Skip to main content

அவரை விட்டுட்டுப் போயிரு என மிரட்டல்... சின்னத்திரையில் நடக்கும் குடும்ப பிரச்சனைகள்... வெளிவராத அதிர்ச்சி தகவல்!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

பெரிய திரையான சினிமாவில் ஒரு ஹீரோவும் ஹீரோயினும் காதலித்து திருமணம் செய்து கொள்வார்கள். பெரும்பாலான சினிமா ஜோடிகள் மகிழ்ச்சியாக வாழ்க்கையை நகர்த்துவார்கள். ஆனால் சில ஜோடி களோ திருமணமாகி பத்து வருடம், பதினைந்து வருடம் கழித்துக் கூட விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறுவார்கள்.

 

actress



அதுபோலத்தான் இப்போது சின்னத்திரை சீரியல் நடிகர்கள்—நடிகைகளுக்குள் காதல், கல்யாணம், விவாகரத்து என சகஜமாகிவிட்டது. பொதுவாக இப்போது அனைத்து சேனல்களிலும் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில், பெரும்பாலான பெண் கதாபாத்திரங்களை டெரராகவே காட்டுகிறார்கள். மாமியாரை காலி பண்ண நினைக்கும் மருமகள், தனது மகனுடன் மருமகள் சிரித்துப் பேசுவதை சகிக்க முடியாத மாமியார், அடுத்தவர் குடியைக் கெடுப்பதற்கென்றே குரூரமாக சிந்திக்கும் வில்லிகள் என பல டிசைன்களில் சீரியல் கேரக்டர்கள் வந்து கொண்டிருக்கின்றன. அனைத்து சேனல்களின் சீரியல் கேரக்டர்களும் பெண்களுக்கு அத்துப்படி.
 

actress



அப்படி பெண்கள் ரசிக்கும்-—வெறுக்கும் சீரியல் நடிகைகள் இருவரின் நிஜ வாழ்க்கை குடும்ப—குத்து வெட்டுகள் சமீபத்தில் அடிதடி வரை அரங்கேறி சின்னத்திரை வட்டாரத்தை கிறுகிறுக்க வைத்துள்ளன.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பான ‘ஆபீஸ்’ சீரியல் மூலம் வில்லனாக அறியப்பட்டவர் ஈஸ்வர். "பாவமன்னிப்பு', "சித்திரம் பேசுதடி'. -உட்பட 12-க்கும் மேற்பட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார் ஈஸ்வர். ‘பாவமன்னிப்பு’ சீரியலில் நடிக்கும்போது அதே சீரியலில் தன்னுடன் நடித்த ஜெயஸ்ரீயை காதலிக்க ஆரம்பித்தார் ஈஸ்வர்.

ஜெயஸ்ரீயும் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் ரம்யா கிருஷ்ணன் நடித்து சன் டி.வி.யில் ஒளிபரப்பான "வம்சம்' தான் அவரை வில்லியாக பிரபலமாக்கியது. ஜெயஸ்ரீ நடிகை மட்டுமல்ல, சிறந்த பரதநாட்டியக் கலைஞரும் கூட. மூன்று வருட காதலுக்குப் பின் ஈஸ்வரும் ஜெயஸ்ரீயும் 2016 ஜனவரியில் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ரெத்வா என்ற பெண் குழந்தையும் உண்டு.

 

actress



ஈஸ்வருக்காக தாராளமாக செலவு செய்தார் ஜெயஸ்ரீ. ஆனால் ஈஸ்வரோ குடி,—சூதாட்டம் என தடம் புரள ஆரம்பித்தார். இந்த நிலையில்தான் ஈஸ்வருக்கு இன்னொரு காதல் பிறந்தது. இப்போது ஜி டி.வி.யில் ஒளிபரப்பாகும் "தேவதையைக் கண்டேன்' சீரியலில் நடித்து வரும் ஈஸ்வருக்கு அதே சீரியலில் வில்லியாக நடிக்கும் மகாலட்சுமியுடன் காதல் ஏற்பட்டது. சன் டி.வி.யில் ஒளிபரப்பான ராதிகாவின் "வாணி—ராணி' சீரியல் மூலம் பிரபலமான மகாலட்சுமிக்கு அனில் என்பவருடன் ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

இந்த நிலையில் தான் மகாலட்சுமியை இரண்டாவது திருமணம் செய்யப் போவதாகச் சொல்லி ஜெயஸ்ரீயிடம் விவாகரத்து கேட்டு டார்ச்சர் பண்ண ஆரம்பித்திருக்கிறார்கள் ஈஸ்வரும் அவரது தாய் சந்திராவும். ஒரு கட்டத்திற்கு மேல் பொறுக்க முடியாமல் அடையாறு மகளிர் காவல் நிலையத்தில் ஈஸ்வர் மீதும் அவரது அம்மா மீதும் புகார் கொடுத்துவிட் டார் ஜெயஸ்ரீ. இருவரிடமும் விசாரித்து, தாய் சந்திராவிடம் சில உறுதிமொழிகளை வாங்கிக் கொண்டு, அவரை மட்டும் சொந்த ஜாமீனில் அனுப்பிவிட்டு, ஈஸ்வரை புழல் ஜெயிலுக்கு அனுப்பிவிட்டது போலீஸ்.


ஈஸ்வர் ஜெயிலுக்குப் போன பின், அவரது தாயிடமிருந்து கொலை மிரட்டல் வருவதாக சென்னை மாநகர கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் ஜெயஸ்ரீ. புழல் ஜெயிலிலிருந்து ஜாமீனில் வந்த ஈஸ்வர், கடந்த வாரம் தனது வக்கீல் ஆதிலட்சுமி லோகமூர்த்தி துணையுடன் மீடியாக்களைச் சந்தித்து, "மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் ஜெயஸ்ரீக்கும் தொடர்பு இருக்கிறது' என பகீர் கிளப்பினார். இதைப் பார்த்து திகிலடைந்த அனில், மறுநாளே மீடியாக்களைச் சந்தித்து "ஈஸ்வர் சொல்வது அப்பட்டமான பொய்' என்றார்.


ஜெயஸ்ரீயும் விடுவதாக இல்லை. கடந்த 9—ஆம் தேதி மீடி யாக்களைச் சந்தித்து, "ஈஸ்வருக்கும் மகாலட்சுமிக்கு தொடர்பு இருப்பது உண்மை. மகாலட்சுமி என்னை செல்போனில் தொடர்பு கொண்டு, அவரை விட்டுட்டுப் போயிரு என மிரட்டுகிறார். நாங்க ரெண்டு பேரும் ஃப்ரண்ட்ஸ் தான் என்கிறார் ஈஸ்வர். எந்த ஃப்ரண்ட்ஸாவது லிப்—டூ லிப் முத்தம் கொடுத்துக்குவாங்களா? நானும் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்தவள் அல்ல. எம்.ஜி. ஆர். படங்களில் நல்ல கேரக்டர்களில் நடித்தவர் எனது அம்மா. இப்போது ஈஸ்வர் திருந்தி வந்தாலும் ஏற்றுக் கொள்ளத் தயார்'' என போட்டுத் தாக்கிவிட்டார். இவ்வளவு அக்கப்போர்கள் நடந்தும் இதுவரை மகா லட்சுமியிடமிருந்து எந்த பதிலுமில்லை. சீரியல்களில் அடுத்தவர்களின் நிம்மதியைக் கெடுப்பதிலேயே குறியாக இருக்கும் பெண் கேரக்டர்களின் நிஜ வாழ்க்கையும் நிம்மதி இல்லாமல் தான் இருக்கிறது.


 

 

Next Story

உயிரைப் பறித்த பாம்பு; தன்னார்வலருக்கு நேர்ந்த சோகம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
The snake that took the life; Tragedy befell the volunteer

குடியிருப்பு பகுதிகளில் புகுந்து அச்சத்தை ஏற்படுத்தும் பாம்புகளைப் பிடித்து வந்த தன்னார்வலர்  பாம்பு கடித்து உயிரிழந்த சம்பவம் கடலூரில் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் உமர் அலி. பாம்பு பிடிக்கும் தன்னார்வலராக இருந்த உமர் அலிக்கு 2  குழந்தைகள் உள்ளனர். இதனிடையில் நேற்று இரவு பண்ருட்டி முத்தையா நகரில் வீடு ஒன்றில் பாம்பு புகுந்ததாக அவருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. அதே நேரம் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. உமர் அலிக்கு முன்பே அங்கு சென்ற தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்திருந்த நாகப்பாம்பைப் பிடித்து விட்டனர்.

பின்னர் அங்கு வந்த உமர் அலி, அந்தப் பாம்பைக் காப்புக்காட்டில் தான் விட்டு விடுவதாக வனத்துறையிடம் கேட்டுள்ளார். அப்பொழுது அவர் வைத்திருந்த பாட்டிலுக்குள் பாம்பை மாற்றிய போது உமர் அலியைப் பாம்பு கடித்தது. உடனடியாக கடலூர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனின்றி உமர் அலி உயிரிழந்தார்.

இந்தச் சம்பவத்தால் தேவையான பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிப்பதாகவும், இனி கடலூர் மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பாம்புகளைப் பிடிக்க அனுமதிக்கக் கூடாது எனக் கோரிக்கைகள் எழுந்துள்ளது.

Next Story

பொதுமக்கள் 11 பேரைக் கடத்தி துப்பாக்கிச்சூடு; பயங்கரவாதிகளால் பதற்றம்!

Published on 13/04/2024 | Edited on 13/04/2024
11 civilians kidnapped and and incident happened in pakistan

பாகிஸ்தான் நாட்டின் பதற்றம் நிறைந்த மாகாணம் பலுசிஸ்தான். இந்தப் பலுசிஸ்தான் பகுதியானது, ஆப்கானிஸ்தான் - ஈரான் எல்லையை ஒட்டி தென்மேற்கு பாகிஸ்தானில் உள்ளது.

இந்த நிலையில், பலுசிஸ்தான் மாகாணம் நோஷ்கி மாவட்டத்தில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது, அந்த நெடுஞ்சாலை பகுதியில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஒன்று அந்தப் பேருந்தை வழிமறித்துள்ளது. மேலும், அந்தப் பேருந்தில் இருந்த 9 பேரை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர்.

அதே போல், அந்த நெடுஞ்சாலையில் சென்ற கார் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர். இதில், 2 பேர் பலியாகியுள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்தனர். இந்தச் சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், அனைவரது உடல்களையும் துப்பாக்கி குண்டுகள் துளைத்த நிலையில், அங்குள்ள பாலம் அருகே மலைப்பகுதியில் பிணமாக  மீட்டனர்.

பின்னர், இந்தச் சம்பவம் தொடர்பாக பாகிஸ்தான் போலீசார் தரப்பில் தெரிவிக்கையில், ‘நோஷ்கி மாவட்டத்தில் துப்பாக்கி ஏந்திய ஒரு பயங்கரவாதக் குழு ஈரானுக்கு சென்ற ஒரு பேருந்தை வழிமறித்து, 9 பேரை கடத்தி துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்துள்ளனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் கிழக்கு மாகாணமான பஞ்சாப்பை சேர்ந்தவர்கள். இதுவரை, இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை’ என்று கூறப்படுவதாக சொல்லப்படுகிறது. இந்தப் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, பலுசிஸ்தான் முதல்வர் மிர் சர்பராஸ் புக்டி ஆகியோர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.