Skip to main content

திரையரங்கில் 'சூரரைப்போற்று'... கொண்டாடும் ரசிகர்கள்!

Published on 04/02/2022 | Edited on 04/02/2022

 

surya starring soorarai pottru film rerelease on madurai theatre

 

கடந்த 2020 ஆம் ஆண்டு இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிப்பில்  ‘சூரரைப் போற்று’ திரைப்படம் அமேசான் ஓடிடி தளத்தில்  வெளியானது  ஏர் டெக்கான் நிறுவனர் கேப்டன் ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பு கிடைத்தது.  இருப்பினும் ரசிகர்கள் சூரரைப்போற்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி இருந்தால் கூடுதல் சிறப்பாக இருந்திருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்து வந்தனர்.

 

இந்நிலையில் சூர்யாவின் 'சூரரைப்போற்று' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. மதுரையில் உள்ள மிட்லண்ட் திரையரங்கில் 'சூரரைப்போற்று' திரைப்படம் (4.2.2022) திரையிடப்பட்டுள்ளதால் ரசிகர்களை பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். மேலும் காலையில் இருந்தே சூர்யா கட்டவுட்டிற்கு மலை அணிவித்து பல அபிஷேகம் செய்து 'சூரரைப்போற்று' சூர்யாவை திரையில் பார்த்து கொண்டாடி வருகின்றனர். 

 

தமிழில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ‘சூரரைப் போற்று’ திரைப்படம் தற்போது இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தமிழ்நாடு அரசுத் திரைப்பட விருது விழா - பரிசு பெற்ற திரைப் பிரபலங்கள்

Published on 06/03/2024 | Edited on 06/03/2024

 

தமிழ்நாடு அரசின் சார்பில் திரைப்பட விருதுகள் மற்றும் தமிழ்நாடு அரசு எம்.ஜி.ஆர். திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள் வழங்கும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரம் முத்தமிழ்ப் பேரவை டி.என். ராஜரத்தினம் கலையரங்கில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மு.பெ. சாமிநாதன் விழாவிற்குத் தலைமையேற்று விருது அறிவித்தவர்களுக்கு தங்கப்பதக்கம் வழங்கினார். மேலும் அமைச்சர்கள் மா. சுப்பிரமணியன், சேகர் பாபு ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். விருது அறிவிக்கப்பட்ட பலரும் நிகழ்வில் கலந்துகொண்டு விருது, சான்றிதழ் மற்றும் பரிசுத் தொகையைப் பெற்றுக் கொண்டனர்.
 

Next Story

சூர்யாவுக்கு ஜோடியாகும் இளம் கதாநாயகி

Published on 11/01/2024 | Edited on 11/01/2024
aditi shankar to pair suriya in new film

சூர்யா தற்போது தனது 42வது படமான ‘கங்குவா’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சிறுத்தை சிவா இயக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.  3டி முறையில் சரித்திரப் படமாக 10 மொழிகளில் வெளியாக உள்ள இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. வருகிற ஏப்ரலில் இப்படம் வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது. 

ad

இப்படத்தை தனது 43வது படத்திற்காக சுதா கொங்கராவுடன் கூட்டணி வைத்துள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா, பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர். கடந்த அக்டோபர் மாதம் வெளியான அறிவிப்பு வீடியோவில், படத்தின் தலைப்பு மறைக்கப்பட்டு  'புறநானூறு' என்ற டேக் லைன் மட்டும் இடம் பெற்றிருந்தது. இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கவுள்ள நிலையில் அவருக்கு 100வது படமாக அமைந்துள்ளது. சமீபத்தில் இப்படத்திற்கான பாடல் ஒன்றை பாடகி தீ குரலில் பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாத இறுதியில் மதுரையில் உள்ள கல்லூரியில் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. 

இப்படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக கடந்த ஆண்டு மத்தியில் தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இதே தகவல் உலா வந்து கொண்டிருக்கிறது. விரைவில் கதாநாயகி குறித்தான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.