Skip to main content

பாஜக வேட்பாளர் பட்டியல் இழுபறி ஏன்? பரபரப்பு தகவல்கள் 

Published on 20/03/2019 | Edited on 20/03/2019

 

தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக ஆகியவை தமிழகத்தில் மாநில கட்சியின் தலைமையில் கூட்டணியை வைத்துள்ளது. திமுக தலைமையில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி புதுச்சேரி உள்பட 10 தொகுதிகளை பெற்றுள்ளது. அதிமுக தலைமையிலல் இடம் பெற்றுள்ள பாஜக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கோவை ஆகிய ஐந்து தொகுதிகளை பெற்றுள்ளது. 

 

மாநில கட்சிகளான திமுக, அதிமுக வேட்பாளர்களை அறிவித்து, தேர்தல் அறிக்கையை வெளியிட்டு ராகுல்காந்திதான் பிரதமர், மோடிதான் மீண்டும் பிரதமர் என பிரச்சார களத்திலும் இறங்கிவிட்டது. தேசிய கட்சிகள் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இன்னும் சற்று நேரத்தில், மாலையில், இன்று, நாளை, நாளை மறுநாள் என வேட்பாளர்கள் பட்டியல் வெளியிட காலதாமதம் ஆகிறது. 

 

bjp


 

பாஜக தரப்பில் விசாரித்தபோது, கட்சியின் மாநிலத் தலைவரான தமிழிசை சௌந்திரராஜன் இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று விரும்புகிறார். மாநிலத் தலைவராக இருந்து போட்டியிடவில்லை என்றால், டெல்லி மேலிடம் தன்னை மதிக்கவில்லை என்று இங்குள்ளவர்கள் நினைப்பார்கள், ஆகையால் தூத்துக்குடியை கேட்கிறார். ''திமுக வேட்பாளராக கனிமொழி போட்டியிட முடிவு எடுத்து நீண்ட நாட்களாக களப்பணியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.  இதனை தெரிந்துதான் அதிமுக நமக்கு தூத்துக்குடியை தள்ளிவிட்டுள்ளது. ஆகையால் போட்டியிட்டாலும் வெற்றி வாய்ப்பை பெற முடியாது, வேறு தொகுதியை கேளுங்கள், இல்லையென்றால் போட்டியிடும் எண்ணத்தை விடுங்கள்'' என்று நாடார் சமூகத்தைச் சேர்ந்த சிலர் அட்வைஸ் செய்கிறார்களாம் தமிழிசைக்கு. 
 

ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரன் போட்டியிட விரும்புகிறாராம். ஆனால் பாஜகவின் சீனியர்களோ, திமுக கூட்டணியில் உள்ள இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் போட்டியிடுகிறது. ஆகையால் பாஜக வேட்பாளராக முஸ்லீம் வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறார்களாம். 

சிவகங்கையில் நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளாராம் எச்.ராஜா. கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன் மீண்டும் களத்தில் போட்டியிடுகிறார். கன்னியாகுமரியில் இந்த முறை காங்கிரஸ் பொன்னாருக்கு கடும் நெருக்கடியை கொடுக்கும் என்று கூறப்படுகிறது. 
 


பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியாக தாமதம் ஆகவதற்கு காரணம் கோவைதான் என்கிறார்கள். கருப்பு முருகானந்தம், சி.பி.ராதாகிருஷ்ணன் மற்றும் மாநில நிர்வாகிகள் சிலர் கோவையில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வலியுறுத்தி வருகிறார்களாம். மொத்தம் 25 பேர் போட்டியிடுவதால் இவர்களை சமாதானம் செய்து வேட்பாளரை முடிவு செய்தால் பட்டியல் ரிலீஸ். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'விசாரணையை சந்தியுங்க'-மீண்டும் மீண்டும் கொட்டுப்பட்ட ஹெச்.ராஜா!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
' inquiry'-repeatedly dumped by H.Raja

தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனப் பாஜக நிர்வாகி ஹெச்.ராஜா தொடர்ந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

தமிழக பாஜக நிர்வாகியான ஹெச்.ராஜா கடந்த 2018 ஆம் ஆண்டு பெண்கள் குறித்து டிவிட்டர் வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றைப் பதிவிட்டு இருந்தார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ்  உட்பட திமுகவின் முக்கிய நிர்வாகிகள் ஈரோடு மாவட்ட காவல்துறையில் ஹெச்.ராஜா மீது புகார் அளித்திருந்தனர். இது தொடர்பாக  ஈரோடு டவுன் காவல் நிலைய போலீசார் பெண்களுக்கு எதிராக ஆபாசமாக பேசுதல்; பொது அமைதியைச் சீர்குலைக்கும் வகையில் செயல்படுதல்; கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்படுதல் உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் ஹெச்;ராஜா மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கு ஈரோடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. தொடர்ந்து இந்த வழக்கு சென்னை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி ஹெச்.ராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் வழக்கை மூன்று மாதத்திற்குள் முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் சிறப்பு நீதிமன்றத்தில் தன் மீது விசாரணையில் வழக்கை ரத்து செய்யக்கோரி மீண்டும் சென்னை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது 'அந்தச் சர்ச்சைக்குரிய பதிவை பதிவிட்டது நீங்களா?' என ஹெச்.ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பினார். அதற்கு ஹெச்.ராஜா தரப்பு வழக்கறிஞர் ஆம் எனப் பதிலளித்தார். தொடர்ந்து ஹெச்.ராஜா மீதான இந்த வழக்கை ரத்து செய்ய முடியாது என உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிட்டு ஹெச்.ராஜா தரப்பு மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

Next Story

தடுமாறிய ஹெலிகாப்டர்; உயிர் தப்பிய அமித்ஷா

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
nn

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 28 தொகுதிகள் கொண்ட கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி 14 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. மே 7 ஆம் தேதி மற்ற 14 தொகுதிகளில் தேர்தல் நடைபெறவிருக்கிறது.

தேர்தல் நடைபெற இருக்கும் மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகள் களை கட்டியிருக்கும் நிலையில் பீகாரில் அமித்ஷா சென்ற ஹெலிகாப்டர் சில நிமிடங்கள் தடுமாறியது பரபரப்பை ஏற்படுத்தியது. சில நிமிடங்கள் கட்டுப்பாட்டை இழந்து தடுமாறி அலைந்த ஹெலிகாப்டர் பின்னர் சில நிமிடங்களுக்கு பிறகு மீண்டும் நிலைநிறுத்தப்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. இந்தச் சம்பவத்தால் அங்கு சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.