Skip to main content

"நல்லா இருந்த கட்சியை ரவுடி பசங்க கட்சியா மாத்தி வச்சிருக்காங்க; சொந்தக் கட்சிக்குச் சூனியம் வைக்கிறார் அண்ணாமலை..." - ராம.சுப்பிரமணியன் பேச்சு

Published on 03/12/2022 | Edited on 05/12/2022

 

k

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். 

 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் தமிழக பாஜக மூத்த தலைவர் பலர் அதிருப்தியில் இருப்பதாகச் செய்திகள் தொடர்ந்து ஊடகங்களில் வெளியாகி வந்த நிலையில் இதுதொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ராம.சுப்பிரமணியன் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் பதில் வருமாறு, " இன்றைக்கு பாஜகவில் என்ன நடந்துகொண்டிருக்கிறது. உழைத்தவர்களுக்கு மரியாதை என்பது சிறிதளவு கூட கிடைப்பதில்லை. இவர்கள் போனால் போகட்டும், நானே போனால் போவேன் என்பதெல்லாம் ஒரு கட்சித் தலைவர் பேசும் பேச்சல்ல.

 

முதலில் அண்ணாமலை என்ன பேச வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்டு பேச வேண்டும், வாயில் வருவது போவதை எல்லாம் பேசக்கூடாது. நாம் பேசுவதை மக்கள் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள் என்பதை முதலில் அவர் உணர வேண்டும். சொந்த கட்சிக்கு சூனியம் வைக்கும்  வேலைகளைத்தான் தற்போது அண்ணாமலை செய்து வருகிறார். இந்த மாதிரியான போக்குகளை முதலில் அண்ணாமலை மாற்ற வேண்டும். தான் மட்டுமே கட்சி என்ற அமைப்பு பாஜகவில் மட்டுமல்ல, எந்தக் கட்சியிலும் இருக்காது. மூத்தோர்கள் செய்த தியாகமும், உழைப்புமே இன்றைக்கு பாஜக என்ற இயக்கம் இந்த அளவுக்கு வளருவதற்குக் காரணமாக இருந்திருக்கிறது. 

 

ஆர்எஸ்எஸ் பாஜக ஆகிய இரண்டு அமைப்புக்களைச் சேர்ந்தவர்களே என்னப்பா கட்சி இப்படி போயிட்டு இருக்கு என்று என்னிடம் வருத்தத்தோடே பேசி வருகிறார்கள், நான் உங்கள் கட்சியா என்னிடம் கூறி என்னப்பா ஆகப்போகிறது என்று கூறினேன். படிப்படியா வளர்ந்த கட்சி பாஜக, இன்றைக்கு அதன் போக்கு ஆரோக்கியமானதாக இருக்கிறதா? ரவுடிப் பயல்கள், குற்றச்செயல்கள் செய்பவர்கள் இருக்கின்ற கட்சியாக மாற்றி வைத்துள்ளார்கள். கட்சியில் யாரைச் சேர்க்க வேண்டும் யாரை நீக்க வேண்டும் என்ற குறைந்தபட்ச அறிவு இருக்க வேண்டும். 

 

வாய்க்கு வந்ததை மட்டும் பேசிவிட்டால் ஒரு மாநிலத்தலைவர் கட்சியை நல்ல முறையில் வழி நடத்துகிறார் என்று அர்த்தம் இல்லை. பாஜக பேரைக் கெடுத்தது மட்டும் இல்லாமல் தற்போது ஆர்எஸ்எஸ் பெயரே கெட்டுப்போகும் அளவுக்கு அவரின் செயல்பாடு இருந்து வருகிறது. பலரும் என்னிடம் இதுதொடர்பாக தங்களின் ஆதங்கத்தைத் தெரிவித்து வருகிறார்கள். தான் பேசுவதே செய்தி என்று எந்த கட்சித் தலைவரும் நினைக்கமாட்டார்கள், ஆனால் தற்போது தமிழக பாஜகவில் அப்படியான சூழ்நிலை நிலவி வருகிறது. இது கட்சிக்கு நல்லதல்ல. கஷ்டப்பட்டு இந்த நிலைக்கு பாஜக வந்துள்ளது. அதனைத் தவிடுபொடியாக்கி விட அண்ணாமலை முயற்சிக்க கூடாது" என்றார்.

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.