Skip to main content

தளபதி 63-ல் இசைப்புயலின் மகன்?

Published on 20/06/2019 | Edited on 20/06/2019

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.ஆர். அமீன். கடந்த 18ஆம் தேதி சோனி நிறுவனம் அமீன் சிறு வயதில் சங்கீதம் கற்றுக்கொள்ளும் வீடியோவை பகிர்ந்துள்ளது. அந்த வீடியோவில் தந்தையிடம் வீடியோ கான்பிரன்ஸிங்கில் பாடிக் காண்பிக்கிறார் அமீன்.
 

ar ameen

 

 

இந்த வீடியோவை வெளியிட்டுள்ள சோனி நிறுவனம், ‘காத்திருங்கள்’ எனப் பதிவிட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தற்போது ஏ.ஆர். ரஹ்மான் விஜய் நடிக்கும் தளபதி 63 படத்தில் பணி புரிந்துவருகிறார். அப்படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம்தான் வாங்கியுள்ளது. எனவே தளபதி 63ல் அமீன் பாடியிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ படத்தில் ‘மவுல வஸ்ஸல்லி வ சல்லிம்’ என்ற பாடலைப் பாடியுள்ளார் அமீன் என்பது குறிப்பிடத்தக்கது.
 

மேலும், 7அப் மெட்ராஸ் கிக் சீசன் 2வில் இந்த முறை இவர் இசையமைத்து ஒரு பாடல் ஒன்று வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

நட்புக்கு முக்கியத்துவம்; ரைட்ஸ் வாங்கி பயன்படுத்திய ஏ.ஆர்.ரகுமான் பாடல்! 

Published on 11/06/2024 | Edited on 11/06/2024
 nanban oruvan vantha piragu press meet 

புதுமுக இயக்குநர் ஆனந்த் இயக்கிய தமிழ்த் திரைப்படம் ‘நண்பன் ஒருவன் வந்த பிறகு’. படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் அனந்த் ராம், பவானி ஸ்ரீ ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.எச்.காஷிப் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்கில் வெளியாக உள்ளது. இப்படக்குழுவினர் சமீபத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தனர்.

அப்போது பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு சுவாரசியமான பதிலளித்தனர். இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்த முஸ்தபா பாடலை பயன்படுத்தியிருக்கிறீர்களே அதற்கு முறையாக ரைட்ஸ் வாங்கியிருக்கிறீர்களா? ஏன்னா இளையராஜா இப்பெல்லாம் ரைட்ஸ் கேட்கிறாரே அதற்காகத்தான் கேட்கிறோம் என்ற கேள்வியை முன் வைத்தனர்.

அதற்கு படக்குழுவினர், “முறையாக இசையமைப்பாளரை அணுகினோம். இந்தப் படத்தில் பயன்படுத்திய பாடல் அலை ஓசை ரெக்காட்ஸ் என்கிறவர்களிடம் இருந்தது. அவர்களிடமிருந்து ரைட்ஸ் வாங்கித்தான் பயன்படுத்தியுள்ளோம்” என்றனர். மேலும், இப்படத்தின் முக்கியமான இரண்டு பாடலை தனுஷ் மற்றும் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளனர் என்றார்கள்.

Next Story

 பிரபல இசையமைப்பாளரின் குரலில் வெளியான தனுஷ் படப் பாடல்

Published on 24/05/2024 | Edited on 24/05/2024
dhanush raayan second sinlge released

தனுஷ் தற்போது தனது 50 ஆவது படமான ராயன் படத்தை இயக்கி நடித்து முடித்துள்ளார். மேலும் ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற தலைப்பில் ஒரு படம் இயக்கி வருகிறார். ஹீரோவாக சேகர் கம்முலா இயக்கத்தில் குபேரா, அருண் மாதேஷ்வரன் இயக்கத்தில் இளையராஜா பயோ-பிக் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படம், இந்தியில் ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் ஏராளமான படங்கள் வைத்துள்ளார். 

இதில் ராயன் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தில் தனுஷோடு இணைந்து எஸ்.ஜே சூர்யா, செல்வராகவன், காளிதாஸ் ஜெயராம், சந்தீப் கிஷன், பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார், சரவணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் ஒவ்வொருவரின் கதாபாத்திர போஸ்டர்கள் முன்னதாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தைப் பெற்றது. இப்படம் ஜூன் 13ஆம் தேதி வெளியாகிறது. 

இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அடங்காத அசுரன்’ கடந்த 9ஆம் தேதி வெளியானது. இப்பாடலை தனுஷ் எழுதியிருக்க தனுஷ், ஏ.ஆர் ரஹ்மான் இருவரும் பாடியிருந்தனர். பிரபு தேவா நடனம் அமைத்துள்ளார். ஒரு திருவிழா பின்னணியில் ,அமைந்திருந்த இப்பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாடல்  ‘வாட்டர் பாக்கெட்’ தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை இசையமைப்பாளர் சந்தோஷ் நாரயணன் மற்றும் ஸ்வேதா மோகன் இணைந்து பாடியுள்ளனர். கானா கதிர் என்பவர் வரிகள் எழுதியுள்ளார். இந்தப் பாடல் சந்தீப் கிஷனுக்கும், அபர்ணா பாலமுரளிக்கும் இடையிலான காதலை விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது. மேலும் கானா காதல் பாடலாக வெளியாகியுள்ளது.