Skip to main content

முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது!!!

Published on 03/06/2020 | Edited on 03/06/2020

 

சென்னை எக்மோரில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை 9 மணி அளவில் செல்போன் எண்ணில் இருந்து அவசர தொலைபேசி எண்ணிற்கு தொடர்புகொண்டு ஒரு மர்ம நபர் பேசினார். அந்த நபர் கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதல்வர் வீடு மற்றும் தலைமை செயலகத்தில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும் சிறிது நேரத்தில் அது வெடிக்கும் என்று கூறிவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.


உடனே காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்தவர்கள் பதட்டமடைந்தனர். உடனடியாக வெடிகுண்டு நிபுணர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதல்வர் வீடு, தலைமை செயலகம் ஆகிய இரண்டு இடங்களிலும் வெடிகுண்டு நிபுணர்கள் கடும் சோதனை செய்தனர். இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை நடத்தியும் எந்தவிதமான வெடிகுண்டுகளும் கைப்பற்றப்படவில்லை. வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த அந்த செல்போன் எண் யாருடையது, அதிலிருந்து யார் பேசியது என்பதை கண்டுபிடிப்பதற்காக தீவிர விசாரணை மேற்கொண்டனர் போலீசார். அதில் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள கூனிமேடு குப்பம் பகுதியில் இருந்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரியவந்தது.

 

 


இதையடுத்து விழுப்புரம் மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்து மரக்காணம் போலீசாருக்கு தகவல் போனது. மரக்காணம் போலீசார் கூனிமேடு குப்பம் பகுதிக்கு சென்று தீவிர விசாரணை செய்தனர். விசாரணையில் அந்த நபர் புண்ணியமூர்த்தி என்பவரின் மகன் புவனேஷ் (வயது 23) என தெரிய வந்தது. இவர்தான் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார் என்பதை கண்டுபிடித்தனர்.

அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தபோது, அவர் மனவளர்ச்சி குன்றியவர் என்பதும் சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தொடர்ந்து மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வருவதும் தெரியவந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்துள்ளனர்.

இவர் கடந்த ஆண்டு இதேபோன்று கோயம்பேடு மற்றும் விழுப்புரம் பஸ் நிலையம், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, கவர்னர் கிரண்பேடி ஆகியோருக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

உறவினர் வீட்டு விஷேஷத்திற்குச் சென்ற மகன்; தாய்க்குக் காத்திருந்த அதிர்ச்சி!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 young man who went to visit a relative's house passed away

ஈரோடு, சூரம்பட்டி, நேரு வீதியைச் சேர்ந்தவர் சுலோச்சனா (73). இவரது கணவர் மருதாசலம் (75). இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடைசி மகன் மட்டும் திருமணம் ஆகி தனியாக வசித்து வருகிறார். மற்ற இரண்டு மகன்களும் பெற்றோர்களுடன் வசித்து வந்தனர். 2-வது மகன் மோகனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது. இந்த நிலையில், கடந்த 21ஆம் தேதி சித்தோடு, சாணார்பாளையத்தில் உள்ள தங்களது உறவினர் வீட்டு விசேஷத்துக்குச் சென்று வருவதாக கூறிச் சென்ற மோகன் அதன்பின் வீடு திரும்பவில்லை.

இதையடுத்து, பல்வேறு இடங்களில் மகனைத் தேடி வந்த தாய் சுலோச்சனா, நேற்று சித்தோடு பகுதியில் சென்று தன் மகன் குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கடந்த 21ஆம் தேதி மதுபோதையில் சித்தோடு வந்த மோகன் அங்குள்ள செல்போன் கடை முன்பாக மயங்கிக் கிடந்தவர், சிறிது நேரத்தில் இறந்து விட்டதாகவும், இதையடுத்து, அங்கிருந்தவர்கள் மோகனின் உடலை சித்தோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, சுலோச்சனா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று இறந்தது தனது மகன் மோகன் தான் என்பதை உறுதி செய்தார்.  இதுகுறித்து நேற்று அவர் அளித்த புகாரின் பேரில், சித்தோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story

சல்மான் கான் வீட்டின் முன் துப்பாக்கிச்சூடு; மும்பை போலீசார் அதிரடி!

Published on 16/04/2024 | Edited on 16/04/2024
incident front of Salman Khan house Mumbai police in action

பாலிவுட்டில் முன்னணி நடிகராக இருப்பவர் சல்மான்கான். இவர் மும்பை பாந்த்ரா நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். இந்த இத்தகைய சூழலில் நேற்று முன்தினம் (14.04.2024) இரு சக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர். துப்பாக்கிச்சூடு நடந்த போது சல்மான் கான் வீட்டில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கிச்சூடு நடத்தி விட்டுத் தப்பிச்சென்ற மர்ம நபர்களைத் தேடி வந்தனர். சல்மான் கானுக்கு ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில், அவர் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்ற மர்ம நபர்களை தீவிரமாகத் தேடி வந்தனர்.

இந்நிலையில், நடிகர் சல்மான்கான் வீட்டின் முன்பு துப்பாக்கிச்சூடு நடத்திய விவகாரத்தில் விக்கி குப்தா மற்றும் சாகர் பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் பூஜ் பகுதியில் தலைமறைவாக இருந்த குற்றவாளிகளை மும்பை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இது குறித்து பூஜ் சார்பில் காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஏப்ரல் 14 ஆம் தேதி நடிகர் சல்மான் கானின் வீட்டுக்கு வெளியே துப்பாக்கிச் சூடு நடத்திய லாரன்ஸ் பிஷ்னாய் கும்பலில் குற்றம் சாட்டப்பட்ட இருவரை மேற்கு கச்சச் போலீஸார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்ட இருவரும் பீகாரைச் சேர்ந்த விக்கி குப்தா (வயது 24), சாகர் பால் (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.