Skip to main content

ஆற்றில் குளிக்க சென்ற 3 சிறுமிகள் தவறிவிழுத்த பறிதாபம்; இறந்த நிலையில் 2 உடல்கள் மீட்பு!

Published on 13/01/2020 | Edited on 13/01/2020

காட்டுமன்னார்கோவில் அருகே சி.புத்தூர் கிராமத்தில் வடவாற்றில் குளிக்க சென்ற 3 சிறுமிகளில் 2 பேர் பலி 1 சிறுமி உயிருடன் மீட்கப்பட்ட சம்வம் அப்பகுதியில் பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காட்டுமன்னார்கோவில் அடுத்த சிறுகாட்டூர் ஊராட்சிக்கு உட்பட்ட சி.புத்தூர் கிராமம் வடவாறு ஆற்றங்கரை அருகே அமைந்துள்ளது. 15 அடிகள் ஆழம் இருக்கும் அப்பகுதி ஆற்றில் பெரியவர்கள் தவிற பெண்கள் மற்றும் சிறுவர்கள் படிகளில் அமர்ந்து குளிப்பது வழக்கம்.

 

river


நேற்று பகல் 1 மணியளவில் அப்பகுதியை சேர்ந்த ரஜினிகாந்த்-கவிதாவின் 10 வயது மகள் சினேகா, தினகரன்-இளமதியின் மகள் 7 வயது தீபிகா மற்றும் விஜயகுமார்-உஷா ஆகியோரின் மகள் 8 வயது விஜயலெட்சுமி ஆகிய மூவரும் ஆற்றுக்கு குளிக்க சென்றதாக தெரிகிறது. இதில் திடீரென தீபிகா மற்றும் சினேகா ஆகியோர் படிக்கட்டில் வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளனர். இதை பார்த்த அருகே இருந்த விஜயலெட்சுமி இருவரின் தலை முடிகளை பற்றிக்கொண்டு கூச்சலிட்டதாக தெரிகிறது. சிறிது நேரத்தில் பிடியில் இருந்த இருவர் உட்பட சிறுமி விஜயலெட்சுமியும் ஆற்றில் விழுந்து அடித்து செல்லப்பட்டனர்.

விழுந்த இடத்தில் இருந்து சுமார் 50 அடிகள் தூரத்தில் கரையோரம் இருந்த புல் புதரை பற்றிக்கொண்ட சிறுமி மற்ற இருவரையும் காப்பாற்றும்படி கூச்சலிட்டு அக்கம்பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார். சத்தம்கேட்டு அப்பகுதியில் ஆடுமேய்த்து கொண்டிருந்த சிலர் ஆற்றில் இறங்கி சிறுமி கூச்சலிட்ட விஜயலெட்சுமியை மீட்டனர். இதற்கிடையில் மற்ற இரண்டு சிறுமிகளும் ஆற்றில் மூழ்கிவிட்டனர். தொடர்ந்து தேடலில் ஈடுபட்ட கிராமத்தினர் உயிரிழந்த நிலையில் சிறுமி சினேகாவின் உடலை மீட்டு கரைசேர்த்தனர். 

 

river


தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற மீட்பு படையினர் மற்றொரு சிறுமியின் உடலை ஊர்பொதுமக்களின் உதவியுடன்   மீட்டனர்.

இதுகுறித்து ஊர்பொதுமக்களிட்ம் கேட்டபோது, கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக தங்கள் பகுதி வடவாற்றில் படிக்கட்டுகள் உடைந்து சேதமடைந்து உள்ளன. இதுபோன்ற அசம்பாவிதங்கள் நடைபெறாமல் இருக்க கிராமவாசிகள் தங்களின் பிள்ளைகளை தனியாக ஆற்று அனுப்புவதில்லை, தற்போது நடந்த துயர சம்பவம் எவரும் எதிர்பார்க்காதது. பொங்கல் வேலைகளில் கிராமமக்கள் ஈடுபட்டிருந்த வேலையில் சிறுமிகள் ஆற்றிக்கு சென்றதை கவனிக்கவில்லை என தெரிவித்தனர். ஒரே தெருவில் பக்கத்து பக்கத்து வீட்டு சிறுமிகள் இருவர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி கிராம மக்களிடையே பெறும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தை; மீட்பு பணிகள் தீவிரம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
A child who fell into a borehole; Rescue operations are intense

மத்திய பிரதேசம் மாநிலம் ரேவா என்ற மாவட்டத்தில் உள்ள கிராமத்தில் திறந்தவெளி ஆழ்துளைக் கிணறு ஒன்று அமைக்கட்டுள்ளது. இதில் 6 வயது குழந்தை ஒன்று நேற்று (12.04.2024) தவறி விழுந்தது. இந்த குழந்தையை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து ரேவா மாவட்ட ஆட்சியர் பிரதிபா பால் கூறுகையில், “ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறோம். ஆழ்துளைக் கிணற்றின் ஆழம் 70 அடி ஆகும். 50 அடி ஆழம் தோண்டிய பின் கேமரா மூலம் கிடைத்த தகவலின் படி குழந்தை 45 முதல் 50 அடி ஆழத்தில் சிக்கியிருக்கலாம் என தெரிய வருகிறது.  தேசிய பேரிடர் மீட்புப்படையினர் குழந்தையை மீட்க கிடைமட்டமாக சுரங்கம் தோண்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து ரேவா மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் அனில் சோன்கர் கூறும்போது, “சிறுவனின் பெயர் மயூர். தனது நண்பர்களுடன் சேர்ந்து அறுவடை செய்த கோதுமை பயிரிடப்பட்ட வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த போது, ஆழ்துளை கிணற்றில் விழுந்தான். மற்ற குழந்தைகள் அவருக்கு உதவ முயன்றனர். ஆனால் அவர்களால் முடியாததால்  உடனடியாக மயூருடைய பெற்றோருக்குத் தகவல் கொடுத்தனர். இது குறித்து எங்களுக்குத் தகவல் கிடைத்ததும் 3.30 மணியளவில் ஸ்டேஷன் பொறுப்பாளர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். மூத்த அதிகாரிகள் சம்பவ இடத்தில் உள்ளனர் மீட்புப் பணியில் 2 ஜேசிபிகள், கேமராமேன்கள் குழு ஈடுபட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு குழு பனாரஸில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

மேலும் மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் கூறுகையில், “இந்த சம்பவம் வருத்தமளிக்கிறது. மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்தில் உள்ளன. குழந்தையைக் காப்பாற்ற அரசு நிர்வாகம் அனைத்து முயற்சிகளையும் செய்யும். எம்எல்ஏ சித்தார்த் திவாரி அந்த இடத்தில் இருக்கிறார். குழந்தையை மீட்கும் முயற்சியில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

பள்ளிப் பேருந்து விபத்து; மாணவர் சொன்ன பகீர் காரணம்

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
School bus incident The reason given by the student 

ஹரியானா மாநிலம் மகேந்திரகர் அருகே கனினா என்ற இடத்தில் தனியார் பள்ளிப் பேருந்து விபத்துக்குள்ளானதில் 5 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும் பேருந்தில் இருந்த 15 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த மானவர்கள் மருத்துவமணையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்தில் காயமடைந்த மாணவர்களை ஹரியானா கல்வி அமைச்சர் சீமா த்ரிகா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளரிடம் பேசுகையில், “நான் இப்போதுதான் மாத்ரிகா மருத்துவமனைக்கு வந்தேன். மூன்று குழந்தைகளை மட்டுமே சந்தித்தேன். மூவரும்  காயமடைந்துள்ளனர். அவர்களின் உடைகள் முழுவதும் ரத்தம் உள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி இங்கு உரிய சிகிச்சை அளிக்க முடியும்; சிலருக்கு பலத்த காயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்.

இந்த விபத்தில் காயமடைந்த மாணவர் ஒருவர் கூறுகையில், “பேருந்து ஓட்டுனர் குடிபோதையில் 120 கி.மீ. வேகத்தில் பள்ளிப் பேருந்தை ஓட்டினார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது” எனத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.