Skip to main content

விஜய் 63-யின் பெயர் ‘பிகில்’?

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

‘தளபதி 63’ படத்தை இயக்குனர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தில் அட்லியும் விஜய்யும் இணைந்து பணிபுரிவதன் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளனர். 
 

atlee vijay

 

 

இந்த வருட தொடக்கத்தில் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் மற்றொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள், ஆர் ஆர் பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மேற்கொண்டு வருகிறார்.

 
இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த ஐந்தாம் தேதி பதிவு செய்த ஒரு ட்விட்டில் 'தளபதி 63' படத்தின் இரண்டு பாடல்களின் எடிட்டிங் பணி முடிந்துவிட்டதாகவும், இந்த இரண்டு பாடல்களையும் முதல்முதலில் பார்த்தது நான் தான் என்ற பெருமை தனக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். அதோடு அவர் பதிவு செய்துள்ள புகைப்படத்தில் இப்படத்தின் இயக்குனர் அட்லியும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 
அட்லி மற்றும் விஜய் கூட்டணியில் இதுவரை வெளியான படங்களின் பெயர்கள் தெறி, மெர்சல் என்று வைக்கப்பட்டிருந்தது. தளபதி 63 படத்திற்கு என்ன பெயர் வைக்கப்போகிறார் என்று அனைவரும் ஆவலாக உள்ளனர். முன்பு இப்படத்திற்கு மைக்கேல், சிஎம்( கேப்டன் மைக்கேல்) என்று வைக்க இருக்கிறார் என்று தகவல்கள் வெளியானது. தற்போது இந்த படத்திற்கு பிகில் என்று பெயர் வைக்கப்பட்டிருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. 


 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இரண்டாம் கட்ட கல்வி விழா- அதிகாலையிலேயே புறப்பட்ட விஜய்

Published on 03/07/2024 | Edited on 03/07/2024
Second phase of education ceremony- Vijay started to leave early in the morning

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் இரண்டாம் கட்டமாக நடைபெறும் மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழாவிற்காக தற்பொழுது திருவான்மியூரில் உள்ள மண்டபத்திற்கு சென்றுள்ளார்.

சென்னை திருவான்மியூரில் மண்டபம் ஒன்றில் இதற்கான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் நேரில் அழைத்துப் பாராட்டு தெரிவித்து வருகிறார். கடந்த வாரம் 28 ஆம் தேதி தென் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்ற இந்த நிலையில், இன்று புதுச்சேரி காரைக்கால் உட்பட 19 மாவட்டங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது நடிகர் விஜய் திருவான்மியூரில் உள்ள மண்டபத்திற்கு அதிகாலையிலேயே சென்றுள்ளார். மற்ற நேரங்களில் ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் அதிகாலையிலேயே அவர் மண்டபத்திற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. 725 மாணவ -மாணவிகள் உட்பட 3,500 பேர் இன்றைய பாராட்டு நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கின்றனர். இரண்டாம் கட்ட நிகழ்வில் பேச மாட்டேன் என விஜய் அன்று கூறியிருந்த நிலையில் திடீர் டிவிஸ்ட்டாக இன்று மாணவர்கள் மத்தியில் விஜய் பேசப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Next Story

‘விஜய் முதல்வர் ஆனால்... கோரிக்கை வைத்த மாணவரின் பெற்றோர்!

Published on 28/06/2024 | Edited on 28/06/2024
 Parents of the student who requested to vijay

நடப்பாண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு த.வெ.க தலைவர் விஜய் சான்றிதழும், ஊக்கத்தொகையும் இரண்டு கட்டங்களாக வழங்குவதாக அறிவித்திருந்தார். அதன்படி, இன்று(28-06-24) முதற்கட்டமாக அரியலூர், கோயம்புத்தூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி ,கரூர், கிருஷ்ணகிரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, புதுக்கோட்டை, இராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, திருப்பூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு சென்னை, திருவான்மியூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் விருதும், ஊக்கத்தொகையும் விஜய் வழங்கி வருகிறார்.

இதில் பேசிய மாணவரின் பெற்றோர் ஒருவர் விஜய்யிடம் வேண்டுகோள் விடுத்து அரங்கை அதிரை வைத்தார். அதில் பேசிய மாணவரின் பெற்றோர், “வரும் 2026ஆம் ஆண்டு தமிழகத்தில் நடைபெறும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியில் அமரும் பட்சத்தில், விஜய் முதலமைச்சர் ஆகும் பட்சத்தில் நான் 3 வேண்டுகோளை மட்டும் முன்வைக்கிறேன். தமிழகத்தில் நடைபெறும் சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என உங்களிடம் பணிவோடு வேண்டி கேட்டுக்கொள்கிறேன். அதே போல், தமிழகம் ஒரு சாதியற்ற சமூகமாக மாற வேண்டும், மலர வேண்டும் என்பதற்காக சாதி மறுப்பு திருமணம் செய்து கொள்ளும் தம்பதியர்களுக்கு சாதியற்றோர் என்ற அடையாளத்தை வழங்க வேண்டும். அவர்களுக்குக் கல்வி, வேலைவாய்ப்பில் தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பணிவோடு கேட்டுக் கொள்கிறேன். 

மேலும், தமிழகத்தில் குடிநோயாளிகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த தலைமுறை ஒரு குடிநோயாளிகளான சமூகமாக மாறிவிடக்கூடாது. ஆகவே, நீங்கள் முதலமைச்சராகப்  பதவியேற்கும் முதல்  கையெழுத்தாகத்  தமிழகம் ஒரு  மதுவற்ற  மாநிலமாக மாற வேண்டும், மலர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக்கொண்டு தமிழ் மக்கள் தெருவெல்லாம் உங்கள் பேச்சாக இருக்கட்டும். அதற்கு உங்கள் அறிவார்ந்த செயல்பாடுகளே எடுத்துக்காட்டாக இருக்கட்டும்.  தமிழ் குலம்  ஒரு நாள்  உன்னைத்  தலைமையில் அமர்த்தும் என அன்போடு வாழ்த்துகிறேன்”  எனப்  பேசினார்.