Skip to main content

டெல்லியில் போராட மன்னார்குடியிலிருந்து புறப்பட்ட விவசாயிகள்!

Published on 24/03/2018 | Edited on 24/03/2018
image

   

உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி 6 வாரத்தில் மார்ச் 29 -ந் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்பட வேண்டும் என்று தமிழகம் முழுவதும் குரல் எழுந்துள்ள நிலையில் பாராளுமன்றம் முடக்கும் செயலில் தமிழக எம்.பிகள் செயல்பட்டு வருகின்றனர்.
  

 இந்த நிலையில் அமமுக சார்பில் தஞ்சை திலகர் திடலில் நாளை 25- ந் தேதி தினகரன் எம்எல்ஏ தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடக்க உள்ளது.  இதே போல தமிழக காவிரி விவசாயிகள் சங்கம், அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு  சார்பில் டெல்லி பாராளுமன்றம் முன்பு  பிஆர்.பாண்டியன் தலைமையில் 26 ந் தேதி காலை 9 மணி முதல் 5 மணி வரை  உண்ணாவிரதப் போராட்டம் நடத்த மன்னார்குடியில் இருந்து விவசாய சங்க பிரதிநிதிகள் டெல்லி செல்கின்றர். 


டெல்லியில் போராட்டம் நடத்தச் செல்லும் விவசாயிகளுக்கு மன்னார்குடியில் மேளதாளங்கள் முழங்க அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
  
 

சார்ந்த செய்திகள்