேர்ந்திருப்பது பெரும் அதிர்ச்சியையும்,சர்ச்சையையும் கிளப்பியுள்ளது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கேளிக்கை விடுதி விபத்து; மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி இருந்தது.

இது விபத்து குறித்து சென்னை மாநகர கூடுதல் காவல் ஆணையர் பிரேமானந்த் சின்ஹா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Metro Rail Admin Explanation on Alwarpet hotel incident

இந்நிலையில் இந்த விபத்து குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் விளக்கமளித்துள்ளது. இது குறித்து எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியாருக்கு சொந்தமான பொழுதுபோக்கு கிளப்பில் உள்ள மெஸ்ஸானைன் தளம் இடிந்து விழுந்த சம்பவம் தொடர்பாக விளக்கமிக்க வேண்டிய தேவை உள்ளது. இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் தற்போது நடந்து கொண்டிருக்கும் மெட்ரோ ரயில் பணிகளால் அல்ல என்பதை  சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் (CMRL) தெளிவுபடுத்த விரும்புகிறது.

ஏனெனில் மெட்ரோ ரயில் பணியானது, விபத்து நிகழ்ந்த கட்டிடத்திலிருந்து கிட்டத்தட்ட 240 அடி தொலைவில் உள்ளது. மேலும் விபத்து நிகழ்ந்த கட்டடத்தில் அதிர்வுகள் எதுவும் காணப்படவில்லை. சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மீட்புப் பணிகளில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி அதிகாரிகளுக்கு உதவி செய்ய உள்ளதாகவும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவிக்க விரும்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விபத்து; 3 பேர் உயிரிழந்த சோகம்!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Chennai Alwarpet hotel top roof incident

சென்னை ஆழ்வார்பேட்டையில் தனியாருக்குச் சொந்தமான கேளிக்கை விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் முதல் தளத்தின் மேற்கூரை திடீரெனெ யாரும் எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்துள்ளது. அப்போது அங்கு இருந்த 3 பேர் உயிரிழந்தனர். திண்டுக்கல்லைச் சேர்ந்த சைக்ளோன் ராஜ் (வயது 45). மணிப்பூரைச் சேர்ந்த மேக்ஸ் (வயது 21) மற்றும் லாலி (வயது 22) ஆகியோர் உயிரிழந்ததாக போலீஸ் தரப்பில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உயிரிழந்த 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைகளுக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுளளன.

இந்த கட்டட விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த 20 பேர் கொண்ட தேசிய பேரிடர் மீட்பு படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து அபிராமபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மெட்ரோ பணியின்போது ஏற்பட்ட அதிர்வின் காரணமாகக் இந்த கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது விபத்து குறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “விபத்து நடந்தபோது உள்ளே இருந்தவர்களிடம் விபத்து குறித்து விசாரணை நடத்திய போது, விபத்து நடந்த இடத்தின் உள்ளே 3 பேர் மாட்டிக்கொண்டுள்ளதாக தகவல் வந்தது. விடுதியின் முதல் தளத்தின் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார். தனியார் கேளிக்கை விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் மக்கள் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.