Skip to main content

கே.எஸ். அழகிரிபோல், ஸ்டாலினும் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்... திருச்சி வேலுச்சாமி பேட்டி

Published on 01/07/2019 | Edited on 02/07/2019

 

கூட்டணியை உடைக்கும் அளவுக்கு நான் பெரிய ஆள் கிடையாது. நான் சாதாரண தொண்டன். உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என நான் மட்டுமல்ல, கூட்டத்தில் கலந்து கொண்ட பலர் பேசினார்கள். நான் பேசியது தவறு என்றால் அந்தக் கூட்டத்திலேயே கே.எஸ்.அழகிரி கண்டிக்காதது ஏன்? ரஜினிக்கு எல்லா அரசியல் கட்சித் தலைவர்களும், காங்கிரஸ் கட்சியில் உள்ள பலரும் நட்பாக இருக்கிறார்கள். நான் மட்டுமா அவரிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். எத்தனை காலம்தான் காங்கிரஸ் கட்சிக்கு பல்லக்கு தூக்குவது என கே.என்.நேரு பொதுமேடையில் பேசியது குறித்து கருத்து கேட்டார்கள். அதற்கு பதில் அளித்தேன். அதற்கு பிறகு கே.என்.நேருவும் விளக்கம் அளித்துவிட்டார். நானும் விளக்கம் அளித்துவிட்டேன். என்னிடம் எந்த விளக்கமும் கேட்காமல் என்னை இடைநீக்கம் செய்துள்ளனர் என்கிறார் தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்து தற்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள கராத்தே தியாகராஜன். 


 

 

karate thiagarajan



கராத்தே தியாகராஜன் இடைநீக்கம் ஏன்? உள்ளிட்ட நக்கீரன் இணையதளத்தன் பல்வேறு கேள்விகளுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளர் திருச்சி வேலுசாமி பதில்:

 

தன் மீது அனுதாபம் வருவதற்காக, கட்சித் தொண்டர்களிடம் தான் நியாயமாகத்தான் பேசுவேன் என்று காட்டுவதற்காக இதுபோன்று சொல்லி வருகிறார். தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதால் எல்லோரையும் குறை சொல்லி வருகிறார். 

 

ஒவ்வொரு கட்சியிலும் அக்கட்சியில் இருப்பவர்கள் அதிக இடங்களில் போட்டியிட வேண்டும் என்று சொல்லுவார்கள். அதற்காக அவர்கள் மீது எந்தக் கட்சியாவது நடவடிக்கை எடுக்குமா? 

 

karate thiagarajan


 

இவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக வெளியான அறிவிப்பில் என்ன காரணம் என்று சொல்லப்படவில்லை. அந்த கடிதத்தில், 'frequent anti party activities' தொடர்ந்து கட்சி எதிர்ப்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

அந்தக் கூட்டத்தில் பேசியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதில் குறிப்பிடவில்லை. எல்லாவற்றையும் அறிக்கையில் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. குழப்ப முயற்சிக்கிறார். அது நடக்காது.
 

பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்பு கலைஞர் சிலை திறப்பு விழாவுக்கு ராகுல்காந்தி வந்ததை இந்தியாவே கவனித்தது. அந்த மேடையில் ஸ்டாலின், வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக ராகுல்காந்தியை திமுக முன்மொழிகிறது என்றார். உடனே அடுத்து பேசும் ராகுல்காந்தி, எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் வரும் சட்டமன்றத் தேர்தலில் முதல் அமைச்சர் வேட்பாளராக ஸ்டாலினை காங்கிரஸ் கட்சி ஏற்றுக்கொண்டு நாங்களும் கடுமையாக உழைப்போம் என்று சொல்கிறார். திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாக உள்ளது என்று இருவரின் பேச்சால் தெளிவாகிவிட்டது. 
 

இதற்கு பிறகு கராத்தே தியாகராஜன் ஒரு இடத்தில் பேசும்போது, போட்டி என்பது ஸ்டாலினுக்கும் ரஜினிக்கும்தான். ரஜினிகாந்த் முதல்வராக வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. தான் ரஜினிகாந்த் நண்பராக பேசுகிறேன் என்கிறார். இது கட்சியினுடைய விரோத நடவடிக்கை இல்லாமல் வேறென்ன?. காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர், காங்கிரஸ் கட்சியின் கொள்கைக்கு எதிராக, ரஜினிக்கு ஆதரவாக எந்த அடிப்படையில் பேட்டி கொடுத்தார்? தொடர்ந்து இதுபோன்று அவர் செயல்படுகிறார். 

 

trichy velusamy


 

மாவட்டத் தலைவர் போன்று அவர் நடந்து கொள்ளவில்லை என்பதுதான் முக்கியமான ஒன்று. எதற்கெடுத்தாலும் இவர் ஏன் பதில் சொல்லுகிறார். இந்த உரிமையை இவருக்கு யார் கொடுத்தார்கள். கட்சியின் கொள்கை சார்ந்த விஷயங்களில் அந்தக் கட்சியின் தலைவர் பதில் சொல்வார் அல்லது அக்கட்சியின் செய்தித்தொடர்பாளர்கள் பதில் சொல்லுவார்கள். 
 

உள்ளாட்சித் தேர்தல் வருமா? வராதா என்பது தெரியாது. அடுத்து திமுக சந்திக்க இருப்பது சட்டமன்றத் தேர்தல். அந்த நோக்கத்தை குழப்புவது போல், அந்த நோக்கத்தை கெடுப்பதுபோல் தொடர்ந்து கராத்தே தியாகராஜனின் கருத்துக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இதுபோன்ற கருத்துக்களை காங்கிரஸ் கட்சியில் பேசியிருந்தாலும் தவறு. திமுகவில் பேசியிருந்தாலும் தவறு. 


 

 

திருச்சியில் உதயநிதி ஸ்டாலின், நாங்குநேரியில் திமுக போட்டியிட்டால் வெற்றி பெறும் என்று பேசியிருக்கிறார். உங்கள் கட்சி அனைத்து இடத்திலும் நிற்பது என்பதோ, கூட்டணியோடு நிற்பது என்பதோ, கூட்டணிக்கு இடங்களை குறைத்து கொடுப்பது உள்ளிட்ட எல்லா உரிமைகளும் உங்களுக்கு இருக்கிறது. ஆனால் அதனை சொல்வதற்ககான இடம் கூட்டணி தலைவர்கள் பங்கேற்ற மேடையா? உங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூட்டத்தில் பேசியிருக்கலாம் என்று நான் அப்போதே கருத்து தெரிவித்திருந்தேன். 
 

கே.என். நேரு பேசியிருக்கிறார் என்று சொல்லுகிறார்கள். கே.என்.நேரு இருபது வருடத்திற்கு மேலாக மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறார். மந்திரியாக இருந்திருக்கிறார். அவர் என்றாவது இதுபோல் பேசியிருக்கிறாரா? இதுதானே முதல் தடவை. 

 

mkstalin - ks alagiri


 

இந்தப் பிரச்சனை வந்தவுடன், இந்த பிரச்சனை மேலும் பரவக்கூடாது என்பதற்காக கே.எஸ். அழகிரி முற்றுப்புள்ளி வைத்துவிட்டார். அதேபோல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் செய்திருந்தால் இதுபோன்ற விவாதம் வந்திருக்காது. காங்கிரஸ் - திமுக கூட்டணி நலன் கருதி, கே.எஸ். அழகிரி எப்படி இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டாரோ, அதைப்போல் ஸ்டாலினும் இதற்கு முற்றுப்புள்ளி வைப்பது நல்லது. தமிழ்நாட்டின் எதிர்கால நலன் கருதி இப்படிப்பட்ட பிரச்சனைகள் வராமல் பார்த்துக்கொள்கிற பொறுப்பு காங்கிரஸ் கட்சிக்கும் இருக்கிறது, திமுகவுக்கும் இருக்கிறது இந்தக் கூட்டணியில் உள்ள மற்ற தோழமைக் கட்சிகளுக்கும் இருக்கிறது. எல்லோருடைய நன்மைக்காக இதனை சொல்லுகிறேன். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.

Next Story

டெல்லி காங்கிரஸ் தலைவர் ராஜினாமா!

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Delhi Congress president resigns

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிவடைந்துள்ளது.

இதனையடுத்து 13 மாநிலங்களில் உள்ள 88 மக்களவைத் தொகுதிகளில் நேற்று முன்தினம் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. அதே சமயம் இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் ஆம் ஆத்மி - காங்கிரஸ் இணைந்து போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஆம் ஆத்மி உடனான கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து அரவிந்தர் சிங் லவ்லி ராஜினாமா செய்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு அரவிந்தர் சிங் லவ்லி எழுதியுள்ள கடிதத்தில், “காங்கிரஸ் கட்சியின் மீது பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட மற்றும் தவறான ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதன் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைப்பது, கட்சியின் கொள்கைக்கு எதிரானது. மேலும் இதனைப் பொருட்படுத்தாமல் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியுடன் கூட்டணி அமைக்க காங்கிரஸ் கட்சி முடிவெடுத்துள்ளது. எனவே தனது பதவியை ராஜினாமா செய்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.