Skip to main content

ஓசூரில் இந்து மகாசபா நிர்வாகி ஓட ஓட வெட்டிக்கொலை! மர்ம கும்பலுக்கு வலை...

Published on 23/11/2020 | Edited on 23/11/2020

 

Hosur hindu maha saba member passes away police investigation


ஓசூரில், பட்டப்பகலில் இந்து மகாசபா நிர்வாகி ஒருவரை மர்ம நபர்கள் ஓட ஓட துரத்திச்சென்று வெட்டிக்கொன்ற சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

 

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் - பாகலூர் சாலை சமத்துவபுரம் அடுத்துள்ள அனுமன் நகரைச் சேர்ந்தவர் நாகராஜ் (40). வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். அகில பாரத இந்து மகாசபாவின் மாநில பொதுச்செயலாளராக இருந்தார். இவருடைய மனைவி மஞ்சுளா. இவர்களுக்கு 3 மகள்களும் உள்ளனர்.

 

ஞாயிற்றுக்கிழமை (நவ. 22) காலை அவர், கடைக்கு சென்றுவிட்டு வருவதாகக் கூறிவிட்டு வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் கிளம்பிச் சென்றார். அப்போது சமத்துவபுரம் கேட் பகுதி அருகே வந்தபோது, அங்கே மறைந்து இருந்த மர்ம கும்பல் அவரை வழிமறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டினர். 

 

மர்ம நபர்கள் சரமாரியாக தாக்கத் தொடங்கியதுமே நாகராஜ் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். ஆனாலும், அவரை ஓட ஓட துரத்திச் சென்று வெட்டினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பலியானார். அதற்குள் அப்பகுதி மக்கள் அங்கு ஓடிவந்தனர். அவர்களைப் பார்த்ததும் கொலை கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.

 

இதுகுறித்து ஹட்கோ காவல்நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். நாகராஜின் சடலம், உடற்கூறாய்வுக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

தொழில் போட்டியா அல்லது முன்விரோதத்தால் நாகராஜ் கொல்லப்பட்டாரா? கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

இந்து மகாசபா நிர்வாகி ஒருவர், பொதுமக்கள் முன்னிலையில் பட்டப்பகலில் ஓட ஓட துரத்திச்சென்று வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் ஓசூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிறுமி கொலை; பெற்றோர் உட்பட 3 பேர் கைது!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
girl child incident for Bagalur near Hosur in Krishnagiri District

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள பாகலூர் கிராமத்தில் பிரகாஷ் (வயது 40) - காமாட்சி (வயது 35) என்ற தம்பதியர் வசித்து வருகின்றனர். இவர்களின் 11 ஆம் வகுப்பு படித்து வந்த மகள் கடந்த 14 ஆம் தேதி (14.02.2024) வீட்டில் இருந்து வெளியே சென்றார் எனவும், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை எனவும் கூறப்பட்டது. இதனையடுத்து சிறுமியின் உடலில் காயங்களுடன் ஏரியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த போலீசார் சிறுமியின் மரணம் குறித்து விசாரணை நடத்தினர்.  அப்போது இளைஞர் ஒருவரை சிறுமி காதலித்து வந்ததாகவும், அதனை பெற்றோர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. முன்னதாக கடந்த 2022 ஆம் ஆண்டு சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட இளைஞர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.  அதன் பின்னர் சிறையில் இருந்து வெளியே வந்த இளைஞர் மீண்டும் சிவாவுடன் பழகியுள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால் சிவாவுடன் பழகக் கூடாது என பெற்றோர் கூறியதை சிறுமி ஏற்க மறுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுமியை பெற்றோரே கட்டையால் தலையில் தாக்கி கொன்றதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி சிறுமியின் பெற்றோரிடமும் விசாரணை மேற்கொண்டனர். மேலும் சிறுமி காணாமல் போன அன்று வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமரா துணியால் மறைக்கப்பட்டதையும் போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில் சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் சிறுமியின் பெற்றோரான பிரகாஷ் - காமாட்சி மற்றும் சிறுமியின் பெரியம்மா காமாட்சி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்து சிறைச் சாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். 

Next Story

பட்டாசு கிடங்கில் தீ விபத்து; சூழும் கரும் புகையால் மக்கள் அச்சம்

Published on 25/01/2024 | Edited on 25/01/2024
Fireworks warehouse fire; People are afraid of surrounding smoke

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜீமங்கலம் பகுதியில் உள்ள பட்டாசு கிடங்கு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில் பட்டாசுகள் வெடித்து சிதறியதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஜீமங்கலம் என்ற பகுதியில் வடிவேல் என்பவர் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பட்டாசுக் கிடங்கு ஒன்றை பயன்படுத்தி வந்துள்ளார். இந்நிலையில் இன்று மாலை அந்த குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த வான வேடிக்கை பட்டாசுகள் மற்றும் சத்தத்துடன் வெடிக்கக்கூடிய பட்டாசுகள் வெடித்து சிதறியது. இதனால் பல அடி உயரங்களுக்கு கரும்புகை சூழ்ந்துள்ளதால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

vck ad

இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த  தீயணைப்புத் துறையினர் நீரை பீய்ச்சி அடித்து தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயன்று வருகின்றனர். ஆனால் பட்டாசு குடோன் என்பதால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு வெடித்துச் சிதறுகிறது. இது தொடர்பான காட்சிகள் வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சம்பவ இடத்தில் வருவாய்த்துறை அதிகாரிகளும் குவிந்து வருகின்றனர். அந்தப் பகுதி மக்களுக்கு விபத்து காரணமாக எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.