Skip to main content

சீனியர்களுக்கு எதிராக பிரசாந்த் கிஷோர்! திமுகவில் உருவாகும் கருத்து மோதல்கள்!

Published on 24/06/2020 | Edited on 24/06/2020

 

dmk party leaders i pac team prashant kishore

 

‘ஒன்றிணைவோம் வா' பணிகளால்தான் ஜெ.அன்பழகனுக்கு கரோனா தொற்று பரவியதாக எழுந்த குற்றச்சாட்டுகளால் அந்த செயல் திட்டத்தை நிறுத்தி விட்டது திமுக. 

 

இதற்காக சென்னை அண்ணா நகரில் இயங்கி வந்த ஐ- பேக் அலுவலகமும் மூடப்பட்டு விட்டது. இந்த நிலையில், கரோனா நெருக்கடி காலமாக இருந்தாலும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் தேர்தல் யுக்திகளை வகுப்பதில் பிரசாந்த் கிஷோர் சீரியசாகத்தான் இருக்கிறார்.

 

அதில் பிரசாந்த் கிஷோருக்கும், சபரீசனுக்கும் சமீப காலமாக கருத்து வேறுபாடுகள் எழுந்திருப்பதாக திமுக சீனியர்களிடம் எதிரொலிக்கிறது. குறிப்பாக, 234 தொகுதிகளையும் அலசி கொண்டிருக்கும் பிரசாந்த் கிஷோர், சீனியர்கள் பலருக்கும் இந்த முறை வாய்ப்பளிக்கத் தேவையில்லை என்கிற முடிவை எடுத்துள்ளாராம். 

 

ஆனால், பிரசாந்த் கிஷோரின் பாஸ் ஆன சபரீசனோ, சீனியர்களின் அனுபவங்களையும் அவர்களின் தேர்தல் யுக்திகளையும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதால் சீனியர்களை முழுமையாக புறக்கணிக்கத் தேவையில்லை என அழுத்தம் கொடுக்கிறாராம். 

 

ஏனெனில், 65 வயதை கடந்த சீனியர்களுக்கு வாய்ப்பளிக்கக்கூடாது என்கிற பிரசாந்த் கிஷோரின் பட்டியலில், சபரீசனுக்கு நெருக்கமான சீனியர்களும் இருக்கிறார்கள் என்பதுதான். இதனால் இருவருக்கும் மன கசப்பு ஏற்பட்டிருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவே தற்போது அறிவாலய வட்டாரங்களில் பேசு பொருளாக இருக்கிறது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

நிதிஷ்குமாரின் முடிவு; பிரசாந்த் கிஷோரின் கணிப்பு - பரபரப்பான தேர்தல் களம்

Published on 30/01/2024 | Edited on 30/01/2024
 Prashant Kishor Prediction on Nitish Kumar Politics

பீகார் மாநிலத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் ஐக்கிய ஜனதா தளம் கட்சி கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி அமைந்தது. ஆனால் அதன்பிறகு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பாஜகவுடன் கூட்டணியை முறித்த நிதிஷ்குமார், ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் உள்ளடங்கிய மகா கூட்டணியை அமைத்து மீண்டும் நிதிஷ்குமார் முதல்வராகப் பதவி வகித்து வந்தார். துணை முதல்வராக தேஜஸ்வி யாதவ் பதவி வகித்து வந்தார்.

இந்த நிலையில்தான் கடந்த 28 ஆம் தேதி நிதிஷ் குமார் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து, மகா கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர் அன்று மாலையே பாஜகவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் பீகார் மாநிலத்தின் முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். அவருடன் சேர்த்து பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌதிரி, விஜய் சின்ஹா இருவரும் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார்கள். 

இதனிடையே பாஜகவை வீழ்த்துவதற்காக நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகளை ஒன்றிணைத்து இந்தியா என்ற கூட்டணியை உருவாக்கினார் நிதிஷ்குமார். இந்தியா கூட்டணி தொடர்ந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி தொகுதிப் பங்கீடு உள்ளிட்டவைகளை பற்றி ஆலோசித்து வரும் நிலையில், நிதிஷ்குமார் தற்போது அதில் இருந்து பாஜக தலைமையில் என்.டி.ஏ கூட்டணியில் இணைந்திருப்பது தேர்தல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில் நிதிஷ்குமாரின் முடிவு குறித்து தேர்தல் வீயூக நிபுணர் பிரசாந்த் கிஷோர், “2025 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வரைகூட இந்த புதிய கூட்டணி நீடிக்காது. இதனை நான் உங்களுக்கு எழுதி தருகிறேன். நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த 6 மாதங்களில் இந்தக் கூட்டணியில் மீண்டும் மாற்றம் நடக்கும். இதனைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். என்னுடைய கணிப்புப்படி சட்டமன்ற தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளத்தால் 20 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெறமுடியாது. அப்படி வெற்றிபெற்றுவிட்டால், நான் இதிலிருந்து ஓய்வு பெறுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார். 

Next Story

டெல்லியில் இன்று தொடங்குகிறது ஜி20 உச்சி மாநாடு

Published on 09/09/2023 | Edited on 09/09/2023

 

G20 summit begins today in Delhi

 

ஜி20 உறுப்பு நாடுகளாக அர்ஜெண்டினா, ஆஸ்திரேலியா, பிரேசில், கனடா, சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இந்தோனேசியா, இத்தாலி, ஜப்பான், கொரியக் குடியரசு, மெக்சிகோ, ரஷ்யா, சவுதி அரேபியா, தென் ஆப்பிரிக்கா, துருக்கி, இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை உள்ளன. ஜி20 அமைப்பின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உச்சி மாநாடு நடைபெறுவது வழக்கம்.

 

அந்த வகையில் இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறும் ஜி20 உச்சி மாநாட்டுக்கு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்றுள்ளது. அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஜி20 தொடர்புடைய மாநாடுகள் மற்றும் கருத்தரங்குகள் நடைபெற்று வந்தன. இதனைத் தொடர்ந்து டெல்லியில் இன்றும், நாளையும் என இரு நாட்கள் ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஜி20 உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் இந்தியாவிற்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதனால் விமான நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

 

இந்நிலையில் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், ஜெர்மன் அதிபர் பிராங் வால்டர் சென்மர், இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, அர்ஜெண்டினா அதிபர் ஆல்பர்ட்டோ பெர்னாண்டஸ், ஆப்பிரிக்க ஒன்றிய தலைவரும் கொமோரஸ் அதிபருமான அசாலி அசவுமானி, வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜெய் லவ்ரோ, ஓமன் துணை பிரதமர் சயித் பகத் மின் மக்மூத் அல் சாயித், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ், சர்வதேச நிதியத் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் டெல்லி வந்துள்ளனர்.