Skip to main content

மனுக்கள் தள்ளுபடி.. நாளை தூக்கு தண்டனை...

Published on 02/03/2020 | Edited on 02/03/2020

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், நாளை அவர்களை தூக்கிலிடுவது உறுதியாகியுள்ளது.

 

nirbhaya convicts plea dismissed

 

 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் நான்கு பேரும் மார்ச் 3 ஆம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்பட வேண்டும் என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஏற்கனவே தூக்கிலிடப்படும் தேதி இருமுறை அறிவிக்கப்பட்டு, பின்னர் தேதி மாற்றப்பட்டது. இந்நிலையில், இந்த தூக்கு தண்டனையை தாமதப்படுத்தும் விதமாக குற்றவாளி அக்சய் குமார், பவன் குப்தா ஆகியோர் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தரப்பில், தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 27-ந்தேதி மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை இன்று காலை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதேபோல மற்றொரு குற்றவாளியாக அக்சய் குமார் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவின்படி நாளை குற்றவாளிகள் நான்கு பேரும் தூக்கிலிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

சார்ந்த செய்திகள்