Skip to main content

கற்றுக் கொண்ட பாடத்தின் மூலம் உடனடியாக செய்ய வேண்டியவை.... - கொ.ம.தே.க.ஈஸ்வரன்

Published on 29/10/2019 | Edited on 29/10/2019

"குழந்தை சுஜித்தின் ஆழ்துளை கிணறு மரணம் இயற்கை மரணம் அல்ல. நம் கவனக்குறைவை திருத்திக்கொள்ள கற்றுக் கொடுத்திருக்கின்ற பாடம்." என கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ER ஈஸ்வரன் கூறினார்.
 

KMK Eshwaran press release


மேலும் அவர் விடுத்துள்ள விரிவான அறிக்கையில், "ஆழ்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தின் மரணம் இயற்கை மரணம் அல்ல. எல்லா விஷயங்களிலும் கவனக்குறைவாக இருக்கின்ற தமிழனால் ஏற்பட்ட செயற்கை மரணம். கொலை என்று கூட கூறலாம். இந்த நிகழ்வு கற்றுக் கொடுத்திருக்கின்ற பாடத்தை பயின்று இனிவொரு மரணம் இப்படி நிகழாமல் இருக்க நடவடிக்கைகளை மேற்கொள்வதுதான் மனப்பூர்வமான கண்ணீர் அஞ்சலியாக இருக்கும். கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கண்ணீர் அஞ்சலியை இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறோம்.

கற்றுக்கொண்ட பாடத்தின் மூலம் உடனடியாக செய்ய வேண்டிய காரியங்கள் :

1. அனைத்து ஆழ்துளை கிணறுகளும் பாதுகாப்பான மழைநீர் சேகரிப்பு மையங்களாக மாற்றப்பட வேண்டும். அதற்கான வரைமுறைகளை தாமதம் இல்லாமல் தமிழக அரசு வகுக்க வேண்டும்.

2. அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் ஆழ்துளை கிணறு இருப்பிடங்களை கணக்கெடுக்க வேண்டும்.

3. குழந்தை சுஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த பின்னால் யார் யாரிடத்தில் என்ன தொழில் நுட்பம் இருக்கிறது கொண்டு வாருங்கள் என்று அரசாங்கம் அறைக்கூவல் விடுத்ததை இன்று செயல்படுத்த வேண்டும். ஒவ்வொருவருடைய தொழில் நுட்பத்தையும் பேரிடர் மீட்பு குழு ஆராய்ந்து தேர்ந்தெடுத்து அந்த தொழில் நுட்பத்தை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை செய்ய வேண்டும். பரிசோதனை அடிப்படையில் பயன்படாத ஆழ்துளை கிணற்றில் குழந்தை பொம்மைகளை வைத்து மீட்டெடுத்து பார்க்க வேண்டும்.

4. இந்தியாவின் மாநிலங்களில் மட்டுமல்லாமல் சீனா உள்ளிட்ட பக்கத்து நாடுகளிலும் என்ன தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது என்பதை தெரிந்து வைத்து வேண்டுமென்றால் அழைத்து வர முன்னேற்பாட்டுடன் இருக்க வேண்டும்.

5. எந்தெந்த வழிமுறைகளை எப்படி கையாள வேண்டுமென்பதை அரசு பட்டியலிட்டு பாதுகாப்பான வழிமுறைகளை முறைப்படுத்த வேண்டும். குறிப்பாக பேரிடர் மீட்பு வீரர்களை ஹெலிகாப்டர் மூலமாகவோ, விமானம் மூலமாகவோ உடனடியாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு வரவழைக்க தகுந்த அரசாணை பிறப்பிக்கப்பட வேண்டும்.

6. முறைப்படுத்தப்பட்ட எல்லா விதமான முயற்சிகளையும் மேற்கொள்ள அனைவரும் முன்னேற்பாடாக பாதிக்கப்பட்ட இடத்திற்கு வரவழைக்கப்பட வேண்டும். ஒரு முயற்சி பலனளிக்காமல் போன பின்னால் அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்து அடுத்தகட்ட முயற்சிக்கு ஆட்களை அழைக்க கூடாது. அனைத்து தொழில் நுட்பத்திலும் திறமை வாய்ந்தவர்களை முதல் மணி துளியிலேயே பாதிக்கப்பட்ட இடத்திற்கு அழைத்து நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்த திட்டமிடல் மிகமிக அவசியம்.


அடுத்த ஒரு மரணம் இதை போல நடக்காமல் இருப்பதற்கு உறுதி எடுத்துக்கொண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் இறங்குவதுதான் தேசம் செலுத்துகின்ற கண்ணீர் அஞ்சலி. தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்ட அனைத்து துறையினருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்." என கூறியிருக்கிறார்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

“முதல்வருக்கு நன்றி...” - கொ.ம.தே.க. அறிக்கை

Published on 30/09/2023 | Edited on 30/09/2023

 

eswaran MLA thanked Chief Minister Stalin

 

“சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடைய இன்றைய உண்மை நிலையையும், நிறுவனங்கள் படுகின்ற சிரமத்தையும் புரிந்துகொண்டு கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சருக்கு கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர். ஈஸ்வரன் எம்.எல்.ஏ நன்றி தெரிவித்துள்ளார் 

 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுடைய ஒருநாள் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து அமைச்சர்களைப் பேச்சுவார்த்தை நடத்த முதல்வர் உத்தரவிட்டார். அமைச்சர்களும் தொழில் நிறுவனங்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உண்மை நிலையை முதலமைச்சருக்கு தெரிவித்திருக்கிறார்கள். ஒவ்வொரு கோரிக்கையாக அரசு பரிசீலித்து நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையோடு மின் நுகர்வோர் சங்கங்கள் காத்திருக்கிறார்கள். 

 

தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக ஒரு கோரிக்கையை ஏற்றுக்கொண்டு மின்சார துறைக்கு அதைச் செயல்படுத்த உத்தரவிட்டதன் பெயரில் இன்றைக்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மீதமுள்ள கோரிக்கையையும் கனிவோடு பரிசீலித்து விரைவாக ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். முதலமைச்சரின் துரிதமான நடவடிக்கை சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Next Story

இலங்கை அதிபராகிறார் சஜித் பிரேமதாசா?

Published on 11/07/2022 | Edited on 11/07/2022

 

 Will Sajith Premadasa become the President of Sri Lanka?

 

தொடர்ச்சியாக இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, எரிபொருள், உணவு போன்ற அத்தியாவசிய தேவைகளுக்கு கடும் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. பொதுப்போக்குவரத்து தவிர எந்தவொரு தனியார் வாகனமும் இயங்காத சூழலில் உணவுப்பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்வதற்கோ, மருந்துப் பொருட்களை கொண்டு செல்வதற்கோ மிகப்பெரிய சிரமத்தை இலங்கை மக்கள் சந்தித்து வருகின்றனர்.


இலங்கையில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. மக்களின் சீற்றத்திற்கு பயந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது மாளிகை விட்டு வெளியேறிவிட்டார். அதிபர் பதவியை வரும் ஜூலை 13- ஆம் தேதிக்குள் ராஜினாமா செய்வதாக கோத்தபய தன்னிடம் தெரிவித்ததாக, இலங்கை நாடாளுமன்றத்தின் சபாநாயகர் தெரிவித்துள்ளார். கோத்தபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி சென்றுவிட்டதாகவும், இலங்கைக்கு அருகில் உள்ள ஒரு நாட்டில் அவர் இருப்பதாகவும் தெரிவித்துள்ள இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர், கோத்தபய ராஜபக்சேவின்  பதவி விலகலைத் தொடர்ந்து வரும் ஜூலை 20 ஆம் தேதி இலங்கை அதிபருக்கான வாக்கெடுப்பு நடைபெற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
 

 Will Sajith Premadasa become the President of Sri Lanka?

 


இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கையின் அடுத்த அதிபர் யார் என்ற கேள்வி மேலோங்கி இருந்தது. இந்நிலையில் கொழும்புவில் நடைபெற்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் இலங்கை அதிபராக சஜித் பிரேமதாசாவை நியமிக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.