Skip to main content

நெல்லை கண்ணன் கோரிக்கை ஏற்பு; ஜாமீன் நிபந்தனை ரத்து

Published on 31/01/2020 | Edited on 31/01/2020
n

 

தினமும் காலை, மாலையில் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் ஆஜராகி நெல்லை கண்ணன் கையெழுத்திடவேண்டும் என்ற ஜாமீன் நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டது நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம்.

 

நெல்லை மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ.  கட்சி சார்பில் நடந்த குடியுரிமை பாதுகாப்பு மாநாட்டில் நெல்லை பங்கேற்று, பிரதமர் மோடியையும், அமித்ஷாவையும் அவதூறாக பேசியதாக மேலப்பாளையம் காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.   நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவர் சேலம் சிறையில் அடைக்கப்பட்டார்.

 

நெல்லை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில், இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வேண்டும் என்றும் நெல்லைகண்ணன் கோரினார்.  இதையடுத்து அவருக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்தது. மறு உத்தரவு வரும் வரையில் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் தினமும் காலையும் மாலையும் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.   இந்த நிபந்தனையை முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும் மீண்டும் கோரப்பட்டது.  அதையடுத்து,  நீதிபதி ரசீர் அகமது, ஜாமீன் நிபந்தனையை ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

நெஞ்சுவலி மற்றும் மூச்சித்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், நெல்லைகண்ணன் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது.


 

Next Story

"தமிழ் கடல்" நெல்லை கண்ணன் உடல் தகனம்

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

k;l

 

நெல்லை கண்ணன் அழுத்தமான, ஆழமான எதற்கும் அஞ்சாத சங்க நாதமாய், கலை, இலக்கியம், அரசியல், கலாச்சாரம் என்று பன்முகத் தன்மை கொண்ட பேச்சாளர். வெண்கலக் குரலாய் மாநிலம் முழுக்க ஒலித்த அந்த விற்பன்னர் நெல்லை கண்ணன் என்ற முத்திரை பெயரால் அழைக்கப்பட்டவர்.

 

உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஆகஸ்ட் 18-ஆம் தேதி அன்று நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் பகல் 10.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78. அவரின் மறைவுக்கு தமிழக முதல்வர், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல்களைத் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நெல்லையில் உள்ள அவரது சொந்த ஊரில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

 


 

Next Story

“தமிழே உயிராக வாழ்ந்த தமிழ்க்கடல் மறைந்துவிட்டார்” - கமல்ஹாசன் இரங்கல் 

Published on 19/08/2022 | Edited on 19/08/2022

 

kamalhaasan mourns nellai kannan

 

பேச்சாளரும், பட்டிமன்ற நடுவருமான நெல்லை கண்ணன்(77) 1970களில் தொடங்கி தமிழக அரசியல் சூழலில் முக்கிய ஆளுமைகளாக, பிரமுகர்களாக இருந்தவர்களிடம் நெருங்கிப் பழகியவர். குறிப்பாக காமராஜர் குறித்து நெல்லை தமிழில் இவர் ஆற்றிய சொற்பொழிவுகள் மிகவும் பிரபலம். உடல்நலக்குறைவால் அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று(18.8.2022) நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவரின் மறைவுக்கு தமிழக முதல்வர், திரைபிரபலங்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நெல்லை கண்ணன் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். 

 

இந்நிலையில் நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் நெல்லை கண்ணன் மறைவுக்கு இறங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “சிந்தித்தால் தமிழ், வாய் திறந்தால் பழம்பாடல், சொல்வதெல்லாம் மேற்கோள்கள் என, தமிழே உயிராக வாழ்ந்த தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மறைந்துவிட்டார். அவரது மூவாத மேடைத் தமிழ் மூத்த செவிகளில் ஒலித்தபடியே இருக்கும். தமிழய்யாவுக்கு என் அஞ்சலி” எனக் குறிப்பிட்டுள்ளார்.