Skip to main content

நானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான் "கலைமாமணி" விருது சர்ச்சை!

Published on 19/08/2019 | Edited on 19/08/2019

2011-லிருந்து 2018-ஆம் ஆண்டுவரை 8 ஆண்டுகளுக்கான "கலைமாமணி' விருது வழங்கும் விழா, கடந்த 13-ஆம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. அதாவது ஜெ. ஆட்சிக்கும் சேர்த்து தாமதமாக விருது வழங் கியதை ஒப்புக்கொண்டது எடப் பாடி அரசு. பல்வேறு துறைகளைச் சேர்ந்த 201 கலைஞர்களுக்கு விருதுகளை வழங்கி னார் முதல்வர் எடப்பாடி. "திறமையான, உண்மையான கலை ஞர்கள் பலருக்கு "கலைமாமணி' விருது கிடைக்கவில்லை, அமைச்சர்கள் கை காட்டுபவர்களுக்கே விருதுகள் கிடைத் துள்ளன' என்ற சர்ச்சைக் குரல்கள் மதுரையிலிருந்து ஒலிக்கின்றன.

 

award



இதுகுறித்து தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தின் துணைத்தலைவர் முத்து ராமலிங்கம் நம்மிடம் விரிவாகப் பேசினார். ""1955-லிருந்து சங்கீத நாடக சங்கம் என்ற பெயரில் செயல்பட்டு வந்ததை, 1973-ல் தமிழ்நாடு இயல் -இசை -நாடக மன்றமாக்கி னார் அப்போது முதல்வராக இருந்த கலைஞர். கலைத்துறையைச் சேர்ந்தவர்கள்தான் இந்த மன்றத்தின் உறுப்பினர் செயலாளராக இருப்பார். அவர்தான் நாடக கலைஞர்கள், நாட்டுப்புறக் கலைஞர்கள், தெருக்கூத்துக் கலைஞர்கள், ஆர்மோனியம் பின்பாட்டுக் கலைஞர்கள், சினிமா நடிகர்கள் ஆகி யோரை இனம் கண்டு விருதுக்குப் பரிந்துரைப்பார். 

 

admk



இதுதான் இத்தனை ஆண்டுகால நடைமுறை. ஆனால் இப்போது எடப்பாடி அரசு தங்கவேலு என்ற ஐ.ஏ.எஸ்.அதிகாரியை இயல் -இசை -நாடக மன்றத்தின் உறுப்பினர் செயலாளராகப் போட்டு, எட்டு ஆண்டுகளுக்கான விருது பெறுபவர்களை தேர்ந்தெடுத்து விருதும் வழங்கியுள்ளது. தமிழகத்திலேயே முதல்முறையாக தமிழ்நாடு நாடக நடிகர் சங்கம் 1923-ல் ஆரம்பிக்கப்பட்டது. இதில் 30 ஆண்டுகளாக நான் உறுப்பினராக இருக்கிறேன். மொத்த உறுப்பினர்கள் 400 பேர். 

 

drama actor



இதுவரை மொத்தமே 8 பேர்தான் இந்த சங்கத்திலிருந்து "கலைமாமணி' விருது பெற்றி ருக்கிறார்கள். அதிலும் கடந்த 10 ஆண்டுகளாக யாருக்குமே விருது கொடுக்காமல் இப்போதுதான் சிலருக்கு கிடைத்துள்ளது, அதுவும் மதுரையைச் சேர்ந்தவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்த சங்கத்தில் இருக்கும் பாதிக்கும் மேற்பட்டோர் 60 வயதைக் கடந்தவர்கள். இவர்களுக்கு ஓய்வூதியம் கிடைக்க வேண்டும் என்றால், "கலைமாமணி' விருது பெற்றவர் பரிந்துரை செய்ய வேண்டும். கொஞ்ச காலத்திற்கு முன்பு விருது வாங்கிய எட்டு பேரும் உயிருடன் இல்லாததால், சீனியர் மெம்பர்கள் ஓய்வூதியம்கூட வாங்க வழியில்லாமல் போய்விட்டது.

இப்போது ஐ.ஏ.எஸ். அதிகாரி தங்கவேலு வந்த பிறகு, "ஏய் நல்லா பார்த்துக்க, நானும் நாடக கலைஞர்தான், நாட்டுப்புறக் கலைஞர்தான்'னு அமைச்சர்களின் சிபாரிசுகளோடு "கலைமாமணி' விருது வாங்கியிருக்கிறார்கள். "விருது வாங்கலையோ விருது'ன்னு கூவிக்கூவி விக்காத குறைதான்''’என்றார் வேதனையுடன். மதுரை இயல் -இசை -நாடக மன்றத்தின் செயலாளரான சோமசுந்தரம் நம்மிடம் பேசும் போது, ""மதுரையைச் சேர்ந்த ராஜா என்பவருக்கு "கொம்பு-தப்பட்டைக் கலைஞர்' என்ற வகையில் "கலைமாமணி' விருது வழங்கி யிருக்கிறார்கள். அந்த வாத்தியக் கலைஞரே அவர் இல்லை. அதேபோல் இசைக்கல்லூரியில் இப்போதுதான் படிப்பை முடித்திருக்கும் கோவிந்தராஜ் என்பவருக்கும் விருது வழங்கி யிருக்கிறார்கள்'' என்றார்.


விருது சர்ச்சை குறித்து தங்கவேல் ஐ.ஏ.எஸ்.சிடம் கேட்டபோது, “மதுரையைப் பொறுத்த வரை கலைஞர்களுக்கான சங்கங்கள் ஏராளமாக இருக்கின்றன. ஒவ்வொரு சங்கமும் போட்டி பொறாமையுடன் இருப்பதால், எப்போது விருதுகள் அறிவிக்கப்பட்டாலும் இதே பிரச்சனை தான். என்னைப் பொறுத்தவரை சரியாகத்தான் செயல்பட்டிருக்கிறேன்''’என்கிறார். மதுரையில் மட்டுமல்ல, சென்னையில் உள்ள பத்திரிகையாளர்களும் "கலைமாமணி' விருது குறித்துக் குமுறுகிறார்கள். சர்ச்சைகளில் சிக்கி வழக்குகளை எதிர்கொள்ளும் பிரகாஷ் எம்.சுவாமி, நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கு முதல்வர் விருது வழங்கியிருப்பது குறித்து கண்டனக் குரல்கள் பதிவாகின்றன. "கலைமாமணி' விருதுபோல் மற்றொரு விருது சர்ச்சையும் அதே மதுரையிலிருந்து கிளம்பியுள்ளது. தமிழ்நாடு அரசு நிறுவனமான "பூம்புகார் கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம்' சார்பில், கைவினைக் கலைஞர்கள், சிற்பிகள், ஓவியர்கள் ஆகியோருக்கு ஆண்டுதோறும் விருது வழங்கப்படுவது வழக்கம். விருது பெறுவோர், தங்களின் படைப்பை செய்து காட்டும் வீடியோ பதிவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது விதி.

இந்த விதியை எப்படி மிதிக்கிறார்கள் என்பதை நம்மிடம் சொல்லத் தொடங்கினார் பஞ்சலோக சிலை வடிவமைப்பாளரான மோகன். 1979-லிருந்து பித்தளை கலைப்பொருட்கள் செய்து வருகிறேன். கேரளாவில் 2018-ல் நடந்த பன்னாட்டுக் கைவினைக் கலைஞர்கள் திருவிழாவில், சிறந்த கலைஞர்கள் நான்கு பேரில் ஒருவராக என்னைத் தேர்ந்தெடுத்தது கேரள அரசு. தமிழக அரசின் விருதுக் காக எட்டு ஆண்டுகள் முயற் சித்தும் எனக்கு கிடைக்க வில்லை. இதைவிடக் கொடுமை என்னன்னா, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே இருக்கும் கைவினைப் பொருட்கள் விற்கும் ஒரு கடையில் நான் வடிவமைத்த சிலைகளை வாங்கி, விருதுக் கமிட்டிக்கு அனுப்பி விருதும் வாங்கியிருக்கிறார் கிருஷ்ணன் என்பவர்''’என பொருமினார். இன்னும் எவ்வளவு பொருமல்கள் வெளியில் தெரியாமல் இருக்கின்றனவோ?
 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.