Skip to main content

தையல் கடையிலிருந்து ஒரு தமிழ் பேராசிரியர்...

Published on 12/03/2018 | Edited on 12/03/2018

மார்ச் 12 – வரலாற்று ஆய்வாளர் மா.ராசமாணிக்கம்.

 

நல்லது யார் சொன்னாலும் கேட்டுக்கொள்ளவேண்டும், யார் சொன்னார், எதற்காக சொன்னார் என ஆராய்ச்சி செய்யக்கூடாது, சந்தேகிக்கூடாது என்கிற கோட்பாட்டில் வாழ்க்கையை தொடங்கியவருக்கு வாழ்க்கையில் வளர்ச்சியே கிடைத்தது. அவர் மறைந்தும் இன்றளவும் பட்டபடிப்பு படிக்கும் மாணவர்கள் அவர் எழுதிய நூல்களை தான் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். தமிழ் இயக்கங்களும் அவர் எழுதிய நூலைத்தான் இன்றும் சான்றாக காட்டுக்கிறார்கள் அவது வரலாற்று ஆய்வாளர் பேராசிரியர் ராசமாணிக்கம்.

 

ஆந்திரா மாநிலம் சித்தூரில் வசித்த மாணிக்கம் – தாயம்மாள் தம்பதியின் மகனாக ராஜா பிறந்தார். இவருடன் பிறந்தவர்கள் 7 பேர் ஆனால் பிறந்த சில ஆண்டுகளிலேயே அதில் 5 பேர் இறந்துவிட்டனர். இறுதியில் அந்த தம்பதியரின் மகன்காக வளர்த்தது ராஜாவும், அவரது அண்ணன் இராமகிருஷ்ணனும் தான்.

 

மாணிக்கம் அரசாங்கத்தின் வருவாய்த்துறையில் நில அளவையர் ( சர்வேயர் ) துறையில் அதிகாரியாக பணியில் இருந்ததால் அடிக்கடி இடமாறுதல் செய்யப்பட்டனர். ராஜாவுக்கு 9 வயதாகும்போதே அதாவது 1916ல் அவரது குடும்பம் மதுரைக்கு வந்தது. மதுரை வந்த இரண்டு ஆண்டுகளில் ராஜாவின் தந்தை மாணிக்கம் இறந்துப்போனார். இதனால் குடும்பம் நிலைக்குலைந்தது. வாரிசு அடிப்படையில் மாணிக்கத்தின் வேலை அவரது மகன் இராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. ஆனால் இவரும் ஊர் ஊராய் பணி மாறுதலில் அனுப்பிக்கொண்டே இருந்தது அரசாங்கம்.

 

maa.rajamanikkanar
 

1921ல் திண்டுக்கல்லில் இயங்கிய கிருஸ்த்துவ மிஷனரி நடத்திய பள்ளியில் சேர்க்கப்பட்டார். தமிழ் வழியில் முறையாக பாடங்களை கற்க துவங்கினார். நன்னிலம், தஞ்சாவூர், திண்டுக்கல் என அடுத்தடுத்து பணி மாறுதல் கிடைக்க அங்கு குடும்பம்மே சென்றது. இதனால் ராஜாவின் படிப்பு பாதிக்கப்பட அவரது அண்ணன் அவரை குடும்ப சூழ்நிலை கருதி தையல் கடையில் காஜா பையனாக வேலைக்கு சேர்த்துவிட்டார்.

 

ராஜாவின் படிப்பு ஆர்வத்தை கண்ட தஞ்சாவூரில் இருந்த தமிழாசிரியர் அவரை படிக்க வைக்க வேண்டியதன் அவசியத்தை அவரது அண்ணனிடம் எடுத்துக்கூறி தொடர்ந்து படிக்கவைத்தார். பள்ளி படிப்பு மீண்டும் துவங்கிய சமயத்தில் கரந்தை தமிழ்சங்க முன்னோடிகளான கரந்தை கவியரசு வெங்கடாஜம், உமாமகேஸ்வரன், உ.வே.சா, ராகவையங்கார் போன்றோர் மூலம் தமிழ்ழை நன்றாக கற்றார்.

 

அந்த தமிழ் பத்தாம் பாரம் என்கிற பத்தாம் வகுப்பு மட்டும்ம படித்த ராஜாவுக்கு, தஞ்சாவூர் ஒரத்தநாடு உயர்நிலைப்பள்ளியில் கணக்காளராக பணியில் சேர்ந்தார். அந்த பணி அவருக்கு பிடிக்கவில்லை. அவரின் தந்தையின் நண்பர் 1928ல் சென்னை வண்ணாரப்பேட்டையில் இயங்கிய தியாகராயர் பள்ளியில் தமிழாசிரியராக பணி கிடைக்க செய்தார். அந்த பணியில் விரும்பி ஏற்றுக்கொண்டார். அதன்பின் ராஜா என்பது ராசமாணிக்கம்மானது. 1928 முதல் 1936 வரை சுமார் 8 ஆண்டுகள் அங்கு பணியாற்றினார். அங்கு பணியாற்றும்போதே தனது 23வது வயதில் 1930 செப்டம்பர் 9ந்தேதி கண்ணம்மா என்பவரை திருமணம் செய்துக்கொண்டு குடும்ப வாழ்விலும் இணைந்தார்.

 

pallava history book
 

பணியாற்றிய சமயத்திலேயே மாணவர்களுக்கான பாடல்நூல்களை தொகுத்து எழுதினார். நாற்பெரும் வள்ளல்கள், ஹர்சவர்தன், மூவேந்தர், ஆப்பிரகாம்லிங்கம், முசோலினி என பெருந்தலைகள் பற்றிய புத்தகங்களை எழுதினார். அப்போது அவரது கல்வி பள்ளிக்கல்வி மட்டும்மே. ஆசிரியராக பணியாற்றிக்கொண்டே படிக்கவும் செய்தார். 1936ல் பட்ட படிப்புகளை படித்து முடித்தார். பணியில் தமிழாசிரியராகவும் பதவி உயர்வு பெற்றார்.

 

பல்லவர் வரலாறு, சோழர் வரலாறு, சிந்துசமவெளி வரலாறு, பெரியபுராண ஆராய்ச்சி போன்ற நூல்கள் இவர் எழுதினார். தமிழர் திருமண நூல் என்கிற நூலை எழுதினார். அதில் தமிழர் திருமணம் ஆடம்பரமானதல்ல, செலவற்ற திருமணம் தான் ஆதிக்காலம் முதல் தமிழர்கள் செய்து வந்தனர் என ஆய்வு குறிப்புகளோடு எழுதினார். அதோடு, அதில் ஐதீக முறைகளை எதிர்த்தார். திராவிட கழகத்தோடு அவருக்கிருந்த நெருக்கம்மே அவரை வெளிப்படையாக எழுத வைத்தது.

 

Chola
 

1947ல் சென்னை விவேகானந்தர் கல்லூரியில் தமிழ்த்துறையில் விரிவுரையாளராக பணியில் சேர்ந்தார். 1953 வரை அந்த பணியில் இருந்தார். அங்கிருந்து மதுரை தியாகராய கல்லூரியின் தமிழ்த்துறை தலைவராக பதவி உயர்வில் சென்றார். 1959ல் சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையின் இணை பேராசிரியராக பதவி உயர்வில் வந்தவர் சுமார் 8 ஆண்டுகள் அந்த பணியில் இருந்தார்.

 

இவர் கல்லூரியில், பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையில் பணியாற்றியபோது சைவசமய வளர்ச்சி, பத்துப்பாட்டு ஆராய்ச்சி போன்ற நூல்கள் எழுதப்பட்டன. ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டமும் பெற்றார்.

 

சென்னை பல்கலைகழகத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது 1967 மே 26ந்தேதி மாரடைப்பால் காலமானார்.

 

இவர் மறைவுக்கு பின் இவரது சேக்கியார், சோழர் வரலாறு உட்பட 20 நூல்கள் நாட்டுடமையாக்கப்பட்டன. இவர் வரலாற்று ஆசிரியர் மட்டும்மல்ல சிறந்த புதின எழுத்தாளருமானவார். நாட்டுக்கு நல்லவை, தமிழரசி போன்ற புதினங்களையும் எழுதியுள்ளார் ராசமாணிக்கம்.

 

Next Story

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற திண்டுக்கல் தொகுதி வேட்பாளர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Chief Minister Stalin congratulates Dindigul candidate Sachithanantham

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் சிபிஎம். கட்சி சார்பாக போட்டியிட்ட வேட்பாளர் சச்சிதானந்தத்தை திமுக மாநில துணைப் பொதுச்செயலாளரும், ஊரக வளர்ச்சித்துறை அமைச்சருமான ஐ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி ஆகிய இருவருடன் மாவட்டச் செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி செந்தில் குமார் ஆகியோரும் சென்னைக்கு நேரில் அழைத்து சென்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் வாழ்த்து பெற வைத்தனர்.

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறப் போகிறீர்கள் என்ற செய்தி கேட்டு மகிழ்ச்சி அடைந்தேன் எனக் கூறியதோடு எவ்வளவு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவீர்கள் எனக் கேட்டபோது சிபிஎம் வேட்பாளர் சச்சிதானந்தம் சுமார் 3 லட்சம் வாக்குகள் வித்தியசாத்தில் வெற்றி பெறுவேன் எனக்கூறினார். அப்போது உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, இல்லை 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் சிபிஎம் வேட்பாளர் வெற்றி பெறுவார் எனக் கூறினார்.   

அப்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் ஐ.பெரியசாமியை பார்த்து நீங்கள் 5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என கூறுகிறீர்களா? எனக் கேட்டவுடன் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர். அப்போது பேசிய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர், உங்களின் வழிகாட்டுதலின் படி திண்டுக்கல் தொகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தோம். தமிழக அரசின் நலத்திட்டங்களை பாராட்டி திண்டுக்கல் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் திமுக தலைமையிலான கூட்டணிக்கு அமோகமான வாக்குகளை அளித்துள்ளனர் என்றார். இந்த சந்திப்பின் போது  அமைச்சர் துரைமுருகன், அமைச்சர்  ஐ.பெரியசாமி,  அமைச்சர் சக்கரபாணி,  எம்.எல்.ஏ., ஐ.பி.செ ந்தில்குமார், ஆத்தூர் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி, சிபிஎம்.வேட்பாளர் சச்சிதானந்தம் ஆகியோர் உடன் இருந்தனர்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தது குறித்து திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதி சச்சிதானந்தம் கூறுகையில், “திமுக சார்பாக போட்டியிட்ட வேட்பாளர்களின் வெற்றிகளை தெரிந்து கொள்ள எவ்வளவு ஆர்வம் காட்டினாரோ அந்த அளவிற்கு கூட்டணி கட்சி சார்பாக (சிபிஎம்) போட்டியிட்ட எனது வெற்றி குறித்தும் தமிழக முதல்வர் ஆர்வமுடன் கேட்டதும், தொடர்ந்து மக்கள் பணியை சிறப்பாக செய்யுங்கள் என வாழ்த்தியதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நேரத்தில் எனது வெற்றிக்கு அயராது உழைத்த அமைச்சர் ஐ.பெரியசாமிக்கும், அமைச்சர் சக்கரபாணிக்கும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஐ.பி. செந்தில்குமாருக்கும் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகளுக்கும் என்றும் நான் உறுதுணையாக இருப்பேன்” என்று கூறினார்

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.