Skip to main content

பெர்சண்டேஜ் உலகில் நேர்மைக்கு ஏது இடம்? குட்டிச்சுவரான நெடுஞ்சாலைத் துறை!

Published on 17/07/2020 | Edited on 17/07/2020

 

wall

 

“நெடுஞ்சாலைத்துறை பொறியாளர்களில் பலரும், தங்களது அதிகாரத்தை, மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துவது இல்லை. தலைமைப் பொறியாளர், கண்காணிப்பு பொறியாளர், கோட்ட பொறியாளர், உதவி கோட்ட பொறியாளர், உதவி பொறியாளர் என 5 அடுக்குமுறை உள்ளது. இவர்கள், சாலை மற்றும் இதர பணிகளுக்கு மதிப்பீடு செய்து, பணத்தை அனுமதிக்கும் அதிகாரத்தை, நேர்மையாகப் பயன்படுத்தினால், இத்துறையில் ஆண்டுக்கு ரூ.3,000 கோடி வரை, மக்கள் பணம் விரயமாவதைத் தடுக்க முடியும். இவர்களோ, அரசியல்வாதிகள் எப்படியெல்லாமோ பணத்தைச் சுருட்டுவதற்கு வழி ஏற்படுத்தி தருகின்றனர். வெளிப்படையாக கமிஷன் பெறுவதும் இத்துறையில் அங்கீகரிக்கப்படுகிறது’’ என்கிறார் அத்துறையின் நேர்மையான பொறியாளர் ஒருவர்.


தற்போது, கோட்டபொறியாளருக்கு, திட்ட மதிப்பீடு ஒன்றுக்கு, ரூ.2 லட்சம் வரை அனுமதி வழங்கும் அதிகாரம் நடைமுறையில் உள்ளது. இந்த அதிகாரத்தை வைத்து, தமிழகம் முழுவதும், பெரிய அளவில், கொள்ளையடிக்கின்றனர். அதாவது, தடுப்புச் சுவர் என்ற பெயரில், ரூ.2 லட்சத்துக்கு மதிப்பீடு வழங்கும் அதிகாரம், தவறாகப் பயன்படுத்தப்படுகிறது.

 

ஒரு அலுவலகத்திற்கு குறைந்தபட்சம் 50 தடுப்புச் சுவர்களுக்காவது எஸ்டிமேட் தயாரிப்பார்கள். அதற்கான ஒப்பந்தப் பணிகளை, சின்ன ஒப்பந்தக்காரர்கள் மூலம் செய்வதற்கு கோட்ட பொறியாளர் அனுமதியளிப்பார். அவர்களிடமிருந்து 30 பெர்சன்டேஜ் கமிஷனை நேரடியாக, அவர் பெற்றுக்கொள்வார். அதன்பிறகு, உதவி கோட்ட பொறியாளருக்கும், உதவி பொறியாளருக்கும் தலா 5 பெர்சன்டேஜ் என, மொத்தம் 40 பெர்சன்டேஜ், முன்கூட்டியே போய்ச் சேர்ந்து விடும். அடுத்து, விரைவாகப் பணிகளை முடிக்கச் செய்து, ஒப்பந்தக்காரர்கள் பில் தொகையைப் பெறும்போது, அலுவலகச் செலவுக்கென்று 10 பெர்சன்ட் தொகையைக் கொடுத்தாக வேண்டும். ஆக, தடுப்புச்சுவரின் 2 லட்ச ரூபாய் மதிப்பீட்டில், ரூ.1 லட்சம், பெர்சன்டேஜ் கணக்கில் போய்விடும். அதனால், மதிப்பீட்டில் உள்ளபடி பணி நடப்பதில்லை. தேவையே இல்லாத இடத்தில் தடுப்புச் சுவர் கட்டவேண்டும் என்று மதிப்பீடு செய்வதால், ஒரு கோட்டத்தில் 5 பிரிவாக அலுவலகங்கள் இருந் தால், குறைந்தபட்சம் ரூ.5 கோடி விரயமாகிவிடும். தமிழகம் முழுவதும் 300 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. ஒரு அலுவலகத்துக்கு ரூ.5 கோடி என்றால், மொத்தம் ரூ.1,500 கோடி ஆகிறது. ஆண்டுக்கு இருமுறை என்பதால், ரூ.3,000 கோடி வரை ஊழல் நடக்கிறது. கரோனா காலத்திலும் ஊழல் குறையவில்லை.

 

"திட்ட மதிப்பீடு மற்றும் தடுப்புச்சுவர் கட்ட வேண்டிய அவசியம் உள்ள இடங்களைத் தேர்வு செய்யும் அதிகாரம், அந்தந்த பகுதி மக்களிடம் இருந்தால் ஊழலைத் தடுக்கலாம். அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டால், 90 பெர்சன்ட் ஊழலை இல்லாமல் செய்துவிட முடியும்'' என்றார் நேர்மையான அதிகாரி.

 

பெர்சண்டேஜ் உலகில் நேர்மைக்கு ஏது இடம்?

 

-ராம்கி

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.