குமுறிக் கொந்தளிக்கும் தி.மு.க.! ஸ்டாலின் சந்திக்கும் சவால்!
இவ்விதழின் கட்டுரைகள்
சென்றவார இதழ்கள்
Next Story
“இடைத்தேர்தல் முடிந்த உடனே பகுதி நேர ரேஷன் கடைகள் கொண்டுவரப்படும்” - எம்.எல்.ஏ ஐ.பி.செந்தில் குமார்
![Partial narration shops will be brought soon after by-elections says MLA Senthil Kumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/8CNx8qFHzt3Sosi1wyB7aywTesaFYWSWVNfdwyELuV8/1720073073/sites/default/files/inline-images/18_104.jpg)
விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட சோழாம்பூண்டி, சோழனூர் பகுதியில் திண்டுக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், பழனி சட்டமன்ற தொகுதி திமுக உறுப்பினருமான ஐ.பி.செந்தில்குமார் தீவிரமாக பிரச்சாரம் செய்து வேட்பாளர் அன்னியூர் சிவாவுக்கு உதய சூரியன் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது சோழாம்பூண்டியைச் சேர்ந்த தொகுதி மக்களை சந்தித்து வீடு வீடாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு பழனி சட்டமன்ற உறுப்பினரும் கிழக்கு மாவட்ட செயலாளருமான ஐ.பி.செந்தில்குமார் கட்சிக்காரர்களுடன் சேர்ந்து வாக்கு சேகரித்தார்.
![Partial narration shops will be brought soon after by-elections says MLA Senthil Kumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/hrRSbzNC0Iu2QqBTYwMbk2B4KRHEk46AyrMAWCJCSu8/1720073133/sites/default/files/inline-images/17_123.jpg)
அதன் பின் பொதுமக்கள் மத்தியில் ஐ.பி.செந்தில்குமார் பேசும் போது, “இந்தத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த மறைந்த புகழேந்தி சட்டமன்றதத்தில் உரையாற்றும்போது தனது தொகுதிக்குட்பட்ட சோழனூர், சோழாம்பூண்டி பகுதிக்கு பகுதிநேர ரேஷன்கடை வேண்டும் எனக் கோரிக்கை விடுத்திருந்தார். அதன்பின்னர் அவர் காலமானதால் தற்போது நடைபெறும் இடைத்தேர்தலில் திமுக சார்பாக அன்னியூர் சிவா போட்டியிடுகிறார். திமுக மாநில துணை பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான ஐ.பெரியசாமி மற்றும் உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி அவர்களுடன் பிரச்சாரத்திற்கு வந்தபோது இப்பகுதி மக்களிடம் அவர்கள் சட்டமன்ற தேர்தல் முடிந்த பின்பு பொதுமக்களின் கோரிக்கையான பகுதிநேர ரேஷன்கடை, பொது கழிப்பறை வசதி, பேருந்து நிழற்குடை வசதி, வேண்டுமென கேட்டுள்ளனர். அவரும் இடைத்தேர்தல் முடிந்த பின்பு நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார்.
அவர் வாக்குறுதி அளித்தபடி பகுதி நேர ரேஷன் கடை உட்பட அனைத்து கோரிக்கைகளும் இடைத்தேர்தல் முடிந்தபின்பு உடனடியாக நிறை வேற்றப்படும். அதுபோல் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு நூறு நாள் வேலை கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர். அதைத் தொடர்ந்து தான் 400 பேருக்கு 300 ரூபாய் சம்பளத்தில் கொடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.
![Partial narration shops will be brought soon after by-elections says MLA Senthil Kumar](http://image.nakkheeran.in/cdn/farfuture/eEWQFNM_T3FVtL7uv3FMn-vB3X1dvElIwRPjNmoUNNI/1720073151/sites/default/files/inline-images/16_139.jpg)
இதில் மாவட்டத் துணைச் செயலாளர்கள். நாகராஜன், பிலால் உசேன், வேடசந்தூர் ஒன்றிய செயலாளர் வீராசாமி நாதன், மாவட்ட துணைச் சேர்மன் விஜயன், திண்டுக்கல் துணை மேயர் ராஜப்பா, ஒன்றிய செயலாளர் நெடுஞ் செழியன், திண்டுக்கல் பகுதி செயலாளர்களான கிழக்கு பகுதி செயலாளர் ராஜேந்திரகுமார், மேற்கு பகுதி செயலாளர் அக்கு, தெற்கு பகுதி செயலாளர் சந்திர சேகர், கவுன்சிலர் ஜான் பீட்டர் உட்பட கட்சி பொறுப்பாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
Next Story
'சட்ட ஒழுங்கை காக்க திமுக எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை' - எடப்பாடி கண்டனம்
!['DMK does not seem to have taken any action to protect law and order' - Edappadi condemned](http://image.nakkheeran.in/cdn/farfuture/-6lLfsa-qBqCCWCTVfHiYTIyrlP84PdOyH53_WTkfs4/1720072419/sites/default/files/inline-images/a72522.jpg)
சேலத்தில் அதிமுக பிரமுகர் இரவில் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.
சேலம் கொண்டலாம்பட்டி அதிமுக செயலாளர் சண்முகம். இவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த நிலையில் சஞ்சீவிராயன் பேட்டை மாரியம்மன் கோவில் தெரு பகுதியில் திடீரென அவரை வழிமறித்த அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதிர்ச்சிக்குள்ளான அக்கம் பக்கத்தினர் மற்றும் அதிமுகவினர் நிகழ்விடத்திற்கு வந்தனர்.
காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த சண்முகத்தின் குடும்பத்தினர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை கைது செய்யும் வரை சடலத்தை எடுக்கக் கூடாது என அங்கிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் பதற்றம் நிலவியது. நீண்ட நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடலை மீட்ட போலீசார் சேலம் அரசு மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். உயிரிழந்த சண்முகம் 2011 முதல் 2016 ஆம் ஆண்டு வரை சேலம் மாநகராட்சி கொண்டலாம்பட்டி மண்டலத் தலைவராக பதவி வகித்துள்ளார். ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்களிலும் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். கொலைக்கான காரணம் முன்விரோதமா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது தொடர்பாக மோப்ப நாயுடன் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏற்கனவே கடலூரில் அதிமுக நிர்வாகி ஒருவர் திருட்டு ஆடுகள் வாங்கியதில் ஏற்பட்ட முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்ட நிலையில் தற்போது சேலத்தில் அதிமுக நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் சாலையிலேயே வெட்டி படுகொலை செய்யப்பட்டது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
!['DMK does not seem to have taken any action to protect law and order' - Edappadi condemned](http://image.nakkheeran.in/cdn/farfuture/yIv3Zx7m5GmflwME49lBoJVwXsd_qFOds6v3h7wUpW8/1720072481/sites/default/files/inline-images/n588_2.jpg)
கடலூரில் அதிமுக நிர்வாகி கொலை செய்யப்பட்ட போதே கடுமையாக கண்டனங்களை தெரிவித்திருந்த அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, திமுக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்; சட்ட ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என அறிக்கை வெளியிட்டிருந்தார் .இந்நிலையில் சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இது குறித்து அவரது அறிக்கையில், 'அதிமுக நிர்வாகி சண்முகம் கொலை செய்யப்பட்டது வேதனை அளிக்கிறது. சட்ட ஒழுங்கை பாதுகாக்க திமுக அரசு எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. கொலை குற்றத்தில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் உடனடியாக கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என வலியுறுத்தியுள்ளார்.