Skip to main content

உலகின் முதல் 5ஜி மாவட்டம் எது தெரியுமா?

Published on 01/04/2019 | Edited on 01/04/2019

சீனாவைச் சேர்ந்த ‘சைனா மொபைல்’ நிறுவனம் கடந்த சனிக்கிழமை அன்று உலகின் முதல் 5ஜி தொழில்நுட்ப சேவையை  ஷாங்காய் மாகாணத்திலுள்ள ஹோங்கு மாவட்டத்தில் சோதனை முயற்சியாக செயல்படுத்தியது. இந்த மாவட்டதில்தான் உலகிலேயே முதன் முறையாக மாவட்டம் முழுவதும் 5ஜி நெட்வொர்க் மற்றும் பிராட்பேண்ட் ஜிகா பிட் நெட்வொர்க் உள்ளிட்ட சேவைகள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

5g

 

“மாவட்டம் முழுவதும் இணைய சேவை கிடைப்பதற்காக கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பே பல 5ஜி அலைவரிசை கோபுரங்கள் நடப்பட்டுவிட்டன” என்று சீனாவை சேர்ந்த ஒரு செய்தித்தாளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

ஷாங்காயின் துணை மேயர்  ‘வு கிங்’ 5ஜி சேவையின் முதல் வீடியோ காலை (Video Call) பயன்படுத்தியவர். முதல் 5ஜி ஃபோல்டபுல் (Foldable) மொபைலான  ‘ஹுவாய் மேட் எக்ஸ்’ ஸ்மார்ட் போனில்தான் இவர் வீடியோ கால் செய்துள்ளார்.
 

இந்த வருடத்திற்குள்ளாகவே நகரம் முழுவதும் 10000 5ஜி அலைவரிசை கோபுரங்களை நட திட்டமிட்டுள்ளோம். இது 2021ஆம் ஆண்டிற்குள் 30,000  5ஜி அலைவரிசை கோபுரங்களாக நடப்படும் என்று ஷாங்காயின் தொலைதொடர்பு துறையின் துணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.
 

5ஜி என்பது அலைபேசி தொழில்நுட்பத்தின் அடுத்த கட்டம் என்று சொல்லலாம். 4ஜி இணைய சேவையை விட 10-100 மடங்கு வேகமாக 5ஜி இணைய சேவையில் பதிவிறக்கம் (Download) செய்ய முடியும். 
 

video call

 

 

இது மட்டும் இல்லாமல், 5ஜி சேவையை விரிவுப்படுத்தும் நோக்கத்துடன், சீனாவின் 100 தொலைதொடர்பு ஆராய்ச்சி நிறுவனங்களை ஊக்குவிக்கும் விதமாக ஷாங்காய் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கி வருகிறது. இதன் மூலமாக 2021ஆம் ஆண்டிற்குள் 100 பில்லியன் யுவான்(14.9 பில்லியன் டாலர்) வருமானம் கிடைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு சீன ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

சீனாவைச் சேர்ந்த ஹுவாய் ஸ்மார்ட் போன் நிறுவனம், உலகரங்கில் 5ஜி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் அதிக முதலீடு செய்துள்ளது. இந்த திட்டத்தை மேற்கத்திய நாடுகள் பல எதிர்க்கின்றன, குறிப்பாக அமெரிக்கா இதை எதிர்க்கிறது. ஹுவாய் 5ஜி தொழில்நுட்ப சேவை என்பது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என்று அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. 
 

ஹுவாய் நிறுவனத்தின்படி, இந்த ஆண்டின் பாதியிலேயே மேட் எக்ஸ் ஸ்மார்ட் போன் விற்பனைக்காக சந்தைக்கு வருகிறது. இந்திய சந்தையை முக்கியமாக குறி வைத்துதான் ஹுவாய் நிறுவனம் செயல்படுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மொபைல் வெளியிட்ட பின்னர், மிக விரைவில் 5ஜி இணைய சேவையையும் கொண்டுவருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 

 

Next Story

பாகிஸ்தானில் தாக்குதல்; 5 சீனர்கள் பலியான சோகம்!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
pakistan Shangla Besham city incident 

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் சீன நிறுவனங்கள் துறைமுகம், விமான நிலையம்,  சாலை மற்றும் ரயில் போக்குவரத்து உள்ளிட்ட கட்டுமான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இதனால் சீனாவைச் சேர்ந்த ஏராளமானவர்கள் பாகிஸ்தானில் பணியாற்றி வருகின்றனர். இத்தகைய சூழலில் பாகிஸ்தானின் கைபர் பக்துன்கவா மாகாணத்தில் உள்ள ஷாங்லா என்ற மாவட்டத்திற்கு உட்பட்ட தசு என்ற இடத்தில் இன்று (26.03.2024) தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தில் சீனாவைச் சேர்ந்த பொறியாளர்கள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்வத்தை பாகிஸ்தான் அரசும் தற்கொலைப் படை தாக்குதல் தான் என உறுதி செய்துள்ளது. மேலும் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் பாகிஸ்தான் காவல் துறையினரால் வெளியிடப்பட்டுள்ளன. இது உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. அதே சமயம் இந்த தாக்குதல் சம்வத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது குறித்து மலகாண்டின் போலீஸ் துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் (டி.ஐ.ஜி.) கூறுகையில், “ஷாங்லாவின் பெஷாம் நகரில் சீனர்களின் வாகனம் தாக்கப்பட்டதில் ஐந்து சீன நாட்டவர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர். சீன நாட்டவர்கள் இஸ்லாமாபாத்தில் இருந்து தாசு முகாமுக்குச் செல்லும் பொறியியலாளர்கள் ஆவர்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

“என்னை அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால்...” - எச்சரிக்கும் டொனால்ட் டிரம்ப்

Published on 19/03/2024 | Edited on 19/03/2024
warns Donald Trump If I'm not elected president

குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்ட்  ட்ரம்ப், அமெரிக்க அதிபராக கடந்த 2016 ஆம் ஆண்டு வெற்றி பெற்றார். அதனைத் தொடர்ந்து நடந்த 2020 ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜோ பைடனை எதிர்த்துப் போட்டியிட்டார். அந்த தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்று அமெரிக்க அதிபராகப் பொறுப்பேற்றார். நான்கு ஆண்டுகள் கொண்ட அமெரிக்க அதிபரின் பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. 

இந்தாண்டு நவம்பர் மாதத்தில் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்தத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த தற்போதைய அதிபர் ஜோ பைடன் மீண்டும் போட்டியிட உள்ளார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியைச் சேர்ந்தவரும், முன்னாள் அதிபருமான டொனால்ட் டிரம்ப் போட்டியிடுவார் எனக் கடந்த சில தினங்களுக்கு முன் கூறப்பட்டு வந்தது. இதற்கான ஆதரவுகளையும் டிரம்ப் தீவிரமாகத் திரட்டி வருகிறார்.

இதற்கிடையே, குடியரசு கட்சி சார்பில் வேட்பாளராக நிற்கப்போவது யார் என்பதற்கான தேர்தல், அந்த கட்சி சார்பில் நடத்தப்பட்டது. அதில், ஒவ்வொரு மாகாணத்திலும் தேர்தல் நடத்தப்பட்டு அதில் அதிக வாக்கு செல்வாக்கு பெரும் நபர் தான், அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று கூறப்பட்டது. அந்த வகையில், முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து, அந்த கட்சியைச் சேர்ந்தவரான நிக்கி ஹாலே போட்டியிட்டார். இவர்கள் இருவருக்கும் கடும் போட்டி நிலவி வந்தது. 

இதனையடுத்து, கடந்த 3 ஆம் தேதியும் 5 ஆம் தேதியும் வேட்பாளர் தேர்தல் நடைபெற்றது. ஆனால், தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பாகவே, நிக்கி ஹாலே போட்டியில் இருந்து விலகினார். இதன் மூலம் குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளராக டொனால்ட் டிரம்ப் நியமிக்கப்பட்டார். அதேபோல், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடன் அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இருவரும் தங்களது தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக நடத்தி வருகின்றனர்.

அந்த வகையில், அமெரிக்காவின் ஓஹியோவில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய டொனால்ட் டிரம்ப், “என்னை அதிபராக தேர்வு செய்யாவிட்டால் அமெரிக்கா மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படும். மெக்சிகோவில் கார்களை உருவாக்கி அமெரிக்கர்களுக்கு விற்கும் சீன திட்டங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. நான் அதிபரானால், கார்களை அமெரிக்காவில் விற்க முடியாது. இந்த முறை நான் அதிபராக தேர்ந்தெடுக்காவிட்டால், ஜோ பைடனால் நாட்டில் வன்முறை வெடிக்கும். இதனால், மக்கள் என்னை ஆதரிக்க வேண்டும்” என்று கூறினார்.