Skip to main content

பொதுக்குழுவிற்கு இபிஎஸ், ஓபிஎஸ் வருகை!

Published on 23/06/2022 | Edited on 23/06/2022

 

EPS, OPS visit to the General Assembly!

 

அதிமுகவின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டம் இன்று சென்னை அடுத்த வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெறவிருக்கும் நிலையில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் அவரவர் வீடுகளிலிருந்து புறப்பட்டுள்ளனர். அதிகாலை முதலே தொண்டர்கள் படையெடுத்து வரும் நிலையில் தற்போது வீட்டிலிருந்து புறப்பட்டுள்ள ஓபிஎஸ் இபிஎஸ் ஆகிய இருவருக்கும் வழிநெடுக அதிமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். முரண்களுக்கு மத்தியிலும் 'வரலாற்று சிறப்புமிக்க' பொதுக்குழு என பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழு நடக்கும் தனியார் மண்டபத்தின் முன் நாடாளுமன்றம் போன்ற  கட்அவுட் வைக்கப்பட்டுள்ளது.

 

2,665 பொதுக்குழு உறுப்பினர்கள் இந்த பொதுக் குழுக் கூட்டத்தில் கலந்துகொள்ள அழைக்கப்பட்டிருந்த நிலையில், பொதுக்குழு உறுப்பினராக அல்லாத ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் அங்கு கூடியுள்ளனர். இதனால் சுமார் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அங்கு ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசல் காரணமாக வானகரம்-அயனம்பாக்கம் சாலையில் கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்