Skip to main content

ஐபிஎல் ஏலம்: யுவராஜ் சாதனையை முறியடித்த தென் ஆப்பிரிக்க வீரர்!

Published on 18/02/2021 | Edited on 18/02/2021

 

morris

 

இந்தியாவில் வருடந்தோறும் நடக்கும் ஐபிஎல் தொடருக்கான ஏலம், இன்று நடைபெற்று வருகிறது. மொத்தம் 292 வீரர்கள் இன்று ஏலம் விடப்படவுள்ளனர். இந்த ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் ஏலம் எடுக்கப்படவில்லை. கேதார் ஜாதாவையும் எந்த அணியும் முதல் கட்ட ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை.

 

ஸ்டீவ் ஸ்மித்தை டெல்லி கேபிட்டல்ஸ் அணி 2.2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. மேக்ஸ்வேல் 14.25 கோடிக்கு பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். ஷகிப் அல் ஹசனை 3.20 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலம் எடுத்துள்ளது. மொயின் அலியை சென்னை அணி 7 கோடிக்கு வாங்கியுள்ளது. ஷிவம் துபேவை 4.4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது.

 

கிறிஸ் மோரிஸ்சை ராஜஸ்தான் ராயல்ஸ், 16.25 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விலைக்கு ஏலம்போன வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதுவரை அந்தச் சாதனை யுவராஜ் சிங்கிடம் இருந்துவந்தது குறிப்பிடத்தக்கது.