Skip to main content

குட்டி எதிரியை கண்டு ஏன் எடப்பாடி பயப்படுகிறார்! இடைத்தேர்தலில்  இரண்டு தொகுதிகளையும்  கைபற்றுவோம்! டிடிவி பகீர் பேச்சு!

Published on 27/08/2018 | Edited on 27/08/2018
d

 

திண்டுக்கல் மாவட்டத்தில் அம்மா முன்னேற்ற கழகம் கிழக்கு மேற்கு என இரண்டு மாவட்டமாக பிரிக்கப்பட்டு உள்ளது.  இதில் மேற்கு மாவட்ட செயலாளர் நல்லசாமி  ஏற்பாட்டில்  அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் ஒட்டன்சத்திரத்தில் மாபெரும்  பொதுக்கூட்டம் நடைபெற்றது.  இக் கூட்டத்திற்கு கழக துணைப் பொதுச் செயலாளரும் ஆர்.கே.நகர் சட்டமன்ற உறுப்பினருமான டிடிவி கலந்து கொண்டார்.
      

      இக் கூட்டத்துக்கு மாவட்ட அளவில் உள்ள கட்சி பொருப்பாளர்களும், தொண்டர்களும் பெரும் திரளாகவே கலந்து கொண்டனர். அதை கண்டு டிடிவி பூரித்து போய் விட்டார்.  அந்த அளவுக்கு முன்ளால் முதல்வர்களான  ஜெ., கலைஞர் வந்தால் எந்த  அளவுக்கு கூட்டம் வருமோ அது போல் கூட்டம் அலைமோதியதை கண்டு  ஒட்டன்சத்திரமே ஸ்தம்பித்து விட்டது.


           அப்படி  ஒரு மாநாடு  போல் இருந்த கூட்டத்தில் பேசிய  டிடிவியோ....மதுரையை தவிர அதற்கு பிறகு நடந்த  எந்த கூட்டத்திற்கும் இந்த பழனிச்சாமி அனுமதி கொடுப்பதில்லை.  எல்லா கூட்டங்களும் கோர்ட்டில்  அனுமதி வாங்கி தான் நடத்தி வருகிறோம்.  அது போல் தான் இந்த  கூட்டத்திற்கும் கோர்ட்டில் அனுமதி வாங்கி தான் நடத்தி வருகிறோம்.  ஆனால்  எல்லா கட்சி கூட்டங்களுக்கும் அனுமதி கொடுக்கிறார்கள்.  அப்படி இருக்கும் போது  எங்களுக்கு மட்டும் கொடுக்காது  ஏன் பயமா? இதில அண்ணன் பழனிச்சாமி வேற என்னை  குட்டி எதிரி  என்கிறார்.  ஆம் அம்மாவின் குட்டி எலியாக தான் இருக்கிறேன்.  தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி பாயும்பாங்க. ஆனால் நான் 16ஆயிரம் அடி பாய்வேன். இந்த  குட்டி எலிக்காக தான் பழனிச்சாமி உள்பட மூன்று அமைச்சர்களும் ஆர்.கே.நகர் வீதியில் அலைந்தார்கள்.

 

d

 

கொங்கு மண்டலத்தில் இருந்து  இதுவரை ஒரு முதல்வர்  கூட வரவில்லை என்பதற்காகதான்  இந்த  பழனிச்சாமியை சின்னம்மா முதல்வராக ஆக்கினார். ஸ்டாலின்  பழனிச்சாமி வீட்டுக்கு  போய் இருக்க கூடாது கோர்ட்டுக்கு தான் போய் இருக்க வேண்டும். திமுகவுடன் எடப்பாடி கூட்டணி வைத்து இருக்கிறார் .  அந்த அளவுக்கு திமுக  எம்.எல்.ஏ.களும், திமுக  நபர்களுக்கும்  தான்  காட்ராக்ட் கொடுத்து இருக்கிறார் .  அந்த ரிக்காடுகளை நான்கு மாதங்களுக்கு முன்பு தங்க தமிழ்ச்செல்வனும், வெற்றிவேலும் எடுத்து தலைமை செயலாளரிடம் கொடுத்து இருக்கிறார்கள்.   திகார் ஜெயிலுக்கு போனேன் என்கிறார்கள்.  எதுக்கு போனேன் உங்களுக்கு இரட்டை இலை சின்னம்  கிடைக்க தான்  போனேன். இப்ப ஊழல் ஆட்சி   தான் நடக்கிறதே தவிர அம்மா ஆட்சி நடக்க வில்லை  அதுனால தான் அம்மா ஆட்சியை உருவாக்குவோம். 

 

ஆர்.கே.நகரில் டோக்கனை தூக்கி  காட்டுகிறார்கள் என்கிறார்கள்.  அது வேறு யாரும் இல்லை மதுசூதனன் தனது கைத்தடிகளை தூண்டி விட்டு 20நோட்டை தூக்கி காண்பிக்க  சொல்லி வருகிறார்.


        திருவாரூர்,  திருப்பரங்குன்றத்தில் அம்மா முன்னேற்ற கழகம் மாபெறும் வெற்றி பெறும். அதற்கு கூட டிடிவி வானத்தில் இருந்து பணத்தை கொட்டினார் என்று சொல்வார்கள். வருகிற 31ம்தேதி தீர்ப்பு. நல்ல தீர்ப்பாக கிடைக்கும்.  இந்த  நிதி மன்றம் தடை உத்திரவு இருக்கும் வரை இந்த  ஆட்சியும் இருக்கு  தற்பொழுது மணல் கொள்ளை மூலம் தான் ஆட்சி நடக்கிறது.  அதுனால  எப்ப தேர்தல் வந்தாலும் அது பாராளுமன்றமானாலும்.சட்டமன்றமானாலும்  குக்கர் சின்னம் மூலம் அமோகமாக வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

 

இக் கூட்டத்தில் தங்கதமிழ்செல்வன் உள்பட பதிவி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ கள் மற்றும் மாநில நிர்வாகிகள் என பெரும்பாலனோர் கலந்து கொண்டனர். 

 

சார்ந்த செய்திகள்