Skip to main content

''அமலாக்கத்துறை பிஸியாக இருக்கிறது; கொஞ்சம் ஃபிரீ ஆகிட்டு இந்த பக்கம் வருவாங்க''-அண்ணாமலை பேச்சு! 

Published on 02/08/2022 | Edited on 02/08/2022

 

"It seems that the enforcement department is Busy; come to this page for free" - Annamalai speech!

 

கடந்த சட்டமன்ற தேர்தல் சமயத்திலேயே தற்போதைய மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இடையே வார்த்தை மோதல்கள் ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து பல இடங்களில் விமர்சனங்களையும், குற்றச்சாட்டுகளையும் அண்ணாமலை அடுக்கி வருகிறார். அதேபோல் செந்தில் பாலாஜி தரப்பிலும் பதில் தரப்பட்டு வருகிறது.

 

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலையிடம் 'செந்தில் பாலாஜியை எப்பொழுது அமலாக்கத்துறை கைது செய்யும்' எனக் கேள்வி எழுப்பினர், அதற்கு பதிலளித்த அண்ணாமலை '' வெயிட் பண்ணுங்க அமலாக்கத்துறை பிசியாக இருக்கிற மாதிரி தெரிகிறது அவங்க கொஞ்சம் ஃபிரீ ஆகிட்டு இந்த பக்கம் வருவாங்க. அதுவரைக்கும் வெயிட் பண்ணுவோம். இந்த ஆண்டு சுதந்திர தின விழாவிற்கு கொடி தட்டுப்பாடு வராது. சில இடங்களில் பிரைவேட் கம்பெனிகள் ஸ்பான்சர் செய்கிறார்கள். குறிப்பாக திருப்பூர், கோயம்பத்தூரில் இருக்கும் தொழிலதிபர்கள் கதர் கொடிகளை குறிப்பிட்ட அளவு கட்சிக்கு கொடுக்க போகிறோம் எனச் சொல்லியுள்ளார்கள். அந்த கொடிகளை இலவசமாக மக்களுக்கு கொடுக்கப் போகிறோம்.

 

ஒரு லிட்டர் தண்ணியை அளவுகோலில் வைக்கும் பொழுது அது ஒரு கிலோ இருக்கும். ஒரு லிட்டர் பாலை அளவுகோலில் வைக்கும் பொழுது 1.03 கிலோ இருக்கும். சரிசமமாக பார்த்தால் தண்ணீரும், பாலும் ஒரே அளவுதான் இருக்கும். லிட்டரிலும் சரி, கிலோவிலும் சரி  தண்ணீரும், பாலும் ஒரே அளவுதான் இருக்கும். ஆனால் நமது ஆவின் பால் பாக்கெட் அரை லிட்டர் பாலை எடுத்து எடைபோட்டால் 430 கிராம், 440 கிராம் தான் வருதுனு சமூக வலைத்தளங்களில் நிறையபேர் தெரிவித்து வருகின்றனர்.சில திமுககாரர்கள் மறுக்கிறார்கள். ஆனால் சைன்ஸ்படி ஒரு லிட்டர் பாலை எடுத்து வெயிங் மெஷினில் வைத்தால் 1.03 கிலோ அது இருக்க வேண்டும். அப்படி இருக்க அரைலிட்டர் பாலுக்கு 60 கிராம், 70 கிராம் மிஸ் ஆகும் பொழுது தமிழ்நாட்டில் ஒரு நாளைக்கு விற்கிற ஆவின் பால் பாக்கெட்டுகளை கணக்கிட்டுப் பார்க்கும்பொழுது அரசுக்கு வரவேண்டிய பணம் வராமல் இருக்கும் என நேற்று அறிக்கையாக கொடுத்திருந்தேன்''என்றார்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Union Minister Amit Shah visits Tamil Nadu

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று (27.03.2024) முடிவடைந்தது. அந்த வகையில் 39 மக்களவை தொகுதிகளுக்கு 1749 வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 62 வேட்பாளர்கள் வேட்பு மனுவைத் தாக்கல் செய்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (28.03.2024) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது. அதாவது 39 மக்களவைத் தொகுதிகளில் தாக்கலான வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நிறைவடைந்துள்ளது. வேட்புமனுக்களை திருப்பப் பெற மார்ச் 30 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.

இந்நிலையில் மக்களவைத் தேர்தல் பரப்புரைக்காக ஏப்ரல் 4 ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகிறார். அதன்படி ஏப்ரல் 4 ஆம் தேதி மதுரை மற்றும் சிவகங்கை மக்களவைத் தொகுதிகளில் தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனைத் தோடர்ந்து ஏப்ரல் 5 ஆம் தேதி சென்னையில் அமித் ஷா பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். 

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.