Skip to main content

திருச்சி சிவாஜி சிலை இனி திறக்க வாய்ப்பே இல்லையா? ஆதரவும் எதிர்ப்பும்!!

Published on 10/02/2019 | Edited on 10/02/2019

திருச்சி அருகே நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை உடனடியாகத் திறக்க வலியுறுத்தி சிவாஜி ரசிகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலக்கரை ரவுண்டானாவில் சிவாஜி கணேசன் சிலை அமைத்து 8 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. சிலையை திறக்க வலியுறுத்தி ரசிகர்கள் பல்வேறு வகையில் முயன்றும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதையடுத்து சிலையை உடனே திறக்க வேண்டுமென வலியுறுத்தி சிந்தாமணி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

 

 Is not the Trichy Shiva statue open anymore? Support and resistance !!

 

திருச்சி பாலக்கரை பகுதி சிவாஜி மிகவும் முக்கியமான இடம், சிவாஜி நண்பர்கள், அவர் வீடு, சிவாஜி திரைப்படம் எப்போதும் ஓடும் பிரபாத் திரையரங்கு என்று சிவாஜிக்கு மிகவும் நெருக்கமான பகுதியில் சிலை அமைக்க வேண்டும் என்று அவர் ரசிகர்கள் எல்லாம் இணைந்து பாலக்கரை ரவுண்டானாவில் நடிகர் சிவாஜி கணேஷனின் சிலை அமைக்கபட்டது. சிவாஜி கணேஷனின் ரசிகர்கள் சார்பில் இந்த சிலை அமைக்கப்பட்டு 8 ஆண்டுகள் ஆகியும் திறக்கப்படாமல் உள்ளது. 

 

 

வெகு ஆண்டுகள் திறக்கப்படாமல் இருப்பது கண்டு ஆத்திரம் அடைந்த சிவாஜி ரசிகர் அடிக்கடி நள்ளிரவில் தீடீர் என சிவாஜியை மூடியிருந்த துணைியை ஆகற்றுவதும், பாலக்கரை போலிஸ் அதை மூடுவதும் தொடர் வேலையாக இருந்து வந்திருக்கிறது. 

 

statue

 

இந்த நிலையில் சிவாஜி சிலையை திறக்க வேண்டும் சிவாஜி ரசிகர்கள் கையெழுத்து வேட்டை எல்லாம் நடத்தினார்கள். ஆனாலும் துணி சுற்றப்பட்ட நிலையிலேயே இருக்கும் இந்த சிலையை, திறக்க கோரி அவரது ரசிகர்கள் பல்வேறு இடங்களில் மனு கொடுத்தும், ஏனோ திறக்கப்படாமலேயே உள்ளது. எனவே இந்த சிலையை உடனடியாக திறக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தி இன்று திருச்சி சிந்தாமணி பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

 

தமிழக காங்கிரஸ் கலைப்பிரிவு மாநில தலைவர் சந்திரசேகர் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான சிவாஜி ரசிகர்கள் மற்றும் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசு, சிவாஜி சிலையை திறக்க வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்திற்கான ஏற்பாடுகளை சிவாஜி சமூக நலப்பேரவை மாநில துணை தலைவர் சிவாஜி சண்முகம் செய்திருந்தார்.

 

இந்த நிலையில் இது குறித்து திருச்சி மாவட்ட உயர் அதிகாரி ஒருவரிடம் பேசி போது… சிவாஜி சிலை திறப்பு அந்த பகுதி முஸ்லீம் மக்களுக்கும் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து இடையூராக இருக்கும் என எதிர்ப்பு தெரிவித்தால் தான் திறக்கப்படாமல் இருக்கிறது என்றார். 

 

statue

 

இது குறித்து மனிதநேய ஜனநாயக கட்சியின் பொறுப்பாளர் இப்ராஹீம்ஷா விடம் பேசிய போது.. அவர் சார்.. இது திருச்சி மாநகரின் மிக முக்கியமான இடம். இந்த இடத்தில் எப்போதும் ஜன நெருக்கடி அதிகமாக இருக்கும். அதுவும் இல்லாம் முஸ்லீம் மசூதி இருக்கிற பகுதியில் இந்த இடத்தில் சிலை திறப்பது தவறு என்று நாங்கள் எதிர்ப்பு தெரிவித்து அரசுக்கு சொல்லியிருக்கிறோம் என்றார். 

 

அந்த பகுதியில் சுமுகமான தீர்வு ஏற்படுமா...?  சிவாஜி சிலை இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திறப்பதற்கு வாய்ப்பு இல்லை என்பது தான் தற்போதைய செய்தி. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'கட்டுனா அத்தப்  பொண்ணத்தான் காட்டுவேன்'- தாயைக் கொன்ற மகன்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
nn

மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள தாய் அறிவுறுத்திய நிலையில் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என அடம் பிடித்த மகன், தாயையே கொன்ற சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்திருக்கிறது.

திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை வாசன் சிட்டியில் வசித்து வந்தவர்கள் லிங்கம், கொடிமலர் தம்பதி, இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் மகன் ராஜகுமாரனுக்கு (28) திருமணம் செய்து வைக்க பெற்றோர்கள் முடிவு செய்தனர். ஆனால் நீண்ட நாட்களாகவே ராஜகுமாரன் அத்தைப் பெண்ணை திருமணம் செய்து வையுங்கள் என வீட்டில் உள்ளோரிடம் கேட்டுள்ளார். ராஜகுமாரனின் அத்தை வீட்டு தரப்போ 'எங்கள் பெண்ணை உங்களுக்கு கொடுக்க முடியாது' எனத் தெரிவித்து வந்துள்ளனர். இதனால் மாமன் மகளைத் திருமணம் செய்து கொள்ள ராஜகுமாரனின் பெற்றோர்கள் அவரிடம் தெரிவித்துள்ளனர்.

கட்டினால் அத்தை மகளைத்தான் கட்டுவேன் என வைராக்கியமாக இருந்த ராஜகுமாரன் விரக்தியில் தற்கொலை முயற்சி எடுத்துள்ளார். உடனடியாக வீட்டில் இருந்தவர்கள் அவரை மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காப்பாற்றினர். ஆனால் தொடர்ந்து மறுபடியும் அத்தை மகளைத்தான் திருமணம் செய்து கொள்வேன் என ராஜகுமாரன் கேட்டு வந்துள்ளார். நாளடைவில் இது பெற்றோருக்கும் ராஜகுமாரனுக்கும் இடையே தகராறு ஏற்படும் அளவிற்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ராஜகுமாரனின் தாய் கொடிமலர் கழுத்தில் கத்தியால் குத்தப்பட்ட நிலையில் கிடந்துள்ளார் .வெளியில் சென்றிருந்த தந்தை லிங்கம் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சிடைந்து, அவரை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளார். உடனே மகன் ராஜகுமாரனும் வந்துள்ளார். தொடர்ந்து சிகிச்சையில் இருந்து கொடிமலர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனைக்கு பிறகு, இது தனக்கு தானே குத்திக்கொள்ளும் அளவிற்கான காயம் அல்ல, யாரோ ஒருவர் கொலை முயற்சியில் கத்தியால் குத்தியுள்ளனர். இவ்வளவு ஆழமாக தனக்குத் தானே குத்திக் கொள்ள முடியாது என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்த பொது, ராஜகுமாரன் அந்தக் கொலையை செய்தது தெரியவந்தது.

இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், அத்தை மகளை தனக்கு கட்டி வைக்க ஏற்பாடு செய்யாததால் ஆத்திரமடைந்த ராஜகுமாரன் சண்டையிட்டுள்ளார். தாய் கொடிமலர் மாமன் மகளை திருமணம் செய்து கொள்ள கூறியதால் தாயையே கத்தியால் குத்தி ராஜகுமாரன் கொலை செய்தது உறுதியானது. பின்னர் கைது செய்யப்பட்டுள்ள ராஜகுமாரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Next Story

தமிழக அரசு சார்பில் தொல்காப்பியர் உருவச் சிலைக்கு மலர் வணக்கம் நிகழ்ச்சி!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Flower salutation program for Tolkappiyar statue

தொல்காப்பியம் காலப்பழைமையும் கருத்துச் செழுமையும் கொண்ட ஒரு கருவூலமாகும். பழைமையான நூல் இலக்கணப் பனுவலாக தமிழ்மொழிக்கு வாய்த்திருப்பது பெரும் பேறாகும். தொல்காப்பியத்துக்கு முன்னரே இலக்கிய இலக்கண நூல்கள் பலவாக இருந்தன. முன்பு நூல் கண்டு உரைப்பட எண்ணி புலன் தொகுத்தார் என்றே பாயிரம் சொல்கிறது. எழுத்து, சொல், பொருள் என அமைத்துக்கொண்டு ஒன்பது இயல்கள் என்ற ஒழுங்கினதாய் இருபத்தேழு இயல்களாக, 1610 நூற்பாக்கள் கொண்டு தொல்காப்பியத்தைத் தொல்காப்பியர் படைத்தார். தொல்காப்பியம் முழுமையும் முதற்கண் 1891- இல் பதிப்பித்த பெருமை யாழ்ப்பாணம் சி.வை. தாமோதரம் பிள்ளையைச் சாரும்.

தொல்காப்பியத்துக்குப் பின்னர் இருபதுக்கு மேற்பட்ட இலக்கண நூல்கள் பிறந்தன. தொல்காப்பியம் வழங்கிய தொல்காப்பியரே தமிழுக்கு ஆதி பகவன் என்று சொல்வது மிகையாகாது. ஒப்பில்லாத முயற்சியாலும், தமிழ் வளர்ச்சித் துறையின் பெருந்துணையாலும் 7 அடி உயர பீடத்தில் அமைக்கப்பட்டுள்ள வெண்கலச்சிலையால் தொல்காப்பியரின் பெருமை ஒல்காப் புகழ் பெறுகிறது.

இந்நிகழ்ச்சி சித்திரை முழுமதி நாளான இன்று (23.04.2024) காலை 10.00 மணிக்கு சென்னை மெரினா எதிர்புறம் சென்னைப் பல்கலைக்கழக இணைப்பு கட்டட வளாகத்தில் (திருவள்ளுவர் சிலை எதிர்புறம்) அமைந்துள்ள தொல்காப்பியரின் திருவுருவச் சிலைக்கு அரசு செயலாளர், தமிழறிஞர்கள். பொதுமக்கள், எழுத்தாளர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் ஆகியோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டுச் சிறப்பிக்க உள்ளனர் என அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்ட்டுள்ளது.