Skip to main content

நாசா விண்கலத்தில் கிராமத்து மாணவர்களின் பெயர்கள்..!

Published on 07/10/2019 | Edited on 07/10/2019

செவ்வாய் கிரக ஆய்விற்கு அனுப்பப்படும் விண்கலமான ரோவரில் தங்களது பெயர்களை பொறிக்க பதிவு செய்துள்ளனர் கிராமத்து மாணவர்கள் இருவர்.

 

  The names of the students in the NASA spacecraft..!

 

ராமநாதபுரம் மாவட்டம் உப்பூர் அருகே கூத்தன்வயல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன்கள் நிலநவசிகன் மற்றும் திகர்பூவன். ஆர் எஸ் மங்கலம் தாலுகாவில் தனியார் பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். சமீபத்தில்  மார்ஸ் 2020 ரோவர் என்கின்ற விண்கலத்தை அடுத்த ஆண்டு ஜூலை மாதத்தில் அனுப்ப உள்ளதாக அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா அறிவித்திருந்தது. செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பப்படும் இவ்விண்கலம் 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தரையிறங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்ட நிலையில்,  ரோவர் விண்கலத்தில் தங்களது பெயர்களை இலவசமாக பொறிப்பதற்கான வாய்ப்பையும் நாசா வழங்கியிருந்தது.

 

  The names of the students in the NASA spacecraft..!

                                                               திகர்பூவன்

ii

                                                                 நிலநவசிகன்           

பதிவு செய்யப்பட்ட அனைவரின் பெயர்களையும் நாசா கலிபோர்னியா, பாஸ்டோனாவில் உள்ள நாசாவின் ஜெட் புரொபல்சன் ஆய்வுக் கூடத்தில் உள்ள நுண்கருவிகள் ஆய்வகத்தில் எலெக்ட்ரான் கதிர்வீச்சைப் பயன்படுத்தி பெயர்களை சிலிகான் சிப்பில் பொறித்து சிப் கண்ணாடியால் மூடப்பட்டு ரோவரில் பயணிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் உலகம் முழுவதிலிருந்து 1கோடிக்கும் மேலானோர் பதிவு செய்துள்ள நிலையில். இந்தியாவில் இருந்து மட்டும் 15.7லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் ராமநாதபுரம் மாவட்டம், ஆர்.எஸ்.மங்களம் தாலுகா, உப்பூர் அருகே கூத்தன்வயல் கிராமத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன்கள் நிலநவசிகன், திகர்பூவன் ஆகிய இரண்டு மாணவர்கள் பெயர்களும் அடக்கம்.! இதனால் இக்கிராம மக்கள் பூரிப்படைந்ததோடு மட்டுமில்லாமல் விண்கலம் ஏவப்படும் அந்நாளுக்காகக் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆண் நண்பருடன் சேர்ந்து கணவனைக் கொன்ற மனைவி; பகீர் கிளப்பும் பின்னணி

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
wife who incident her husband along with her boyfriend

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே வசிப்பவர்கள் ஸ்ரீகாந்த் - ஆர்த்தி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் ஆர்த்திக்கு ஸ்ரீகாந்தின் நண்பர் இளையராஜாவுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த பழக்கம் திருமணத்தை மீறிய உறவாக மாறி உள்ளது.

இது குறித்த தகவல் ஸ்ரீகாந்துக்கு தெரிய வர இருவரையும் அழைத்து கடுமையாக எச்சரித்துள்ளார். இந்த நிலையில் திருமணத்தை மீறிய உறவிற்கு இடையூறாக இருக்கும் கணவன் ஸ்ரீகாந்தை கொல்ல இளையராஜாவுடன் ஆர்த்தி திட்டமிட்டுள்ளார்.  அதன் படி கடந்த 2021 ஆம் ஆண்டு தேவகோட்டை அருகே உள்ள அருகே உள்ள ஆள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதிக்கு இளையராஜா ஸ்ரீகாந்தை அழைத்துச் சென்று மது குடிக்க வைத்து அவரை வெட்டிக்கொன்று புதைத்துள்ளார். ஆனால் மனைவி ஆர்த்தி தனது கணவர் குடும்ப பிரச்சனை காரணமாக கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறியதாக குடும்பத்தாரிடமும் அக்கம்பக்கத்தினரிடமும் நாடகமாடி உள்ளார்.

இந்த நிலையில் இரண்டரை வருடம் கழித்து ஸ்ரீகாந்த் கொலை செய்யப்பட்டது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்துள்ளது. அதன் பெயரில் விசாரணையை தொடங்கிய போலீஸ் மனைவி ஆர்த்தியையும், இளையராஜாவையும் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவத்தில் இளையராஜாவின் நண்பர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரையும் கைது செய்தனர். மேலும் இந்தக் கொலை தொடர்பாக தலைமறைவாக இருக்கும் இருவரை போலீஸ் தேடி வருகின்றனர்.

Next Story

காவு வாங்கிய குளம்; கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்திய சிறுவர்களின் உயிரிழப்பு

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
 The pool of water; The lost their live of the boys left the village in mourning

கடலூரில் குளத்தில் இறங்கி குளிக்க முயன்ற இரண்டு சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே உள்ளது நந்தீஸ்வர மங்கலம். இந்தக் கிராமத்தில் வசித்து வந்த ராமமூர்த்தி என்பவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். திலீப் ராஜ்(16), தினேஷ்(14) ஆகிய இரு மகன்களும் வெளியூரில் விடுதியில் தங்கி படித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தனர்.

சிறுவர்கள் திலீப் ராஜ் மற்றும் தினேஷ் ஆகியோர் வீட்டுக்கு அருகே உள்ள குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது ஆழமான பகுதிக்கு இருவரும் குளிக்கச் சென்றதாக கூறப்படுகிறது. இதில் நீரில் மூழ்கி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். குளத்துக்கு குளிக்கச் சென்ற சிறுவர்கள் காணாமல் போனதால் பதறியடித்த பெற்றோர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு குளத்தில் இறங்கி தேட ஆரம்பித்தனர். பின்னர், வெகு நேரத்திற்கு பின் இருவரின் உடலையும் கைப்பற்றிய மீட்புப்படையினர் உடல்களை கரைக்கு கொண்டு வந்தனர். சிறுவர்களின் உடல்களை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர். உயிரிழந்த சிறுவர்கள் இருவரின் உடலும் காட்டுமன்னார் கோவில் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

விடுதியில் தங்கிப் படித்து வந்த சிறுவர்கள் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்த நிலையில் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.