Skip to main content

புயல் நிவாரண அரிசி மூட்டைகளை புதைத்து வைத்த அதிகாரிகள்... வெளியே கொண்டு வந்த மழை... வேதனையில் மக்கள்!

Published on 28/11/2019 | Edited on 28/11/2019

கஜா புயல்.. கடந்த ஆண்டு நவம்பர் 16 ந் தேதி அதிகாலை புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்ட மக்களை நிலைகுலைய செய்தது. விடியும் போது விவசாயிகள், மீனவர்கள், வணிகர்கள் என அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் காணாமல் போய் இருந்தது.


விளைநிலங்களில் ஓங்கி உயர்ந்து நின்ற மரங்களை தரையில் கிடந்தது. வீட்டில் இருந்த உடமைகளும் இல்லாமல் தவித்தனர். மக்களுக்கு உடனடியாக உள்ளூர் இளைஞர்களும், அடுத்தடுத்த நாட்களில் தன்னார்வலர்களும் உதவிக்கரம் நீட்டினார்கள். ஒரு வேலை சோற்றுக்காக தட்டேந்தி நின்ற குழந்தைகளை காணும் போது கண்ணீர் வந்தது.
 

Officers who buried the storm relief rice bundles ...  The rain that brought out ... people in agony!


அடுத்தடுத்த நாட்களில் தன்னார்வலர்கள் கிராமங்களுக்குள் சென்று நிவாரணம் கொடுத்தனர். அரிசி, தண்ணீர், உடை கொடுத்தனர். உடனடியாக இவற்றை செய்ய வேண்டிய அரசாங்கம் ஒரு வாரத்திற்கு பிறகு தான் பார்வையிடவே வந்தது. அதன் பிறகு அரிசி கொடுத்தார்கள். ஒரு மாதம் கழிந்த பிறகு நிவாரணப் பெட்டி கொடுத்தார்கள். அதிலும் பாதிப் பேருக்கு இல்லை. இதனால் பல பிரச்சனைகள் வந்தது.


இந்த நிலையில் தான் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகில உள்ள அரசர்குளம் கீழ்பாதியில் உள்ள கிராம சேவை மையத்தில் அரிசி உள்ளிட்ட அரசு நிவாரணப் பொருட்களை இருப்பு வைத்து கிராம மக்களுக்கு கொடுப்பதாக சொன்னார்கள். அந்த ஊரிலும் பலருக்கு கிடைக்கவில்லை. கேட்ட போது எல்லாம் முடிந்துவிட்டது. வரும் போது தருகிறோம் என்று அதிகாரிகள் சொல்லி மக்களை திருப்பி அனுப்பினார்கள்.

Officers who buried the storm relief rice bundles ...  The rain that brought out ... people in agony!


இந்த நிலையில் தான் இன்று (28.11.2019) வியாழக்கிழமை அரசர்குளம் கிராம சேவை மையத்திற்கு பின்பக்கம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு மண் மேடு கட்டிய இடம் மழை தண்ணீரில் கரைந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. கிராம இளைஞர்கள் சென்று பார்த்த போது அதிர்ந்தனர். காரணம் அங்கே புதைக்கப்பட்டிருந்தது 30- க்கும் மேற்பட்ட நிவாரண அரிசி மூட்டைகள். அன்று கேட்கும் போது இல்லை என்று சொன்னார்கள். இப்ப அந்த அரிசி மூட்டைகளை கெட வைத்து யாருக்கும் தெரியாமல் இடத்தில் புதைத்து வைத்திருக்கிறார்கள். மழை பெய்ததால் மண் கரைந்து அரிசி துர்நாற்றம் வீசத் தொடங்கிவிட்டது என்ற இளைஞர்கள். இப்படி உணவுப் பொருளை பதுக்கி வைத்து கெட்ட பிறகு மண்ணுக்குள் புதைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். 
 

புதைத்து வைத்த அரிசி மூட்டைகளை இளைஞர்கள் வெளிக் கொண்டு வந்துவிட்டார்கள் என்ற தகவல் அறிந்து அதிகாரிகள் இளைஞர்களை சமாதானம் செய்ய புறப்பட்டுள்ளனர். அதற்குள் யாரும் படம் எடுக்க வேண்டாம், வீடியோ எடுக்க வேண்டாம் என்று தடுக்கவும் சிலர் தயாராகவே உள்ளனர். 

Officers who buried the storm relief rice bundles ...  The rain that brought out ... people in agony!


இதே போல நாகுடி கிராம சேவை மையத்திலும் புயல் நிவாரணப் பொருட்கள் ஒரு வருடமாக பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் அப்பகுதி பொதுமக்கள் கூறுகின்றனர். நாகுடி கிராம சேவை மையத்தை மக்களோடு சென்று திறந்தால் தான் உண்மை என்ன என்பது தெரியவரும். இல்லை என்றால் இரவோடு இரவாக அதையும் மாற்றி செல்ல வாய்ப்பு உள்ளது என்கிறார்கள் அப்பகுதி மக்கள். புயல் அடிச்சு ஒரு வருடம் முடிந்துவிட்டது. ஆனால் அதற்கு வந்த அரிசியை இப்படி மக்களை ஏமாற்றி மண்ணில் புதைத்து வைத்திருப்பது வேதனையானது. அதிகாரிகள் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்களோ. 



 

சார்ந்த செய்திகள்

Next Story

மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் முக்கிய உத்தரவு!

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
District Collectors Chief Minister M.K. Stalin's main order

நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024 ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து தமிழக அரசுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.

இதனையடுத்து 2024 ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாகப் பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின் கீழ் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி, 7 ஆயிரத்து 40 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும் எனத் தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Next Story

'விண்ணை முட்டும் அரிசி விலை'-ராமதாஸ் கண்டனம்

Published on 02/02/2024 | Edited on 02/02/2024
'Skyrocketing rice prices' - Ramadoss condemned

'விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை தேவை' என பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'தமிழ்நாட்டில் சாப்பாட்டுக்கான சன்னரக அரிசி விலை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் கிலோவுக்கு ரூ. 6 வரை உயர்ந்திருக்கிறது. தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்தியாவில் நெல்லுக்கு கடுமையான தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கும் நிலையில், அரிசி விலை கிலோவுக்கு மேலும் ரூ.12 வரை உயர்வதற்கு வாய்ப்பு இருப்பதாக வணிகர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். ஆனால், விண்ணை முட்டும் அரிசி விலையை கட்டுப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழ்நாட்டில் அரிசி விலை வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் அதிகரிக்கும். சம்பா/தாளடி அறுவடைப் பருவமான ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை பெருமளவில் குறையும். ஆனால், வழக்கத்திற்கு மாறாக, இப்போது ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் அரிசி விலை அதிகரித்து உள்ளது. 26 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை ரூ.1450 லிருந்து ரூ1600 ஆகவும், 62 கிலோ எடை கொண்ட அரிசி மூட்டையின் விலை 1350 ரூபாயிலிருந்து ரூ.1720 ஆக அதிகரித்து உள்ளது. இதனால் சில்லறை விற்பனையில் கிலோவுக்கு குறைந்தபட்சம் 6 ரூபாயிலிருந்து 8 ரூபாய்  வரை அரிசி விலை அதிகரித்திருக்கிறது. இந்த விலை உயர்வு இன்னும் தொடரும் என்று தெரிகிறது.

மிக்ஜம் புயல் காலத்தில் பெய்த மழையால் காவிரி பாசன மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் நெற்பயிர்கள் சேதமடைந்தது, காவிரி பாசன மாவட்டங்களில் போதிய அளவு தண்ணீர் கிடைக்காததால்  2 லட்சம் ஏக்கரில் குறுவை நெற்பயிர்கள் முழுமையாகவும், ஒன்றரை லட்சம் ஏக்கரில் பகுதியாகவும்  கருகியதால் விளைச்சல் குறைந்தது ஆகியவை தான் முதன்மைக் காரணங்களாக கூறப்படுகின்றன.

தென்னிந்தியாவில் அதிக அளவில் நெல் விளையும் மாநிலங்களான ஆந்திரத்திலும், கர்நாடகத்திலும் கூட போதிய அளவில் நெல் விளைச்சல் இல்லை என்று கூறப்படுகிறது. அதனால், அம்மாநிலங்களைச் சேர்ந்த வணிகர்கள் தமிழ்நாட்டுக்கு வந்து ஒரு குவிண்டால் சன்ன ரக நெல்லை ரூ.3,000 வரை விலை கொடுத்து வாங்கிச் செல்கின்றனர். இதுவும் அரிசி விலை உயர்வுக்கு காரணம். இவை தவிர  அரிசி ஆலைகளுக்கான மின்சாரக் கட்டணம் உயர்த்தப்பட்டது மூன்றாவது காரணமாக கூறப்படுகிறது.

நெல் மூட்டைகளின் விலை கணிசமாக அதிகரித்து வருவதால், அடுத்த சில நாட்களில் அரிசியின்  விலை கிலோவுக்கு ரூ.12 வரை அதிகரிக்கக்கூடும் என்றும், ஒரு கிலோ பொன்னி, பாபட்லா ரக அரிசியின் விலை ரூ.75 என்ற உச்சத்தை அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இந்த வகை அரிசி கிலோ ரூ.48 முதல் ரூ.50க்கு தான் விற்கப்பட்டது. இவற்றின் விலை 50% வரை அதிகரித்து 75 ரூபாயை எட்டும் என்பது நியாயப்படுத்த முடியாததாகும்.

ஒருபுறம் அரிசி விலை உயர்ந்தால் இன்னொருபுறம் பருப்பு விலைகளும், பிற மளிகை சாமான்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்திருக்கின்றன. அதனால், தமிழ்நாட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயரும் போது, அதைக் கட்டுப்படுத்த வேண்டியது தமிழக அரசின் கடமை. இதற்காகத் தான் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சரின் தலைமையில் விலைக் கண்காணிப்புக் குழு செயல்பட்டு வருகிறது. சென்னை உட்பட தமிழ்நாடு முழுவதும் அரிசி விலை அதிகரித்திருப்பது இந்தக் குழுவுக்கு தெரியுமா? என்பது கூட தெரியவில்லை. அரிசி விலையை கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு  இதுவரை தும்பைக்கூட கிள்ளிப்போடவில்லை. மக்கள் மீது அரசுக்கு அக்கறை இல்லாததையே இது காட்டுகிறது.

அரிசி விலை உயர்வுக்கான காரணம் அதன் பற்றாக்குறை தான் என்பது தெளிவாகத் தெரியும் நிலையில், அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். அரிசி அதிகமாக விளையும் ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தமிழக சந்தைக்கு அரிசியை கொண்டு வருவதன் மூலம் விலையை குறைக்கச் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை அரசு ஆராய வேண்டும். இந்தியாவின் எந்த மாநிலத்திலும் அரிசி விலை குறைவாக இல்லை என்றால், சன்னரக அரிசியை நியாய விலைக்கடைகள் மூலம் மானிய விலையில் விற்க  அரசு முன்வர வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.