Skip to main content

"சீமான் அண்ணே... நம்ம புள்ளைக்கு ஒரு பட்டம் வச்சு விடுங்க" - ராஜூமுருகன் கலகலப்பு

Published on 28/07/2019 | Edited on 28/07/2019

பூமணி, கிழக்கும் மேற்கும், நிலவே முகம் காட்டு உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கியுள்ளவர் மு.களஞ்சியம். கடந்த சில ஆண்டுகளாக தமிழ் தேசிய இயக்கங்களுடன் தீவிரமாக இயங்கி வந்த இவர், சீமானுக்கு நெருக்கமாகவும் இருக்கிறார். தற்போது 'முந்திரிக்காடு' என்ற படத்தை இயக்கியுள்ளார் களஞ்சியம்.

 

director rajumurugan



முக்கிய பாத்திரத்தில் சீமான் நடித்துள்ள இப்படத்தில் நாயகனாக புகழ் நடித்துள்ளார். புகழ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவரான சி.மகேந்திரனின் மகன் ஆவார். 'முந்திரிக்காடு' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இப்படத்தின் பாடல்களை கவிபாஸ்கர் எழுத ஏ.கே.பிரியன் இசையமைத்துள்ளார். விழாவில் நல்லகண்ணு, சி.மகேந்திரன் உள்ளிட்ட கம்யூனிஸ்ட் தலைவர்களும் ராஜூமுருகன், சசி உள்ளிட்ட பல இயக்குனர்களும் கலந்துகொண்டனர். படத்தில் நடித்துள்ள 'நாம் தமிழர் கட்சி' தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் கலந்துகொண்டார்.

விழாவில் பேசிய இயக்குனர் ராஜூமுருகன், விழாவில் கலந்துகொண்ட முக்கிய பிரமுகர்களை ஒவ்வொருவராகக் குறிப்பிடுகையில்    "எங்களிடம் எஞ்சியிருக்கும் விதை நெற்களில் ஒன்றான அண்ணன் சீமான்" என்று குறிப்பிட்டார். இயக்குனர் களஞ்சியம் குறித்தும் படம் குறித்தும் பேசிய அவர், படத்தின் நாயகன் புகழ் குறித்துப் பேசும்போது "ஒரு இடது சாரி தந்தை வளர்த்த மகன் எப்படி இருப்பான் என்பதற்கு புகழ் உதாரணம். அப்படி ஒரு அருமையான பிள்ளை அவன். 'இந்தப் படம் எப்படியாவது வந்தரணும்ணே' என்று ரொம்ப நாளா காத்திருக்கான். திரைப்படத்தை மிகத் தீவிரமாக நேசிக்கக்கூடியவன் அவன். கண்டிப்பாக புகழ் ஒரு முக்கிய நடிகனாக வருவான்" என்று கூறினார்.

pugazh mundhirikadu

அதற்கு முன்பாக சிரித்துக்கொண்டே சீமானிடம் ஒரு கோரிக்கை வைத்தார். "இந்த மேடையில அண்ணண் சீமான்கிட்ட ஒரு வேண்டுகோளா கேக்குறேன். சூப்பர் ஸ்டார், இளைய தளபதின்னு யார் யாரோ இருக்காங்க. நீங்க, நம்ம புள்ளைக்கு ஒரு பட்டத்தை வச்சு விடுங்க" என்று ராஜூமுருகன் கூற அரங்கம் கலகலப்பானது. பின்னர் பேசிய சீமான், "தம்பி ராஜூமுருகன் சொன்னான் புகழுக்கு ஒரு பேர் வைக்கச்சொல்லி. இன்னைக்கு புரட்சின்னா என்னனு தெரியாதவன் எல்லாம் புரட்சி நாயகன், அது இதுன்னு வச்சுக்குறான். எங்களுக்கெல்லாம் புரட்சின்னா என்னனு சொல்லிக்கொடுத்தவரோட பிள்ளை நீ. இனிமேல் நீ 'எழுச்சி நாயகன்'னு வச்சுக்க" என்று நடிகர் புகழுக்கு பட்டம் சூட்டினார்.                       

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மேட் இன் ஜப்பான் குவாலிட்டியா? - ‘ஜப்பான்’ விமர்சனம்!

Published on 11/11/2023 | Edited on 11/11/2023

 

japan movie review

 

பொன்னியின் செல்வன் 1 & 2, சர்தார் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்து வெற்றி நாயகனாக வளர்ந்து வந்து கொண்டிருக்கும் கார்த்தி இந்த முறை கலை படங்கள் மூலம் கவனம் ஈர்க்க ராஜு முருகனுடன் கைகோர்த்து ஒரு அதிரடி கமர்சியல் நிறைந்த ஜப்பான் படத்தோடு இந்த தீபாவளி ரேசில் குதித்துள்ளார். இந்த ரேஸில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா?

 

கோயம்புத்தூரில் மிகப்பெரிய நகை கடை ஒன்றின் சுவரில் துளையிட்டு 200 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்படுகின்றன. இந்தக் கொள்ளை சம்பவத்தை மிகப்பெரிய கொள்ளைக்காரனான ஜப்பான் கார்த்திதான் அரங்கேற்றுகிறார் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் சுற்றிக்கொண்டு ஆங்காங்கே கொள்ளையடித்துக் கொண்டு ராஜ வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் கோடீஸ்வர திருடன் ஜப்பான் கார்த்தியை பிடிக்க போலீசார் விஜய் மில்டன் தலைமையில் தனிப்படை அமைக்கின்றனர். போலீசார் ஒரு பக்கம் ஜப்பான் கார்த்தியை வலை வீசித் தேட, இன்னொரு பக்கம் ஜப்பான் கார்த்தி போலீசாரிடம் இருந்து தன் காதலி அனு இமானுவேலுடன் தப்பித்து ஒவ்வொரு இடமாக புலம்பெயர்ந்து கொண்டே இருக்கிறார். இறுதியில் அந்த நகைக் கடையை கொள்ளையடித்தது யார்? ஜப்பான் கார்த்தி போலீசாரிடம் பிடிபட்டாரா, இல்லையா? என்பதே இந்தப் படத்தின் மீதிக் கதை.

 

தமிழ் சினிமாவில் குக்கூ, ஜோக்கர் போன்ற தரமான படங்களைக் கொடுத்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்ற ராஜுமுருகன் இந்த முறை கமர்சியல் பார்முலாவில் ஒரு படத்தை இயக்கி அதன் மூலம் முன்னணி கமர்சியல் இயக்குநர் பட்டியலில் இணைய ஜப்பான் மூலம் முயற்சி செய்திருக்கிறார். இந்த முயற்சியில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா? என்றால் சந்தேகமே!

 

படத்தின் முதல் பாதி யாரும் எதிர்பாராத வகையில் மிகவும் மெதுவாக ஆரம்பித்து போகப் போக கொஞ்சம் கொஞ்சம் வேகம் எடுத்துள்ளது. பின்பு இதை சரிகட்டும் விதமாக இரண்டாம் பாதி அமைந்து சற்றே நமக்கு ஆறுதல் அளித்துள்ளது. படத்தின் நாயகன் ஒரு மிகப்பெரிய திருடன் என்று வெறும் வாய் வார்த்தைகளால் மட்டுமே கூறியிருக்கும் இயக்குநர் அதற்கான எந்த ஒரு செயல்பாட்டையும் படம் முழுவதிலும் ஒரு இடத்தில் கூட காட்டவில்லை. அதுவே படத்திற்கு சற்று மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இருந்தும் கார்த்தி இந்த படத்தில் வித்தியாசமாக இழுத்து இழுத்து பேசும் வசன உச்சரிப்பு ஆரம்பத்தில் சற்று அயர்ச்சியைக் கொடுத்தாலும் போகப் போக அதுவே நமக்கு பழகி ரசிக்கும்படி மாறி விடுகிறது. குறிப்பாக படத்தில் ஆங்காங்கே நிகழ் கால அவலங்களை கண்டிக்கும் வகையில் வரும் பஞ்ச் வசனங்கள் சிறப்பாக அமைந்து ரசிக்க வைத்துள்ளனர்.

 

ஒரு அதிரடியான கதையைத் தேர்ந்தெடுத்த இயக்குநர், ஏனோ திரைக்கதையில் அந்த அதிரடியை காட்டாமல் மிகவும் தொய்வாகவும் அதே சமயம் பல்வேறு லாஜிக் மீறல்களோடும் படத்தை உருவாக்கியுள்ளார். படத்தில் நாயகி கதாபாத்திரமும் சொல்லிக் கொள்ளும்படி பெரிதாக அமையவில்லை. அதேபோல் நாயகன் கார்த்திக்கு ஒரு மிகப்பெரிய வியாதி இருப்பதுபோல் காட்டியிருப்பது படத்திற்கு அது எந்த வகையில் உதவி புரிந்தது என்பதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. இருந்தும் கார்த்தியின் ஒன் மேன் ஷோ மற்றும் அவரது ஒன்லைன் காமெடிகள் படத்தை தனியாளாக தூக்கி நிறுத்த முயற்சி செய்துள்ளது. அதேபோல் தனக்கு என்ன வருமோ அதையே ராஜுமுருகன் செய்திருக்கலாம்.

 

நாயகன் கார்த்தி எப்பொழுதும் போல் தனது உடல் பொருள் ஆவி என அனைத்தையும் கொடுத்து இந்த படத்திலும் நடித்திருக்கிறார். அது ஆரம்பத்தில் சில இடங்களில் நமக்கு எரிச்சல் ஏற்படுத்தி இருந்தாலும், போகப் போக பல இடங்களில் அதுவே பிளஸ் ஆக மாறி நம்மை ரசிக்க வைத்துள்ளது. அதேபோல் அவர் பல்லை கடித்துக்கொண்டு பேசும் பஞ்ச் வசனங்களும் நிகழ்கால அரசியலையும், நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும் நையாண்டி செய்திருப்பது படத்திற்கு பலமாக அமைந்திருக்கிறது. வழக்கமான நாயகியாக வந்து செல்கிறார் அனு இமானுவேல். அவருக்கு பெரிதாக வேலை இல்லை. கார்த்தியுடன் படம் முழுவதும் பயணிக்கும்படியான கேரக்டரில் வரும் வாகை சந்திரசேகர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது அனுபவ நடிப்பின் மூலம் கவனம் பெற்றிருக்கிறார்.

 

கார்த்தியின் நண்பராகவும் மற்றும் வில்லனாகவும் வரும் ஜித்தன் ரமேஷ் அவருக்கான வேலையை செய்திருக்கிறார். தெலுங்கு நடிகர் சுனில் போலீசாக வருகிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் கே.எஸ். ரவிக்குமார் மனதில் பதிகிறார். மிரட்டல் போலீசாக வரும் விஜய் மில்டன் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை நிறைவாக செய்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை நிறைவாகவே செய்திருக்கின்றனர். ரவிவர்மன் ஒளிப்பதிவில் படம் பிரமாண்டமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக ஜப்பான் சம்பந்தப்பட்ட காட்சிகளும் பாடல் காட்சிகளும் மிக பிரமாண்டமாக காட்சிப்படுத்தி மிரட்டி இருக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையில் பாடல்கள் சுமார். பின்னணி இசை ஓகே.

 

தன்னுடைய பலமான காதல், செண்டிமெண்ட், சமூக அக்கறை கொண்ட தரமான படங்கள் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ராஜுமுருகன் அதை புறந்தள்ளி மூட்டை கட்டிவிட்டு தற்போது ட்ரெண்டில் இருக்கும் அதிரடியான கமர்சியல் ஃபார்முலா கொண்ட சினிமா என்ற கடலில் மூழ்கி முத்து எடுக்க முயற்சி செய்து அதில் தோல்வியை தழுவி இருக்கிறார்.

 

ஜப்பான் - மேட் இன் ஓல்ட் இந்தியா!

 


 

Next Story

"அமெரிக்கா... ஆஸ்திரேலியா... எல்லா நாட்டு பிரச்சனையும் என் பிரச்சனையா மாறி நிக்குது" - சீமான்

Published on 08/03/2023 | Edited on 08/03/2023

 

seeman speech at munthirikaadu movie press meet

 

எழுத்தாளர் இமையம் எழுதிய ‘பெத்தவன்’ என்கிற நெடுங்கதையை இயக்குநர் களஞ்சியம் இயக்க ஆதி திரைக்களம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'முந்திரிக்காடு'. இப்படத்தில் சீமான், புழல், சுபப்பிரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு இன்று நடைபெற்றது. அதில் படக்குழுவினருடன் பல்வேறு நபர்களும் கலந்துகொண்டு பேசினர்.  

 

அப்போது சீமான் பேசுகையில், "இந்த படம் வெளியாக தாமதமாகி விட்டது. காதல் என்றும் இருக்கிறது; சாதி இன்றும் இருக்கிறது. அதனால் இந்த படம் எப்ப வந்தாலும் புதுமையாகத் தான் இருக்கும். படத்தில் பணியாற்றிய அனைவரும் சிறப்பாக பணியாற்றியுள்ளார்கள். பரியேறும் பெருமாள் முன்பு இந்த படம் வந்திருந்தால் மிகப் பெரிய அளவில் பேசப்பட்டிருக்கும். தாமதம் ஆனதற்கு பொருளாதார சிக்கல் தான் காரணம். தணிக்கை குழு நிறைய காட்சிகளை, குறிப்பாக நான் பேசிய வசனங்களை வெட்டிவிட்டனர். பெருமைக்குரிய நிகழ்வாக மாற்றிய பெருமக்கள் இங்கு இருக்கிறார்கள். அதில் ஒன்று பாலன் ஐயா. உழைப்பால் சாதித்துக் காட்டியவர். கொஞ்ச நாளாக அவரிடம் நான் சொன்னேன்...  பயணச்சீட்டு போட்டு தாங்க என்று., நான் உங்களை தொல்லை செய்யவில்லை. ஏனென்றால் என் கடவுச்சீட்டை முடக்கி வைத்துள்ளார்கள். அவர், நன்றாக தூங்கி 40 ஆண்டுகள் ஆகிவிட்டது என சொல்லுவாங்க. அதையே தான் உங்க தம்பியும் அனுபவிச்சிட்டு இருக்கேன். 

 

நாம் தூங்குகிற நேரத்தில் ஃபோன் வரும். ஆஸ்திரேலியால பிரச்சனை.. அமெரிக்கால பிரச்சனை.. பிரான்ஸ்ல பிரச்சனை.. ஜெர்மனில பிரச்சனை... எல்லா நாட்டு பிரச்சனையும் என் பிரச்சனையா மாறி நிக்குது. அதற்காக என்ன செய்வது. இந்த இனத்தில் பிறந்துவிட்டோம். சில விஷயங்களை அனுபவித்து தான் ஆக வேண்டும். எனக்கு நடிக்க தெரியாது. என் இயல்பில் நான் இருப்பேன். இப்படம் சாதியத்துக்கு எதிரான ஒரு சாடல். சாதி எனும் கொடும் தீயினால் சமூகத்தில் நிகழும் தீங்கினை அழிப்பது தான் இந்த படம்" என்றார்.