Skip to main content

வெற்றி பெற்ற வேட்பாளர்களை பாதுகாக்க அதிரடி திட்டம்... காய் நகர்த்தும் வேட்பாளர்கள்... உஷாரான திமுக, அதிமுக!

Published on 10/01/2020 | Edited on 10/01/2020

விருதுநகர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள் 11-ல் அருப்புக்கோட்டை, காரியாப்பட்டி, திருச்சுழி, ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர், சிவகாசி, சாத்தூர் ஆகிய 7 ஒன்றியங்களில் தி.மு.க. தலைவர்களும், விருதுநகர், வெம்பக்கோட்டை ஆகிய இரண்டு ஒன்றியங்களில் அ.தி.மு.க. தலைவர்களும் யூனியன் சேர்மன் நாற்காலியில் அமர வேண்டும். வத்திராயிருப்பும் நரிக்குடியும் மட்டுமே இழுபறி நிலையில் இருந்திருக்க வேண்டும். ஆளும்கட்சியின் சித்துவிளையாட்டால், இவையனைத்தும் மாறக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

 

dmk



வத்திராயிருப்பு ஒன்றியத்தில் அ.தி.மு.க. கூட்டணியில் 6 உறுப்பினர்கள், தி.மு.க. கூட்டணியில் 6 உறுப்பினர்கள் தேர்வாகி சமநிலையில் இருந்தாலும், ஒரே ஒரு சுயேட்சை உறுப்பினரான, ஜான் பாண்டியனின் த.ம.மு.க.வைச் சேர்ந்த ரேகாவை, அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி தங்கள் பக்கம் இழுத்துவிட்டது. டிராக்டர் ஒன்றும் ரூ.30 லட்சமும் தருவதாகப் பேரத்தை முடித்திருக்கின்றனராம். அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு 13-வது வார்டில் வெற்றி பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த சிந்துமுருகனே இந்த ஒன்றியத்தின் தலைவர் என்று முடிவாகிவிட்டதாம். துணைத் தலைவர் பதவிக்கு, 10-வது வார்டு (அ.தி.மு.க.) உறுப்பினர் பஞ்சவர்ணத்தின் பெயர் அடிபடுகிறது.


நரிக்குடி ஒன்றியத்தில் அ.தி.மு.க.வில் 5 உறுப்பினர்களும், தி.மு.க.வில் 6 உறுப்பினர்களும், அ.ம.மு.க.வில் ஒரு உறுப்பினரும், சுயேட்சைகள் இருவரும் தேர்வாகி உள்ளனர். அ.ம.மு.க. உறுப்பினர் இந்திராணி தரப்பில், இரண்டு கட்சிகள் பக்கமும் அவருடைய கணவர் ஜெயராஜ் காய் நகர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்த ஒன்றியம் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு ஏரியா என்பதால், தி.மு.க. தரப்பில் 6-வது வார்டில் வெற்றி பெற்ற தி.மு.க. உறுப்பினர் அன்புச்செல்வியின் கணவர் ரமேஷ், லட்சங்களை வாரியிறைத்து சுயேட்சைகளை இழுப்பதில் மும்முரமாக இருக்கிறார். இவரைக் காட்டிலும், அ.தி.மு.க. சார்பில் வெற்றிபெற்ற 14-வது வார்டு உறுப்பினர் ரவிச்சந்திரன் கையே இந்த ஒன்றியத்தில் ஓங்கியிருக்கிறது. ஏனென்றால், நரிக்குடி ஒன்றியத்தையும் தாண்டி, விருதுநகர் மாவட்டத்திலுள்ள தி.மு.க.வினருக்கும் படியளப்பவராக இருக்கிறார் இந்த ரவிச்சந்திரன்.

தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு தரப்புமே உஷாராகி, தங்களின் உறுப்பினர்களை திருச்செந்தூர், குற்றாலம் ஆகிய ஊர்களிலும், மாநிலம் கடந்து கேரளாவிலும் தங்கவைத்து, தங்கள் பிடியிலேயே வைத்திருக்கிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்கப்படும்' - அமைச்சர் முத்துசாமி

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

ஈரோடு மாவட்டம் பவானி சாகர் அணையில் தண்ணீர் வேகமாகக் குறைந்து வருகிறது. இருப்பினும் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று வீட்டு வசதி துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி கூறியுள்ளார்.

அவர் ஈரோடு காந்திஜி சாலையில் திமுக சார்பில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, 'பவானி சாகர் அணையில் மட்டுமல்லாமல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள மின் உற்பத்தி அணைகளிலும் தண்ணீர் மிக குறைவாக உள்ளது. எங்களுக்கு கீழ் பவானி பாசனப்பகுதியில் உள்ள புஞ்சை பயிர்களுக்கு ஐந்தாவது நினைப்பிற்கு தண்ணீர் விட வேண்டும் என்பது ஆசைதான். ஆனால் நீர் இருப்பு அணையில் இல்லை. தமிழக முதலமைச்சர் 22 மாவட்டங்களுக்கு குடி தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க ரூபாய் 150 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். ஈரோடு மாவட்டத்திலும் எந்தக் குடிதண்ணீர் பிரச்சனையும் ஏற்படாமல் இருக்க முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார். ஈரோடு மாவட்டத்தில் நடப்பாண்டு அதிக உஷ்ணம் நிலவுகிறது. சாலை விரிவாக்கத்திற்காக பல இடங்களில் மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. அவ்விடங்களில் மரக்கன்றுகள் நட நடவடிக்கை எடுக்கப்படும். நீலகிரி மாவட்டத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் 26 நிமிடங்கள் பழுது அடைந்தது குறித்து திமுக சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது'' என்றார்.

ஈரோடு மாநகர மாவட்டச் செயலாளர் சுப்பிரமணியம் பகுதிச் செயலாளர் அக்னி சந்துரு மூன்றாம் மண்டல தலைவர் சசிகுமார் உட்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.