Skip to main content

முல்லை பெரியாறு அணைக்கு மாற்றா!!! இப்போதாவது தமிழக அரசு விழிக்குமா???

Published on 24/10/2018 | Edited on 24/10/2018
mullai periyar

 

தேனி மாவட்டத்தில் உள்ள தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளது கர்னல் பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை உள்ளது.


தென்தமிழகத்தில் உள்ள தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் ஆகிய ஐந்து மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக முல்லைப் பெரியாறு அணை தண்ணீர் இருந்து வருவதால் அப்பகுதியை சேர்ந்த மக்கள் பென்னிகுயிக்கை தெய்வமாக வணங்கியும் வருகிறார்கள்.


இந்த நிலையில்தான் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திடீரென முல்லைப் பெரியாறு அணை அருகே புதிய அணை கட்டுவதற்கான சாத்தியகூறுகள் இருப்பதாக கூறி கேரளா அரசுக்கு அனுமதி வாங்கியுள்ளது.

கடந்த 123 ஆண்டுகளுக்கு முன்பு கர்னல் பென்னிகுயிக் கட்டிய முல்லைப் பெரியாறு அணை பழமையாக இருந்தாலும் அணை பலமாக இருக்கிறது என்று ஆய்வு அறிக்கை மூலம் சுப்ரீம் கோர்ட்டே சான்றிதழ் கொடுத்து  இருக்கிறது. அதோடு உலகிலையே மற்ற அணைகளை விட முல்லைப் பெரியாறு அணைதான் பலமாக  இருக்கிறது  என்ற பேச்சும் இருந்து வருகிறது. அப்படி இருக்கும்போது கேரள அரசு இந்த முல்லைப்பெரியாறு அணை பழமையாக இருப்பதால் அது உடைந்தால் கேரளா மிகப்பெரிய அழிவை சந்திக்கும் என்று தொடர்ந்து  கூறி வந்தது.


இந்த நிலையில்தான் கடந்த மாதம் பெய்த மழையால் கேரளாவில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு மக்கள் பெரிதும் தவித்து வந்தனர்.  அப்படி இருந்தும்கூட தென் மேற்கு பருவமழை பெய்யாததால் ஒரு சொட்டு தண்ணீர் கூட முல்லைப் பெரியாறு அணைக்கு வரவும் இல்லை வெளியே  போகாமல் இருந்து வந்த நிலையில்தான் திடீரென பெய்த மழையால்  அணையின் நீர் மட்டம் 142 அடியை எட்டியது   அப்படி இருந்தும் கேரள  அரசு 142 அடிக்கு தண்ணீரை தேக்க வேண்டாம் 136 அடியாக குறைக்க சொல்லி தமிழக  அரசை வலியுறுத்தியும் தமிழக  அரசான எடப்பாடி அரசு செவிசாய்க்கவில்லை.
 

இந்த நிலையில் தான் திடீரென கேரள அரசு சமீபத்தில் பெய்த மழை வெள்ளத்தால் கேரளா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது  என்பதை  காரணம் காட்டி முல்லைப் பெரியாறு அணைக்கு மாற்றாக வேறு அணை கட்ட அனுமதி வழங்க வேண்டும் என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தை கேரள அரசு நாடியது.
 

அதன் அடிப்படையில் தான் முல்லைப் பெரியாறு அணையில்  புதிய அணை கட்டுவதற்கான சாத்தியகூறுகள்  குறித்து  ஆய்வு நடத்த கேரளவுக்கு ஏழு நிபந்தனைகளுடன் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திடீரென அனுமதி வழங்கியுள்ளது.  ஆனால்  இந்த ஏழு நிபந்தனைகளில் ஒன்று புதிய அணை கட்ட வேண்டும் என்றால்  தமிழக அரசிடம் அனுமதி வாங்க வேண்டும், ஏன் என்றால் முல்லைப் பெரியாறு அணை தமிழகத்திற்கு சொந்தம் என்பதை சுட்டிக்காட்டி இருக்கிறார்கள். இருந்தாலும் கடந்த 2014 ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் மத்திய சுற்றுச்சுழல் அமைச்சகம் அனுமதி வழங்கி இருப்பதால் அதை எதிர்த்து இந்த  எடப்பாடி அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்து தமிழக உரிமையை நிலைநாட்ட முன் வர வேண்டும் எனபதை தென் மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.