Skip to main content

சசி-எடப்பாடி சமரசம்! புது ரூட் போடும் சொந்தங்கள்!

Published on 20/11/2020 | Edited on 20/11/2020
Sasikala

 

கடந்த 11ஆம் தேதி தஞ்சாவூர் பக்கத்தில் சுவாமிமலை ரிசார்ட்டில் தினகரனின் மகள் ஜெய ஹரிணிக்கும், துளசி அய்யா வாண்டையார் பேரன் ராமநாதனுக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிச்சயதார்த்தத்துக்கு திவாகர் அழைக்கப்படவில்லை. 14ஆம் தேதி தினகரனின் மாமனாரும் அனுராதா, பிரபா, டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரின் அப்பாவுமான சுந்தரவதனம் மரணமடைந்தார். பல நாட்களாக பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல்நலம் சரியில்லாமல் இருந்த சுந்தரவதனம், சசிகலாவின் சகோதரர்.

 

சசிகலாவின் குடும்பத்தில் மூத்தவரான சுந்தரவதனத்தின் மறைவு சசிகலாவை ரொம்பவே பாதித்தது. விவேகானந்தனின் மறைவுக்காக சசிகலா பரோலில் வர முயற்சி செய்தார். உடனடியாக அவருக்கு பரோல் தரமுடியாது என சிறை நிர்வாகத்தின் தரப்பில் வாய்மொழியாக சொல்லப்பட்டது. சசிகலா வரவில்லை. ஆனால் ஒட்டுமொத்த மன்னார்குடி குடும்பமே அந்த இறுதி நிகழ்வில் பங்கெடுத்தது. சென்னையில் வைக்கப்பட்டிருந்த அவரது உடல் தஞ்சாவூருக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு ஒருநாள் வைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது. கரோனாவால் பாதிக்கப்பட்ட ஜெயா டி.வி பாஸ்கரனை தவிர மற்ற அனைவரும் அந்த துக்க நிகழ்வில் பங்கெடுத்தனர். டிடிவி தினகரன், அனுராதா, பிரபா அவரின் கணவர் டாக்டர்.சிவகுமார், திவாகரன் அவரது மகன் ஜெய் ஆனந்த், சுதாகரனின் மனைவி, பாஸ்கரனின் மனைவி என ஒட்டுமொத்தமாக மன்னார்குடியே தஞ்சாவூரில் உள்ள சசிகலாவின் வீட்டில் திரண்டிருந்தது.

 

ddd

                                                                                  சுந்தரவதனம்

 

திவாகரனும், தினகரனும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் திவாகரனின் மனைவியும், தினகரனின் மனைவியும், மறைந்த சுந்தரவதனத்தின் மகளுமான அனுராதாவிடம் பேசினார். அதேபோல் ஜெயா டி.வி எம்.டியான விவேக், தினகரனுடன் சமீபகாலமாக பேசாமல் இருந்தார். அவரும் தினகரனோடு பேசினார். இப்படி மன்னார்குடி சொந்தங்கள் ஒன்றோடு ஒன்றாக இணைந்து பேசிய பேச்சு அரசியல் பக்கம் திரும்பியது. சொந்தபந்தங்கள் அரசியல் பேசவேண்டாம் என்ற சசிகலாவின் கட்டளையை மீறி இது நடந்தது.

 

சசிகலா வெளியே வந்தால் என்ன நடக்கும் என்ற பேச்சு அங்கு எழுந்தது. சசிகலாவுக்காக தி.நகரில் ஒரு புத்தம் புதிய மாளிகை ஒன்று தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள வசதிகள் பற்றி பேச்சு வந்தது. அதன்பிறகு எடப்பாடி ஆட்சி, பற்றியும், அமைச்சர் துரைக்கண்ணு மரணம், கைப்பற்றப்பட்ட கோடிகள் என பேச்சில் சுவாரசியம் அதிகரித்தது. இனி எடப்பாடியுடன் எப்படி நடந்து கொள்வது என்பது பற்றி மன்னார்குடி சொந்தங்களுடன் ஒரு பட்டிமன்றமே நடந்தது.

 

ddd

                         விவேக்            ஜெய் ஆனந்த்         தினகரன்      திவாகரன் 

 

தினகரன் தரப்பு, அ.ம.மு.க. உடன் கூட்டணி சேர்ந்து மூன்றாவது அணியை உருவாக்க காங்கிரஸ் தரப்பிலிருந்து அழைப்புகள் வருகிறது என்று தெரிவித்தனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திவாகரன் தரப்பினர் எடப்பாடி பழனிச்சாமி திவாகரனுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் பேசுகிறார். அமைச்சர்கள் எல்லோரும் நல்லபடியே இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி தூண்டிவிட்டுதான் வருமானவரித்துறை அதிகாரிகள் சசிகலாவின் 1,500 கோடி சொத்துக்களை மடக்கினார்கள். அதெல்லாம் இப்பொழுது மாறிவிட்டது. எடப்பாடி பழனிச்சாமி சசிகலாவுக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறார் என்றார்கள். ஆனால் இதைப்பற்றி எல்லாம் வெளியில் பேசுவதற்கு சசிகலா அனுமதித்ததில்லை என தினகரன் தரப்பினரும், திவாகரன் தரப்பினரும் பேசிக்கொண்டார்கள்.

 

அதேநேரத்தில் சசிகலாவின் ஆஸ்தான தளபதிகளாக இருந்த ராவணன் போன்றோர் கொங்குமண்டல அமைச்சர்கள் தங்களிடம் சசிகலாவுக்கு ஆதரவாக நடந்துகொள்வதாக வாக்களித்திருக்கிறார்கள் என பதிவு செய்தனர். இப்படி ஒட்டுமொத்த அதிமுகவும் சசிகலா தரப்பிடம் பணிந்து நிற்கிறது என்பது போன்ற இமேஜ் அந்த மரண வீட்டிற்கு வந்த வந்தவர்கள் மத்தியில் உருவாகியிருந்தது என்கிறார்கள் சசிகலாவுக்கு நெருக்கமான மன்னார்குடி வட்டாரத்தை சேர்ந்தவர்கள்.

 

ddd

 

இதற்கிடையே ஓபிஎஸ் எப்படி இருக்கிறார் என்கின்ற சிறு பட்டிமன்றமும் அங்கு நடைபெற்றது. சசிகலா விஷயத்தில் பா.ஜ.க. இணக்கமாகவே இருக்கிறது. ஜனவரி மாதம் ரிலீஸ் ஆவதற்கு க்ரீன் சிக்னல் காட்டி விட்டது. பாஜக ஒத்துழைக்கும் நேரத்தில் ஓபிஎஸ்ஸும் சசிகலாவுக்கு ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறார். சசிகலா வந்ததுமே எடப்பாடி முதல்வராக தொடர்வாரா என்கின்ற சந்தேகம்தான் இப்பொழுது எழுந்துள்ளது. அதிமுகவை தனது முழு கட்டுப்பாட்டில் எடப்பாடி வைத்திருக்கிறார். எனவே எடப்பாடிக்கு யாராவது தொந்தரவு கொடுத்தால் அது சசிகலாவிற்கு எதிரானதாக மாறிவிடும் என்கின்ற வாதமும் எடுத்து வைக்கப்பட்டது.

 

இந்நிலையில் எடப்பாடிக்கு நெருக்கமான சேலம் இளங்கோவனின் மகன் பிரவீனின் திருமணம் வருகின்ற 27ஆம் தேதி சேலத்தில் நடைபெற இருக்கின்றது. மகாதேவனுக்கு நெருக்கமான இளங்கோவன், சசிகலா குடும்பத்துடன் நல்ல அறிமுகத்தை கொண்டவர். அவரது மகனின் திருமணத்திற்கு சசிகலாவின் உறவினர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். அந்தத் திருமணத்தில் எடப்பாடியும் கலந்து கொள்கிறார். அந்த திருமணத்தின் போது எடப்பாடிக்கும், சசிகலாவுக்கும் இடையேயான பேச்சுவார்த்தை வலுப்பெறும் என மன்னார்குடி சொந்தங்கள் நம்பிக்கை தெரிவித்தபடி கலைந்து சென்றார்கள்.

 

-தாமோதரன் பிரகாஷ்,
துரை மகேஷ்

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.