Skip to main content

ஈகோ அரசியல்! -எங்கே கொண்டு நிறுத்தப்போகிறதோ..?

Published on 02/11/2020 | Edited on 02/11/2020
dddd

 

ஜெ. மறைவுக்குப் பின் அ.தி.மு.க.வில் உரசல்கள் எழுந்தபோதே தூத்துக்குடி மாவட்டத்தின் விளாத்திகுளம் எக்ஸ் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வான மார்க்கண்டேயன் அதிலிருந்து விலகினார். தி.மு.க.வில் சேரப் போகிறார் என தகவல்கள் பறந்தன. தொகுதியின் எம்.எல்.ஏ.வான உமாமகேஸ்வரி டி.டி.வி. தரப்புடன் இணைய, இடைத்தேர்தலில் சுயேட்சையாக களத்தில் நின்று இருபத்து ஒன்பதாயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை அள்ளி தனது பலத்தைக் காட்டினார் மார்க்கண்டேயன்.

 

இந்த நிலையில்தான், கடந்த சில நாட்களுக்கு முன்பு மார்க்கண்டேயன் தனது ஆதரவாளர்களுடன் அறிவாலயம் போய், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் கட்சியில் இணைந்தார். இணைப்பிற்குப்பின் விளாத்திகுளம் திரும்பிய மார்க்கண்டேயனுக்கு அவரின் இலைத்தரப்பு ஆதரவாளர்களும், உ.பி.க்களும் திரளாக இணைந்து வரவேற்பு கொடுத்திருக்கிறார்கள். இந்த மாஸ், ஏரியா ர.ர.க்களை மட்டுமல்லாமல் எம்.எல். ஏ.வான சின்னப்பனையும் சூடாக்கியது.

 

மார்க்கண்டேயன் தி.மு.க.வுக்கு மாறி விளாத்திகுளம் வந்த நாள் தொட்டு, தி.மு.க. வினர் மட்டுமல்லாமல், அ.தி.மு.க.வினர் அடுத்து அதன் ஊராட்சிக் கி.க.செயலாளர்கள் கூட மார்க்கண்டேயனைக் கூட்டமாகச் சென்று சந்தித்து சால்வை அணுவித்து வரு வது எம்.எல்.ஏ. மட்டுமல்லாமல் இலைத்தரப் பினரையும் கலக்கத்தில் வைத்துவிட்டது. இந்த அரசியல் பகைமையே நகரில் ஆக.17-ல் நடந்த அ.தி.மு.க.வின் 49-வது ஆண்டு விழா நிகழ்ச்சியில் எதிரொலித்திருக்கிறது. இடைப் பட்ட நேரத்தில் எம்.எல்.ஏ.சின்னப்பன், மார்க்கண்டேயனின் உதவியாளரான அன்பு என்பவரைத் தனது வசம் திருப்பியிருந்தார்.

 

அக்.17-ல் அ.தி.மு.க. கட்சி ஆண்டுவிழாவில் கொடியேற்றிவிட்டுப் பேசிய எம்.எல்.ஏ. சின்னப்பன், மார்க்கண்டேயனை ஒரு பிடி பிடித்திருக்கிறார். இந்நிலையில், தி.மு.க.விற்கு வந்தபிறகு விளாத்திகுளம் நகரின் பேருந்து நிலையத்தின் முன்பாக வடக்கு மா.செ. கீதாஜீவன் தலைமையில் தி.மு.க. கொடியேற்றும் நிகழ்ச்சிக்கான அனுமதியைப் போலீசிடமிருந்து ஏற்கனவே பெற்றிருந்தார் மார்க்கண்டேயன்.

 

ddd

 

அக்.21 அன்று கொடியேற்ற நிகழ்ச்சி மாலை 5 மணி என்றபோதிலும் காலையிலிருந்தே நகர தி.மு.க.வினர், மார்க்கண்டேயனின் ஆதரவு வட்டம் என ஏராளமாகத் திரண்டவர்கள் நகரைப் பரபரப்பாக்கிக் கொண்டிருந்தனர். இந்தப் பரபரப்பு அ.தி.மு.க. தரப்பையும் உசுப்பேற்றியிருக்கிறது. அன்றைய தினம் நகரமெங்கிலுமுள்ள சாலைகளில் தி.மு.க.வின் கொடிகள் நடப்பட்டிருந்தன. அதேசமயம் அ.தி.மு.க. தரப்பிலும் கொடியேற்ற அனுமதி கோரப்பட பிரச்சனை ஏற்படும் என்று போலீஸ் தரப்பு அ.தி.மு.க.விற்கு அனுமதி வழங்க மறுத்துவிட்டது.

 

நாங்களும் தி.மு.க.வைப் போன்று சாலையில் கொடிகளை நடுவோம் என்று அ.தி.மு.க. தரப்பு முண்டிநிற்க, விவகாரம் வரலாம் என்று எண்ணிய காவல்துறை போலீசைக் குவித்துவைத்திருந்தது. அ.தி.முக.வினரிடம் நிலைமையைச் சொல்லி அவர்களைத் தடுத்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமான எம்.எல்.ஏ. சின்னப்பன் போலீ சாரோடு பேச்சு வார்த்தை நடத்தவே, வம்பு எதற்கு என்று போலீசும் சற்றுப் பின்வாங்க, அ.தி.மு.க.வினரும் போட்டியாக சாலையில் தங்களின் கொடிகளை நட்டிருக்கிறார்கள். இதனால் தி.மு.க.வினருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் மதியம் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. அதன் பின் ஸ்பாட்டுக்கு வந்த ஏ.டி. எஸ்.பி., கோபி மற்றும் டி.எஸ்.பி. பெலிக்ஸ் தலைமையிலான போலீசார் அ.தி.மு.க.வினரை அப்புறப்படுத்தியிருக்கிறார்கள்.

 

அதையடுத்து போலீஸ் பாதுகாப்புடன் வடக்கு மா.செ. கீதாஜீவன் தலைமையில் மாலை 5 மணியளவில் மார்க்கண்டேயன் உள்ளிட்ட தி.மு.க.வினர் திரள, பேருந்து நிலையமருகே கொடியேற்றப்பட்டது. அதேநேரத்தில் அவர்களுக்குப் போட்டியாக எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில், பேருந்து நிலையத்தில் அ.தி.மு.க. கொடியேற்று வதற்காக வேம்பார் சாலையில் ர.ர.க்கள் திரளாகக் கூடி பேருந்து நிலையம் நோக்கி நடைபோட்டிருக்கிறன்றனர். விவகாரம் கைமீறிப்போனதால் போலீசார் தடியடி நடத்தி அ.தி.மு.க.வினரைக் கலைத்தனர். தடியடியால் ஆத்திரமான எம்.எல்.ஏ. சின்னப்பன் அதனைக் கண்டித்து போலீசாருடன் கடும் வாக்குவாதம் நடத் தியவர் அ.தி.மு.க.வினருடன் பஸ் நிலைய மருகே சாலைமறியலில் இறங்கினார்.

 

ஸ்பாட்டுக்கு வந்த டி.ஐ.ஜி. பிரவீன் குமார் அபிநவின் பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொண்ட சின்னப்பன், பஸ்நிலை யம் முன்பு போட்டியாக அ.தி.மு.க. கொடியை ஏற்றிவிட்டே கிளம்பிச்சென்றார்.

ஈகோ அரசியல் எங்கே கொண்டு நிறுத்தப்போகிறதோ...

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.