Skip to main content

மாநிலங்களவைத் தேர்தல்- கர்நாடகாவில் புதிய திருப்பம்! 

Published on 10/06/2022 | Edited on 10/06/2022

 

State level elections - a turning point in Karnataka!

 

மகாராஷ்டிராவில் 6 இடங்கள், கர்நாடகாவிலும், ராஜஸ்தானிலும் தலா 4 இடங்கள், ஹரியானாவில் 2 இடங்கள் என 16 மொத்தம் இடங்களுக்கு இன்று (10/06/2022) வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த மாநிலங்களில் போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இல்லாத அரசியல் கட்சிகளும், சுயேச்சைகளும் வேட்பாளர்களாக களமிறங்கி உள்ளதால், தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. 

 

அதன் தொடர்ச்சியாக, கர்நாடகாவில் சட்டப்பேரவை வளாகத்தில் மாநிலங்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் வாக்களித்து வருகின்றனர். அந்த வகையில், மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஸ்ரீநிவாச கவுடா, தனது கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களிக்காமல், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார். இது அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 

இது குறித்து பேட்டியளித்த ஸ்ரீநிவாச கவுடா எம்.எல்.ஏ., தனக்கு காங்கிரஸ் கட்சிப் பிடிக்கும் என்பதால், அந்த கட்சி வாக்களித்ததாகத் தெரிவித்துள்ளார். 

 

மதசார்பற்ற ஜனதா தளக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி கூறுகையில், "தனது கட்சி எம்.எல்.ஏ.க்களை காங்கிரஸ் கட்சி விலைக்கு வாங்க முயற்சி செய்து வருகிறது. முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா மதசார்பற்ற ஜனதா தள எம்.எல்.ஏ.க்களைத் தொடர்புக் கொண்டு பேரம் பேசி வருகிறார்" என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளார். 

 

கர்நாடகாவில் காலியாக உள்ள நான்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு பா.ஜ.க. சார்பில் மூன்று பேரும், காங்கிரஸ் சார்பில் இரண்டு பேரும், மதசார்பற்ற ஜனதா தளம் சார்பில் ஒருவரும் போட்டியிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


 

சார்ந்த செய்திகள்

Next Story

'வாக்களித்த அனைவருக்கும் நன்றி'-பிரதமர் மோடி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
'Thank you to all who voted' - PM Modi

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற முதல் கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில் பிரதமர் மோடி வரவேற்று எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், 'முதல்கட்ட வாக்குப்பதிவு நல்ல வரவேற்பை கொண்டுவந்துள்ளது. இன்று வாக்களித்த அனைவருக்கும் நன்றி. இன்றைய வாக்கெடுப்பில் இருந்து சிறப்பான கருத்துக்கள் வருகிறது. இந்தியா முழுவதும் மக்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு அதிக எண்ணிக்கையில் வாக்களிக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது' என தெரிவித்துள்ளார்.

Next Story

பாஜக-விசிக மோதல்; ஒருவருக்கு மண்டை உடைப்பு

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
BJP-vck clash; One suffered a fractured skull

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

அந்த வகையில் தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறவுள்ளது.  இந்நிலையில் காலை 7 மணி முதல் வாக்காள பெருமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதேபோன்று அரசியல் கட்சி தலைவர்கள், வேட்பாளர்கள் என பலரும் தங்களின் வாக்குகளை வாக்குச்சாவடிகளில் செலுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் அரியலூரில் பாஜக மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பினருக்கிடையே நடைபெற்ற மோதலில் ஒருவரின் மண்டை உடைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே நரசிங்க பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக மற்றும் விசிகவினர் இடையே மோதல் ஏற்பட்டது. வாக்குச்சாவடி முகவர்களுக்கு உணவு கொடுக்க சென்ற போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மோதல் வெடித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் ஒருவரின் மண்டை உடைந்துள்ளது. மோதலில் காயமடைந்த அருண், அஜித் ,செல்வகுமார் ஆகியோர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அங்கு வாக்குப்பதிவு ஒரு மணி நேரத்திற்கு மேலாக பாதிக்கப்பட்டுள்ளது.