Skip to main content

சென்னை அணிக்கு கூடுதல் பின்னடைவு!

Published on 21/10/2020 | Edited on 21/10/2020

 

bravo

 

 

சென்னை அணியின் முன்னணி வீரரான பிராவோ காயம் காரணமாக விலகியுள்ளது, சென்னை அணிக்கு கூடுதல் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

 

அமீரகத்தில் நடைபெற்று வரும் 13-வது ஐபிஎல் தொடரில் தோனி தலைமையிலான சென்னை அணி தொடர் தோல்விகளால் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, 3 வெற்றிகள், 7 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இனி எஞ்சியுள்ள 4 போட்டிகளில் வென்றாலும், பிற அணிகளின் வெற்றி, தோல்விகளை அடிப்படியாக வைத்தே சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு தீர்மானிக்கப்படும். தரவரிசைப்பட்டியலில் முன்னணியில் உள்ள பிற அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் சென்னை அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு ஏறக்குறைய முடிந்துவிட்டது என்றே கிரிக்கெட் வல்லுநர்களால் கணிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில், டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது இடுப்புப் பகுதியில் காயம் ஏற்பட்டு பாதியில் வெளியேறிய பிராவோ, மீண்டும் களமிறங்கவில்லை. தற்போது நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து பிராவோ முழுமையாக விலகியுள்ளதாக சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.