Skip to main content

ஏப்ரல் 16 முதல் 18 வரை டாஸ்மாக் மூடல்- தேர்தல் அதிகாரி அறிவிப்பு

Published on 12/04/2019 | Edited on 12/04/2019

 

தமிழகத்தில் நடக்கவிருக்கும் தேர்தல் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் எஸ்பிக்களுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹீ நாளை ஆலோசனை நடத்த இருக்கிறார்.

 

tasm

 

நாளை மாலை 6 மணிக்கு வீடியோ கான்பரன்ஸில் இந்த ஆலோனை கூட்டம் நடைபெறும் என அறிவித்த சத்யபிரதா சாஹீ தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில்  ஏப்ரல் 16 முதல் 18ஆம் தேதி நள்ளிரவு வரை அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படும். அதேபோல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான மே 23 அன்று மதுக்கடை மூடப்படும் என கூறினார்.

 

இந்த நாட்களில் மது ஆலைகளில் மது தயாரிக்கவும், மதுவை டாஸ்மாக்கிற்கு கொண்டு செல்லவும் தடைவிதிக்கப்பட்டுள்ளதாக  தெரிவித்துள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்