Skip to main content

காவிரி மேலாண்மை வாரியம்: 4 மாநில ஆலோசனைக் கூட்டம்!

Published on 09/03/2018 | Edited on 09/03/2018


காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பது தொடர்பாக 4 மாநில அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெறுகிறது.

மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, புதுச்சேரி, கேரள உள்ளிட்ட 4 மாநில அரசுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர்.

இதில் தமிழகம் சார்பில் பங்கேற்க தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பொதுப்பணித்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோர் டெல்லி சென்றுள்ளனர்.

காவிரி நதிநீர்ப் பங்கீடு குறித்த வழக்கில் அண்மையில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், 6 வாரங்களுக்குள் மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டது. இதில் 4 வாரங்கள் முடிந்தநிலையில், அடுத்த நடவடிக்கை பற்றி முடிவெடுக்க ஆலோசனைக் கூட்டத்தை மத்திய அரசு நடத்துகிறது.

சார்ந்த செய்திகள்