Skip to main content

‘15 நாளில் 10 சம்பவம்’ - பட்டியலிட்ட ராகுல் காந்தி!

Published on 24/06/2024 | Edited on 24/06/2024
'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

ஏழு கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4ஆம் தேதி வெளியானது. அதில் 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பாஜக தனித்து 240 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியிருந்தது. இதனையடுத்து நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக நரேந்திர மோடி பதவியேற்கும் விழா டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் கடந்த 9 ஆம் தேதி (09.06.2024) நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமராகப் பதவியேற்கும் மோடிக்கு பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள், தனிப்பொறுப்புடன் கூடிய இணையமைச்சர்கள், மற்றும் இணையமைச்சர்கள் பதவி பதவியேற்றனர். மேலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி கூட்டணி அரசு மூன்றாவது முறையாகப் பொறுப்பேற்ற பின் முதல்முறையாக ஜுன் 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணிக்கு நாடாளுமன்றம் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்து. 

'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

இதனையடுத்து 18வது மக்களவையின் தற்காலிக சபாநாயகராக ஒடிசாவைச் சேர்ந்த பாஜக எம்பி பர்துஹரி மஹ்தாப்க்கு குடியரசுத் தலைவர் முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பர்த்ருஹரி மஹ்தாபுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து 18 வது மக்களவையில் முதல் கூட்டத்தொடர் இன்று காலை 11 மணியளவில் தொடங்கியது. அப்போது மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.

இந்நிலையில் பிரதமர் மோடி பதவியேற்றப் பின் 15 நாளில் நிகழ்ந்த 10 சம்பவங்களைப் பட்டியலிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல்காந்தி எம்.பி. விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட பதிவில், “1. பயங்கரமான ரயில் விபத்து, 2. காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல்கள், 3. முன்பதிவு செய்யப்பட்ட ரயில்பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் பயணிக்கும் அவல நிலை, 4. நீட் தேர்வுகளில் ஊழல், 5. முதுகலை நீட் தேர்வு ரத்து, 6. நெட் தேர்வு வினாத்தாள் கசிவு, 7. பால், பருப்பு வகைகள், எரிவாயு விலை உயர்வு, 8. காட்டு தீ விபத்து, 9. தண்ணீர் பற்றாக்குறை, 10. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாததால் வெப்ப அலைகளால் ஏற்படும் இறப்புகள்” எனப் பட்டியலிட்டுள்ளார். 

'10 incidents in 15 days' - Rahul Gandhi listed

மேலும், “பிரதமர் மோடி மற்றும் அவரது அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டத்தின் மீது நடத்தப்படும் தாக்குதலை ஏற்க முடியாது. எந்த சூழ்நிலையிலும் இதை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். வலுவான எதிர்க்கட்சியாக இந்தியா கூட்டணி தனது அழுத்தத்தைத் தரும். தனது பொறுப்பில் இருந்து பிரதமரை தப்பிக்க விடமாட்டோம்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்

 

Next Story

நீட் தேர்வு முறைகேடு - நாடாளுமன்றத்தில் அமளி!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
NEET examination malpractice - Parliament adjourned

இளநிலை மருத்துவ படிப்பிற்காக இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு நடந்ததாகப் பல புகார்கள் எழுந்தது. அந்த வகையில், நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சியாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் குவிந்துள்ளன.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. அதேநேரம் சிபிஐ போலீசார் இந்த வழக்கை விசாரித்து வருகின்றனர். மேலும் என்.டி.ஏ. எனப்படும் தேசிய தேர்வு முகமையின் தலைவர் நீக்கப்பட்டு புதியதாக ஒருவரை நியமனம் செய்து மத்திய கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. மேலும் நீட் முறைகேடுகளைக் கண்டித்து பல்வேறு மாநிலங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

NEET examination malpractice - Parliament adjourned

இத்தகைய சூழலில் நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மக்களவையில் விவாதிக்க வேண்டுமென வலியுறுத்தி மதுரை எம்பி சு. வெங்கடேசன் ஒத்திவைப்பு தீர்மானம் அளித்திருந்தார். அதே போன்று நீட், யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க மக்களவையில் காங்கிரஸ் எம்பி கே.சி. வேணுகோபால் ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றை அளித்தார். அதோடு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. கௌரவ் கோகோய் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்திருந்தார். மேலும் நீட் மற்றும் யுஜிசி நெட் உள்ளிட்ட தேர்வுகளின் வினாத்தாள் கசிவு குறித்து விவாதிக்க காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீசை அளித்திருந்தார்.

இந்நிலையில் மக்களவையில் அலுவல்களை ஒத்திவைத்துவிட்டு நீட் தேர்வு முறைகேடுகள் குறித்து விவாதிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிகள் கோரிக்கை வைத்தனர். இதனை சபாநாயகர் ஓம் பிர்லா நிராகரித்தார். அப்போது ஆக்கப்பூர்வ விவாதம் நடத்த வேண்டும் என்ற எதிர்க்கட்சி எம்பிகளின் கோரிக்கையை நிராகரித்ததைத் தொடர்ந்து, சபாநாயகருக்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதனையடுத்து நண்பகல் 12 மணி வரை மக்களவையை ஒத்திவைத்து சபாநாயகர் உத்தரவிட்டார். 

NEET examination malpractice - Parliament adjourned

முன்னதாக குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது முதலில் விவாதம் நடத்தப்பட வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லா வலியுறுத்தினார். அதற்கு ராகுல் காந்தி  நீட் தேர்வு தொடர்பான முறைகேடு விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று கோரினார். இதே போன்று மாநிலங்களவையிலும் மல்லிகார்ஜுன கார்கே நீட் தேர்வு விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்களுடன் எழுப்பி, இந்த விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் கோரிக்கை வைத்தார். இதனால் மாநிலங்களவையும் நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

Next Story

“நாளந்தா பல்கலைக்கழகம் ஒரு புதிய அத்தியாயம்” - குடியரசுத் தலைவர்!

Published on 27/06/2024 | Edited on 27/06/2024
“Nalanda University is a new chapter” - President

18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 24 ஆம் தேதி (24.06.2024) காலை 11 மணியளவில் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரையொட்டி மக்களவைக்குப் புதிதாகத் தேர்வு செய்யப்பட்ட எம்.பி.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பர்த்ருஹரி மகதாப் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மக்களவை சபாநாயகர் தேர்தல் நேற்று (26.06.2024) நடைபெற்றது. இதில் பாஜகவின் ஓம் பிர்லா, காங்கிரசின் கொடிக்குன்னில் சுரேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இந்த தேர்தலில் சபாநாயகராக ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகையில், “பிரதமர் கிசான் சம்மன் நிதியின் கீழ் நாட்டின் விவசாயிகளுக்கு அரசு சார்பில் ரூ. 3.20 லட்சம் கோடியை வழங்கியுள்ளது. இந்த அரசாங்கத்தின் மூலம் ரூ. 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் விவசாயிகளின் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. சமீபத்தில் உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினத்தை கொண்டாடியதை பார்த்திருப்பீர்கள். வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்காக கடந்த 10 ஆண்டுகளில் அரசு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீட்டை 4 மடங்குக்கு மேல் உயர்த்தியுள்ளது. வடகிழக்கு மாநிலங்களின் அனைத்து விதமான இணைப்புகளும் விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. வடகிழக்கில் அமைதியை ஏற்படுத்த  அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில், பல பழைய பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு, பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு அங்கு வேகமாக பொருளாதாரம் முன்னேறி வருகிறது. 

“Nalanda University is a new chapter” - President

நாட்டின் ஏழைகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் விவசாயிகள் அதிகாரம் பெற்றால் மட்டுமே வளர்ந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப முடியும். எனவே அவர்களுக்கு எனது அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. 25 கோடி இந்தியர்களுக்கு அரசின் திட்டங்களில் இருந்து ஒருவர் கூட விடுபடக்கூடாது என்ற மன உறுதியுடன் ஒவ்வொரு அரசுத் திட்டத்தின் பலனையும் அவர்களுக்கு வழங்குவதே நோக்கம் ஆகும். கடந்த 10 ஆண்டுகளில் வறுமையில் உள்ள சகோதர சகோதரிகளுக்கு உதவிகளை உருவாக்கி வருகிறது. டிஜிட்டல் இந்தியா, தபால் அலுவலகங்களின் நெட்வொர்க், தூய்மை இந்தியாதிட்டம் ஏழைகளின் வாழ்க்கை மற்றும் அவர்களின் ஆரோக்கியம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த விஷயமாக மாற்றப்பட்டுள்ளது. முதல் முறையாக, கோடிக்கணக்கான ஏழைகளுக்கு கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. 

“Nalanda University is a new chapter” - President

திறமையான இந்தியாவிற்கு நமது ஆயுதப் படைகளில் நவீனத்துவம் அவசியம். போரை எதிர்கொள்வதில் நாம் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதை உறுதிப்படுத்த, ஆயுதப் படைகளில் சீர்திருத்த செயல்முறைகள் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும். அரசாங்கம் கடந்த 10 ஆண்டுகளில் பல முக்கிய நடவடிக்கைகளை எடுத்தது. சீர்திருத்தங்களால், இந்தியா ரூ. 1 லட்சம் கோடிக்கு மேல் பாதுகாப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் நமது பாதுகாப்பு ஏற்றுமதி 18 மடங்கு அதிகரித்து ரூ.21 ஆயிரம் கோடியைத் தொட்டுள்ளது.

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச சிகிச்சையின் பலன் கிடைக்கும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட உள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், இதுபோன்ற பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அவை இன்று நாட்டிற்கு பயனளிக்கின்றன. இந்த சீர்திருத்தங்கள் செய்யப்படும்போது ​​அவர்கள் அதனை எதிர்த்தனர். இன்று ஜிஎஸ்டி இந்தியாவின் பொருளாதாரத்தை முறைப்படுத்தவும், வர்த்தகம் மற்றும் வணிகத்தை எளிதாக்கவும் ஒரு ஊடகத்தை உருவாக்குகிறது. ஏப்ரல் மாதத்தில் முதல் முறையாக ஜிஎஸ்டி வசூல் ரூ.2 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. இதனால் மாநிலங்களின் லாபம் அதிகரித்துள்ளது. 

“Nalanda University is a new chapter” - President

குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்கத் தொடங்கியுள்ளது. எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்கான முயற்சிகளுடன் இந்தியாவின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் மீண்டும் நிலைநாட்டி வருகிறது. சமீபத்தில், நாளந்தா பல்கலைக்கழகத்தின் தொழிற்கல்வி வளாகம் என்ற வடிவத்தில் ஒரு புதிய அத்தியாயம் சேர்க்கப்பட்டுள்ளது. நாளந்தா ஒரு பல்கலைக்கழகம் மட்டுமல்ல, அடிப்படை அறிவு மையமாக இந்தியாவின் புகழ்பெற்ற கடந்த காலத்தின் சான்றாகும். புதிய நாளந்தா பல்கலைக்கழகம் இந்தியாவை உலகளாவிய அறிவு மையமாக மாற்ற உதவும் என்று நான் நம்புகிறேன்” எனப் பேசினார்.

முன்னதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ததையும், மத்திய அரசு விசாரணை அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்துவதையும் கண்டித்து ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் மற்றும் பிற கட்சித் தலைவர்கள் நாடாளுமன்ற வளாகத்துக்கு வெளியே போராட்டம் நடத்தினர். குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உரையாற்றியபோது எதிர்க்கட்சிகள் மணிப்பூர், மணிப்பூர்  என்று முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்ததும் குறிப்பிடத்தக்கது.