Skip to main content

புனேவிலும் சேவ் காவிரி, பேன் ஸ்டெர்லைட்- பரபரப்பை கிளப்பிய சி.எஸ்.கே ரசிகர்கள்.

Published on 21/04/2018 | Edited on 21/04/2018

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் எந்தவொரு போட்டியும்  காவிரி மேலாண்மை வாரியம் அமையும் வரை  நடைபெறக்கூடாது என்று அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்கள் போராட்டம் நடத்தியதால் வீரர்களின் பாதுகாப்பினை கருத்தில்கொண்டும் அடுத்த ஆட்டம் புனேவில் நடைபெற்றது. 

csk fans

 

இந்த ஆட்டத்தை தமிழக  ரசிகர்கள் காண  சென்னை  அணி நிர்வாகம்   சிறப்பு  ரயில் ஒன்றை கடந்த 19 ஆம் தேதி ஏற்பாடு செய்திருந்தது. அதில்   சுமார் ஆயிரம் நபர்களை தமிழகத்திலிருந்து புனேவிற்கு அனுப்பியது. நேற்றைய ஆட்டத்தில் சென்னை அணியை இங்கிருந்து  சென்ற  ரசிகர்கள்  உற்சாகப்படுத்தியது மட்டுமல்லாமல்  "சேவ் காவிரி , பேன்  ஸ்டெர்லைட்" என்ற  பதாகைகளை ஏந்தி தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். தற்போது அந்தப்புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது