Skip to main content

கையில் கத்தரிக்கோல்... நெஞ்சம் நிறைய நம்பிக்கை - வைரலாகும் பீகார் பெண்!

Published on 04/06/2020 | Edited on 04/06/2020
h



பீகார் மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவர் முடிதிருத்தம் செய்து தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கு உணவளித்து வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகாரை சேர்ந்தவர் சுக்செயின் தேவி. இவருடைய கணவர் சண்டிகரில் வேலை பார்த்து வருகின்றார். ஊரடங்கு காரணமாக சொந்த மாநிலம் திரும்ப முடியாமல் சில மாதங்களாக அங்கேயே சிக்கித் தவித்து வருகிறார். இதனால் பீகாரில் வசிக்கும் அவருடைய மனைவி மற்றும் மூன்று குழந்தைகள் சாப்பாட்டு கஷ்டப்பட்டு வந்துள்ளார்கள்.


இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் யோசித்து வந்த தேவி, சிறு வயதில் தனது அப்பா கற்றுக்கொடுத்த முடி திருத்தம் தொழிலை செய்யலாம் என்று முடிவெடுத்துள்ளார். முடிவெட்ட தேவையான பொருட்களை வாங்கி எடுத்துக்கொண்டு ஒவ்வொரு இடமாக போய் தேவையானவர்களுக்கு முடிவெட்டி விடுகின்றார். இதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை கொண்டு தன்னுடைய மூன்று குழந்தைகளுக்கு உணவளித்து வருகின்றார். கணவர் வரும் வரை இந்த தொழிலை செய்ய இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சலூன் கடையில் காவலர் அடாவடி; அதிரடி நடவடிக்கையில் எஸ்.பி

Published on 20/02/2023 | Edited on 20/02/2023

 

nn

 

தன் மகனுக்கு சரியாக முடி வெட்டாததால் அடாவடியாக அத்துமீறி மற்றொருவரின் சலூன் கடைக்கு பூட்டு போட்டு பொது இடத்தில் அதகளம் செய்த போலீஸ்காரர் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார் மாவட்ட எஸ்.பி. சரவணன்.

 

நெல்லை மாவட்டத்தில் திசையன்விளை காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருபவர் நேவிஸ் பிரிட்டோ. இவரின் மகன் நகரிலுள்ள சலூன் கடைக்கு முடி வெட்டச் சென்றுள்ளார். வீட்டுக்கு வந்த மகனைப் பார்த்ததும், அவருக்கு சரியாக முடித்திருத்தம் செய்யவில்லை எனக் கூறி, காவலர் நேவிஸ் பிரிட்டோவும் அவரது மனைவியும் மகனிடம் சலூன் கடை பற்றி சரிவர விசாரிக்காமல் மாறுதலாக தனியார் பள்ளியின் எதிரே உள்ள மற்றொரு சலூன் கடைக்குச் சென்றுள்ளனர். அந்தக் கடையின் உரிமையாளர் இல்லாததால் அவரின் நம்பரில் தொடர்பு கொண்ட காவலர்  அவரை திட்டியதுடன் கடைக்கு வரவழைத்துள்ளார்.

 

அத்துடன் தன்னிடமிருந்த பெரிய பூட்டைக் கொண்டு கடையைப் பூட்ட முயன்றுள்ளார். அதைக்கண்டு பதறிய பக்கத்து கடைக்காரர், “அவர் சாப்பிடச் சென்றுள்ளார். இப்போ வந்துடுவார். கடையைப் பூட்டாதீங்க” என்றவரிடம் அநாகரீகமாக பேசிய காவலர் கடையைப் பூட்டியுள்ளார். சில நொடிகளில் கடையின் உரிமையாளரான யுவசிவராமன் வந்தவுடன் போலீஸ்காரர் நேவிஸ் பிரிட்டோ அங்கிருந்து சென்றிருக்கிறார். அது சமயம் யுவசிவராமன் போலீஸ்காரர் மகனிடம், “நான் உனக்கு முடி வெட்டினேனா” என்று கேட்டதற்கு, “இல்லை” என்று பதிலளித்துள்ளான். அதன் பிறகே போலீஸ்காரர் தவறான கடைக்கு வந்து பூட்டிச் சென்றது தெரியவந்தது.

 

நடு பஜாரில் கடை ஒன்றை காவலர் அடாவடியாகப் பூட்டிய சம்பவம் நகர வியாபாரிகள் மத்தியில் அதிர்ச்சியையும் பதைபதைப்பையும் ஏற்படுத்த, காவலர் நடந்த கொண்டது, அவரின் அத்துமீறல் பேச்சுக்கள் தொடர்பான வீடியோ வைரலாக, இதனையறிந்த மாவட்ட எஸ்.பி.யான சரவணன் அதிரடி நடவடிக்கையாக போலீஸ்காரர் நேவிஸ் பிரிட்டோவை ஆயுதப்படைக்கு மாற்றி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

 


 

Next Story

‘புருவத்தில் இருந்த முடி கூட கொட்டிவிட்டது’ - கடிதம் எழுதி வைத்துவிட்டு இளைஞர் தற்கொலை

Published on 07/11/2022 | Edited on 07/11/2022
'Even the hair on the eyebrow has fallen out'

 

தலைமுடி கொட்டும் பிரச்சனைக்காக சிகிச்சை எடுத்து வந்த இளைஞர் அதற்கான மருந்து சாப்பிட்டு வந்த நிலையில் பயனளிக்காததால் தன்னுடைய இந்த நிலைக்கு மருத்துவரே காரணம் என்று எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரளாவில் நிகழ்ந்துள்ளது.

 

கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்தவர் பிரசாந்த். இவர் தலைமுடி கொட்டும் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு அவதியடைந்து வந்துள்ளார். இதற்காகக் கடந்த 2014 ஆம் ஆண்டிலிருந்து ரஃபிக் என்ற மருத்துவரிடம் மருந்து மாத்திரைகளை வாங்கி சாப்பிட்டு வந்துள்ளார் பிரசாந்த். தொடர்ந்து மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் முடி கொட்டுவது நிற்கவில்லை. இதனால்  வேதனையடைந்த பிரசாந்த் தற்கொலை செய்ய முடிவெடுத்து, 'மருத்துவர் ரஃபிக் கொடுத்த மருந்துகளால் என்னுடைய புருவத்தில் இருந்த முடி கூட கொட்டிவிட்டது. தன்னைப் பார்ப்பவர்கள் கேலி செய்கின்றனர்' என்று கடிதம் எழுதி வைத்துவிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இந்தத் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.