Skip to main content

'2016' தேர்தலில் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வென்றவர்கள்!

Published on 01/05/2021 | Edited on 01/05/2021

 

2016 tn assembly election admk and dmk candidates votes

 

தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகளும், சில மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் மக்களவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் நாளை (02/05/2021) எண்ணப்பட்டு, நாளையே தேர்தல் முடிவுகளும் வெளியாகவுள்ளது. கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி வாக்கு எண்ணிக்கையை நடத்துவதற்கான ஏற்பாடுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் செய்துள்ளது.

 

தமிழக முன்னாள் முதல்வர்களான ஜெயலலிதா, கலைஞர் மறைவுக்கு பிறகு நடந்த முதல் சட்டமன்றத் தேர்தல் என்பதால், தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. 

 

தேர்தலில் பதிவான ஒவ்வொரு வாக்குகளும் முக்கியம். எப்படி என்று கேட்கிறீர்களா? கடந்த 2016- ஆம் ஆண்டு நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர்கள் வெற்றி, தோல்வியைச் சந்தித்தனர்.

 

குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றவர்கள், தோல்வி அடைந்தவர்கள் குறித்து பார்ப்போம்!

ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட அப்பாவு வெறும் 49 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட இன்பதுரை 69,590 வாக்குகளும், அப்பாவு 69,541 வாக்குகளும் பெற்றனர். 

 

காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட முருகுமாறன் 48,450 வாக்குகளும், தொல்.திருமாவளவன் 48,363 வாக்குகளும் பெற்றனர். 

 

திண்டிவனம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.சீதாபதி 101 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.பி.ராஜேந்திரன் 61,778 வாக்குகளும், பி.சீதாபதி 61,879 வாக்குகளும் பெற்றனர். 

 

செய்யூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.டி.அரசு 304 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.முனுசாமி 63,142 வாக்குகளும், ஆர்.டி.அரசு 63,446 வாக்குகளும் பெற்றனர்.  

 

கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கடம்பூர் ராஜு 428 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சரானார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.சுப்ரமணியன் 64,086 வாக்குகளும், கடம்பூர் ராஜு 64,514 வாக்குகளும் பெற்றனர்.

 

கரூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.ஆர்.விஜயபாஸ்கர் 441 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அமைச்சரானார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.சுப்ரமணியன் 81,495 வாக்குகளும், எம்.ஆர்.விஜயபாஸ்கர் 81,936 வாக்குகளும் பெற்றனர். 

 

தென்காசி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட செல்வமோகன்தாஸ் பாண்டியன் 462 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட எஸ்.பழனி நாடார் 85,877 வாக்குகளும், செல்வமோகன்தாஸ் பாண்டியன் 86,339 வாக்குகளும் பெற்றனர். 

 

ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.சுந்தர்ராஜ் 493 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி 64,578 வாக்குகளும், ஆர்.சுந்தர்ராஜ் 65,071 வாக்குகளும் பெற்றனர். 

 

பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 519 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் போட்டியிட்ட பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர்.தனபாலன் 79,455, வெற்றிவேல் 79,974 வாக்குகளும் பெற்றனர். 

 

திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோவி செழியன் 532 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட யு.சேது 77,006 வாக்குகளும், கோவி செழியன் 75,538 வாக்குகளும் பெற்றனர்.

 

திருநெல்வேலி சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஏ.எல்.எஸ்.லக்ஷ்மணன் 601 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 81,160 வாக்குகளும், ஏ.எல்.எஸ்.லக்ஷ்மணன் 81,761 வாக்குகளும் பெற்றனர். 

 

திருமயம் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எஸ்.ரகுபதி 766 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட பி.கே.வைரமுத்து 71,607 வாக்குகளும், எஸ்.ரகுபதி 72,373 வாக்குகளும் பெற்றனர்.

 

பரமத்தி வேலூர் சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கே.எஸ்.மூர்த்தி 818 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஆர்.ராஜேந்திரன் 73,600 வாக்குகளும், கே.எஸ்.மூர்த்தி 74,418 வாக்குகளும் பெற்றனர். 

 

திருப்போரூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கோதண்டபாணி 950 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட விஸ்வநாதன் 69,265 வாக்குகளும், கோதண்டபாணி 70,215 வாக்குகளும் பெற்றனர்.

 

பர்கூர் சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட வி.ராஜேந்திரன் 982 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ஈ.சி.கோவிந்தராஜன் 79,668 வாக்குகளும், வி.ராஜேந்திரன் 80,650 வாக்குகளும் பெற்றனர். 

 

பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்ட எம்.கோவிந்தராசு 995 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட என்.அசோக்குமார் 72,913 வாக்குகளும், எம்.கோவிந்தராசு 73,908 வாக்குகளும் பெற்றனர். 

 

சார்ந்த செய்திகள்

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.