Skip to main content

சிதம்பரம் அருகே மனைவியின் கண்முன்னே கணவனை இழுத்துச்சென்ற முதலை... உடல் மீட்பு

Published on 25/04/2019 | Edited on 25/04/2019

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வல்லம்படுகை கிராமத்தில் வசிக்கும் கலியமூர்த்தி என்பவரது மகன் ஜெயமணி(46) விவசாயி. இவர் புதன்கிழமை மாலை 6 மணிக்கு வயலில் வேலை முடிந்து கிராமத்தை ஒட்டியுள்ள பழைய கொள்ளிடம் ஆற்றின் ஷட்டர் அருகே  உள்ள கரையில் குளித்துக் கொண்டு இருந்துள்ளார்.  இவருக்கு அருகே அதே ஊரைச் சேர்ந்த ராமலிங்கம் (60) குணசேகரன்  (18) என்பவரும் குளித்துள்ளனர். அப்போது எதிர்பாராத விதமாக ஆற்றில் இருந்த முதலை ஜெயமணியை கடித்து இழுத்துள்ளது. அப்போது முதலையின் கடியை தாங்கமுடியாமல் அலறிய ஜெயமணியை அருகிலிருந்த ராமலிங்கம் பிடித்து இழுத்துள்ளார். இதனையும் மீறி முதலை இழுத்துச் சென்றதால் அவரை விட்டு விட்டு ராமலிங்கம் கரையேறியுள்ளார். கணவனின் அலரல் சத்தத்தை ஆற்றின் அருகே வயலில் இருந்த அவரது மனைவி அறிந்து  பதறி அடித்துகொண்டு வந்து பார்த்தபோது கணவனை முதலை கடித்து இழுத்து செல்வதை பார்த்து அதே இடத்தில் சத்தம் போட்டவாறு மயங்கி விழுந்தார். பின்னர் அவரை பக்கத்தில் இருந்தவர்கள் முகத்தில் தண்ணீர் தெளித்து மீட்டனர்.

 

jayamani

 

அதனை தொடர்ந்து தகவல் அறிந்த சிதம்பரம் வட்டாட்சியர் ஹரிதாஸ், வனத்துறையினர் ராஜேஷ் உள்ளிட்ட வனக்குழுவினர், முதலை பிடிப்பதில் பயிற்சி பெற்ற நந்திமங்கலம் ராஜி தலைமையிலான குழுவினர், கிராமத்திலுள்ள இளைஞர்களின் உதவியால் ஆற்றில் படகு மூலம் இறங்கி இரவு முழுவதும் ஜெயமணியின் உடலை தேடி வந்தனர். இதனை தொடர்ந்து இரவு முழுவதும் தேடும் பணியில் ஈடுபட்டபோது  வியாழக்கிழமை  அதிகாலை 4 மணிக்கு அவரது உடலை ஒரு புதரில் முதலை அடைத்து வைத்துள்ளதை அறிந்து மீட்டனர். பின்னர் உடற்கூறு ஆய்வுக்கு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மனைவி கண்முன்னே கணவனை முதலை கடித்து இழுத்து சென்ற சம்பவம் இந்த பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெயமணிக்கு இரு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

சிதம்பரத்தில் இ.பி.எஸ். பிரச்சாரம்; பொதுக்கூட்ட பணிகள் தீவிரம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
Edappadi Palaniswami is campaigning in Chidambaram on 31st

சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடுகிறார். அதேபோல் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க. சார்பில் வேலூர் மாநகராட்சி முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுகிறார்.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் வேட்பாளர் சந்திரகாசன் போட்டியிடுகிறார். இவருக்கு வாக்கு கேட்டு வரும் 31 ஆம் தேதி சிதம்பரம் புறவழிச் சாலை பகுதியில் அதிமுக பொதுச் செயலாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதனையொட்டி பொதுக்கூட்டம் மேடை அமைப்பதற்காகப் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் சிதம்பரம் தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கே.ஏ. பாண்டியன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருள்மொழி தேவன் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.