Skip to main content

நாங்களும் இலங்கை மக்கள்தானே…ஈழப்போர் கொடுமைகள்!

Published on 20/05/2019 | Edited on 20/05/2019

ஈழப்போர் இறுதிக்கட்டத்தை நெருங்கிக்கொண்டிருந்த 2009-ஆம் ஆண்டு மே மாதம் இலங்கை ராணுவம் முள்ளிவாய்க்காலை மையமிட்டிருந்தது. முல்லைத்தீவின் மிகக்குறுகிய அந்தப் பிரதேசத்தின் அதிலும் குறுகிய பகுதியில் குவிந்திருந்த மக்களைக் கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி கொன்று குவித்தது. ஏறக்குறைய 70 ஆயிரம் பேர் கொல்லப்பட... சரணடைந்த பல்லாயிரக்கணக்கானோர் காணாமல் ஆக்கப்பட்டனர்.

 

srilnkan



இந்த இனப்படுகொலை நடந்துமுடிந்து பத்தாண்டுகள் கடந்தும், ஈழப்போரில் உயிரிழந்த இராணுவ வீரர்களுக்காக "மே 18'-ஐ வெற்றிநாளாகக் கொண்டாடும் இலங்கை அரசு, தமிழ் மக்கள், முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்துகிறது ஒவ்வொரு ஆண்டும். இந்தாண்டு, ஏப்ரல் 21-ல் ஈஸ்டர் ஞாயிறு அன்று இலங்கை தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தைக் காரணம்காட்டி, முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்தவிடாமல் செய்கிறது அரசு நிர்வாகம். 

 

srilankan people



இது ஒருபுறமிருக்க, தேவாலயங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்காக, வடமேற்குப் பகுதியிலுள்ள குலியப்பிட்டியா, ஹெட்டிபோலா, பிங்கிரியா மற்றும் டும்மாளசூரியா ஆகிய பகுதிகளில் இஸ்லாமியர்கள் மீதான பகுதிகள் மீது கொடூரத் தாக்குதல்கள் அரங்கேறின. மசூதிகள், வீடுகள், கடைகள் என இஸ்லாமியர்கள் குறிவைத்துத் தாக்கப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டனர். இதனால், அரையுத்தக் களம்போல் காட்சியளிக்கும் இலங்கையின் பதற்றத்தை ஜிகாதிகளுக்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கை என்ற பெயரில், தமிழர்களுக்கு எதிராக திசைதிருப்பி விட்டிருக்கிறது இலங்கை அரசு. 

 

 

srilankan issues



பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சிகளை மக்களோடு சேர்ந்து நடத்திவரும் சமூக சிற்பிகள் அமைப்பின் அமைப்பாளர் முல்லைத்தீவைச் சேர்ந்த ஷெரீன் சேவியரிடம் பேசியபோது, "குண்டு வெடித்த கொழும்பு மாகாணத்தைவிட அதிகப்படியான சோதனைச்சாவடிகள் தமிழர்கள் வசிக்கும் வடக்குப்பகுதியில் இருக்கின்றன. ஆயிரம் கேள்விகளைக் கேட்டபின்பே அனுமதிக்கின்றனர் இராணுவத்தினர். யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் படமும், புலிகளின் பதாகைகளும் கண்டெடுக்கப்பட்டதால், மாணவர் தலைவரும், செயலாளரும் கைது செய்யப்பட்டனர். அதனூடாகவே இந்தப் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. அந்தப்படம் பல ஆண்டுகளாக அங்குதான் இருந்தது. இதற்குமுன் இராணுவத் தளபதிகள் வெளியிட்ட புத்தகங்களில்கூட பிரபாகரன் படம் இடம்பெறத்தான் செய்தது. ஒடுக்குவது ஒன்றே அவர்களின் குறிக்கோள். நாங்கள் மே 12-ல் தொடங்கி நினைவேந்தல் நிகழ்ச்சிகளை வீடுகளிலும், கோவில்களிலும் நடத்திவருகிறோம். மே 17-ஆம் தேதியோடு முடித்துக்கொள்வோம் என்றார் அவர்.


முள்ளிவாய்க்கால் துயரத்தை நேரில்கண்ட சிவகுமார் மலர்ச்செல்வி, தமிழ் மக்களின் நியாபகங்களையும், தியாகங்களையும் இலங்கை அரசு மட்டுப்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட நிலையிலிருந்து நாங்கள் மாறோணுமென்று நன்மைகள் செய்து நாங்கள் மாறப்படயில்லை. இழந்த உறவுகளை நினைவுகளை நினைவுகூருவது எங்கள் உரிமை. ஆனால், எங்கள் விருப்பத்தைக்கூட வெளிப்படுத்த முடியாத நிலையில் கோவில்களில் நினைவேந்தலை நடத்துகிறோம். நாங்களும் இலங்கை மக்கள்தானே''…என்றார் ஆதங்கத்துடன். 
 

 

Next Story

படையெடுக்கும் புலிகள்; பாதுகாப்பு வளையத்தில் மூணாறு !

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
 Invading Tigers; Munnar in the observation ring

கோடை வெயிலின் தாக்கத்தால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக கிராமங்களுக்கு நுழைவது தொடர்கதையாகி வருகிறது. வனத்துறை சார்பில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் தொட்டிகள் திறக்கப்பட்டு வரும் நிலையில் அதையும் மீறி பல்வேறு இடங்களில் யானை, சிறுத்தை உள்ளிட்ட விலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி உணவிற்காக கிராமங்களுக்குள் நுழைவது வாடிக்கையாகி வருகிறது.

அண்மையில் மயிலாடுதுறையில் புகுந்த சிறுத்தை தற்பொழுது வரை மர்மமாகவே நீடித்து வருகிறது. இந்நிலையில் தமிழக-கேரள எல்லையான மூணாறு பகுதியில் சர்வ சாதாரணமாக புலி நடமாட்டம் இருப்பது அந்த பகுதி மக்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. கன்னிமலா பகுதியில் உள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் புலிகள் நடமாட்டம் இருப்பதாக தோட்டத் தொழிலாளர்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தற்போது இது தொடர்பாக வெளியாகி உள்ள வீடியோ ஒன்றில் மூன்று புலிகள் தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்து வனப்பகுதிக்குள் நுழைவது போன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த புலிகளை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் இறங்கியுள்ளனர். புலிகள் நடமாட்டம் இருப்பதால் அந்தப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என வனத்துறை சார்பில் அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது.

Next Story

“பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல; தீராத வன்மம்” - சு.வெங்கடேசன்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
BJP unending anger towards Tamil Nadu says Su. Venkatesan

திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களும் அதிக கனமழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.

அதே சமயம் மிக்ஜாம் புயல் மற்றும் தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு நிவாரணம் கோரி தமிழக முதலமைச்சரும், தலைமைச் செயலாளரும் மத்திய அரசுக்கு பலமுறை கடிதம் அனுப்பியும் மத்திய அரசு  நிதி வழங்காமல் இருந்தது. இந்த நிலையில்,  தமிழ்நாட்டில் ஏற்பட்ட மிக்ஜாம் புயல் நிவாரண நிதியாக ரூ.285 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், தமிழகத்தில் 2023 டிசம்பர் மாதத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்காக ரூ.397 கோடி வழங்கவும் மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதில் முதற்கட்டமாக ரூ.285 கோடி மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிதியில் இருந்து ரூ.115 கோடியை மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே போல், வெள்ள பாதிப்புக்காக மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ள ரூ.397 கோடி நிதியில் இருந்து ரூ.160 கோடியை தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு விடுவித்துள்ளது. அதே சமயம் கர்நாடகாவிற்கு வறட்சி நிவாரணமாக ரூ.3,454 கோடியை மத்திய அரசு அறிவித்துள்ளது.

மிக்ஜாம் புயல், வெள்ள பாதிப்புகளுக்காக தமிழ்நாடு அரசு ரூ.38,000 கோடி நிவாரணம் வழங்க கோரியிருந்த நிலையில், மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு குறைந்தபட்ச அளவில் நிவாரண நிதி வழங்கியுள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் மதுரை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசன் பாஜக தமிழகத்திற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை செய்வதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “கர்நாடகாவில் முதல் கட்டம் சாதகமாக இல்லை போல, வறட்சி நிவாரணம் என ரூ.3454 கோடி அறிவிப்பு. தமிழ்நாட்டிற்கு வஞ்சனைக்கு மேல் வஞ்சனை. மிக் ஜாம் புயல் மற்றும் வெள்ளத்திற்கு ரூ.275 கோடி மட்டுமே. தமிழ்நாடு  கேட்டதோ 38,000 கோடி. பாஜகவுக்கு தமிழகத்தின் மீது இருப்பது கோபமல்ல… வன்மம். தீராத வன்மம்” எனக் கடுமையாக சாடியுள்ளார்.