Skip to main content

சென்னை - கொல்கத்தா இடையே இன்று பலப்பரீட்சை! - ஐபிஎல் போட்டி #5

Published on 10/04/2018 | Edited on 10/04/2018

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் ஐந்தாவது போட்டி இன்று சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் தொடங்குகிறது. இரவு 8 மணிக்கு தொடங்க இருக்கும் இந்தப் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. 

 

 

இந்த இரண்டு அணிகளும் தற்போது வரை தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றுள்ளன. ஆனால், சென்னை அணியின் வெற்றி மிகுந்த நெருக்கடியான சூழலில் கிடைத்தது என்பதாலும், கொல்கத்தா அணியின் பலமான பந்துவீச்சுக்கு ஈடு கொடுக்கும் விதமாக சென்னை அணி செயல்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

பெங்களூரு அணியுடனான போட்டியில், கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் 17 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். அதேசமயம், ஆல்ரவுண்டர் நிதீஷ் ராணாவின் ஆட்டமும் அன்றைய போட்டியின் போக்கை மாற்றும் விதமாக அமைந்தது. அதேபோல், அனுபவம் வாய்ந்த வீரர்களை சென்னை அணி கொண்டிருந்தாலும், முதல் போட்டி மிகுந்த ஏமாற்றத்தையே ஏற்படுத்தியது. 

 

எனவே, சென்னை அணி அதன் அனுபவம் மற்றும் ஆக்ரோஷத்தை சொந்த மண்ணான சேப்பாக்கத்தில் காட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.