Skip to main content

போட்டியில் தோற்றது மட்டுமில்லாமல் அபராதமும் கட்டும் இந்தியா!

Published on 28/11/2020 | Edited on 28/11/2020

 

ind vs aus

 

 

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி சிட்னியில் நேற்று நடைபெற்றது. அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனையடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது.

 

இப்போட்டியின் போது, இந்திய வீரர்கள் நிர்ணயிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் பந்துவீச எடுத்துக்கொண்டதால், இந்திய வீரர்களுக்கு போட்டிக்கான ஊதியத்திலிருந்து 20% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

இரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை சிட்னியில் நடைபெற உள்ளது.