Skip to main content

'பிளே ஆப்' வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

Published on 24/10/2020 | Edited on 24/10/2020

'

ipl match chennai super kings vs mumbai indians team

 

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

 

ஷார்ஜாவில் நடந்த கிரிக்கெட் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இண்டியன்ஸ் அணி.

 

முதலில் பேட் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 114 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி தரப்பில் அதிகபட்சமாக சாம் கரன் 52, தோனி 16, இம்ரான் தாஹிர் 13 ரன்கள் எடுத்தனர். மும்பை இண்டியன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் போல்ட் 4, பும்ரா,சாஹர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

 

ipl match chennai super kings vs mumbai indians team

 

பின்னர் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய மும்பை இண்டியன்ஸ் அணி 12.2 ஒவரிலேயே விக்கெட் ஏதும் இழக்காமல் 116 ரன்கள் எடுத்து அபார வெற்றிபெற்றது. மும்பை இண்டியன்ஸ் அணியில் ஆட்டமிழக்காமல் இஷான் கிஷன் 68, டி காக் 46 ரன்கள் எடுத்தனர்.

 

11 ஆண்டு கால ஐ.பி.எல் வரலாற்றில் சென்னை வெளியேறியது இதுவே முதல்முறை. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 2 ஆண்டுகளைத் தவிர்த்து எல்லா ஆண்டுகளிலும் பிளே ஆப் சென்றிருந்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்பது குறிப்பிடத்தக்கது.