Skip to main content

இரண்டாம் உலகப்போரின் குண்டு!

Published on 17/12/2019 | Edited on 17/12/2019

 

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு என்ற பெயரில் தமிழில் ஒரு சினிமா வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது.  இந்நிலையில், உண்மையிலேயே இரண்டாம் உலகப்போரின் குண்டு ஒன்று தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.  பேராபத்தை ஏற்படுத்தும் முன்பு அக்குண்டை செயலிழக்கச்செய்துவிட்டனர்.  

 

s

 

இத்தாலியின் தெற்கு பகுதியில் அபுலியா பிராந்தியத்தில் உள்ள துறைமுக நகரமான பிரிந்தியில், ஒரு தியேட்டரை சீரமைக்கும்  பணிகள் நடந்து வந்தது.  அப்போது  கட்டுமான பணிக்காக குழி தோண்டியபோது வெடிக்காத வெடிகுண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதனை ஆய்வு செய்ததில் அக்குண்டு இரண்டாம் உலகப்போரின் போது 1941-ம் ஆண்டு இத்தாலி மீது இங்கிலாந்து வீசிய வெடிகுண்டு என தெரியவந்தது.

 

ஒரு மீட்டர் நீளமும், 200 கிலோ எடையையும் கொண்ட அந்த வெடிகுண்டை பல்வேறு கட்ட ஆராய்ச்சிகளுக்கு பிறகு ரிமோட் மூலம்  செயலிழக்க செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர்.  இதனால் இதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட பகுதியில் இருந்து 1,617 மீட்டர் சுற்றளவு பகுதியில் வசிக்கும் சுமார் 54 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற்றப்பட்டனர். பிரிந்தி நகரில் உள்ள உள்ளூர் விமான நிலையம், ரெயில் நிலையம், 2 மருத்துவமனைகள் மற்றும் சிறைச்சாலை ஆகியவை பாதுகாப்பு கருதி மூடப்பட்டன. மூத்த ராணுவ அதிகாரிகளின் கண்காணிப்பில் வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் திட்டமிட்டப்படி ரிமோட் மூலம் அந்த வெடிகுண்டை வெற்றிகரமாக செயலிழக்க செய்தனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

'மூன்றாம் உலகப்போருக்கு இது காரணமாகிவிடும்...' எச்சரிக்கும் ரஷ்யா

Published on 13/10/2022 | Edited on 13/10/2022

 

 Definitely World War III...Warning Russia

 

பல மாதங்களாக உக்ரைன் ரஷ்யா இடையே போர் சூழ்நிலை வந்த நிலையில் மீண்டும் ரஷ்யா தீவிர தாக்குதலை உக்ரைன் மீது தொடுத்து வருகிறது. உக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தீவிரத் தாக்குதலை நடத்தி வரும் நிலையில் அண்மையில் டினிப்ரோ நகர் பகுதியில் சாலையில் குண்டுமழை பொழியும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருமானால் கண்டிப்பாக மூன்றாம் உலகப் போர் உருவாகும் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

ரஷ்ய கூட்டமைப்பின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டியளித்துப் பேசுகையில். நேட்டோ அமைப்பில் உக்ரைன் நாட்டை இணைப்பதற்கு மேற்கத்திய நாடுகள் உதவி செய்வதன் மூலம் மூன்றாம் உலகப் போர் ஏற்பட அந்த நாடுகளே நேரடி காரணமாக அமையும் என்று குறிப்பிட்டார்.

 

Next Story

செயலிழக்க செய்யும்போது வெடித்துச் சிதறிய இரண்டாம் உலகப்போர் வெடிகுண்டு...

Published on 14/10/2020 | Edited on 14/10/2020

 

ww2 material found in poland

 

இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட குண்டு ஒன்று செயலிழக்க வைக்கும் போது வெடித்துச் சிதறிய சம்பவம் போலந்து நாட்டில் நடந்துள்ளது. 

 

இரண்டாம் உலகப்போரின் போது வீசப்பட்ட வெடிக்காத குண்டுகள் பல்வேறு நாடுகளில் கண்டறியப்படுவது வாடிக்கை. அந்தவகையில், போலந்து நாட்டின் பயாஸ்ட் கால்வாயில் இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. 5,000 கிலோவுக்கு மேல் கொண்ட இந்த வெடிகுண்டு 1945 ஆம் ஆண்டு இங்கிலாந்தால் வீசப்பட்டது எனக் கண்டறியப்பட்டது. 

 

இந்த வெடிகுண்டைச் செயல் இழக்கச் செய்யும் பணியில் போலந்து கடற்படை தீவிரமாக ஈடுபட்டிருந்த நிலையில், அது திடீரென நீருக்கடியில் வெடித்துச் சிதறியது. இதனால், கால்வாயின் மேல் பல மீட்டர் உயரத்திற்கு தண்ணீர் அலை போல எழுந்தது. இருப்பினும், தண்ணீருக்கு அடியில் வெடித்த இந்த குண்டு காரணமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை என போலந்து தெரிவித்துள்ளது. இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட மிகப்பெரிய குண்டுகளில் இதுவும் ஒன்று எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.